சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மை பணி

சாயர்புரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது. புளிய நகர் விநாயகர் கோவில் குளக்கரைகளில் குப்பைகள் அகற்றப்பட்டது.
விநாயகர் கோவில் குளக்கரையில் தூய்மை பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
விநாயகர் கோவில் குளக்கரையில் தூய்மை பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10- வது வார்டு புளிய நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது. சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புளிய நகர் விநாயகர் கோவில் குளக் கரைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மரகன்றுகள் நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் புளிய நகர் ஊர் கமிட்டி தலைவர் அறவாழி, ஞானராஜ், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், நந்தகோபால புரம் பரமசிவன், புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், சாயர்புரம் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com