search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப் பணிகளை கூடுதல்  தலைமை செயலாளர் ஆய்வு
    X

    திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×