search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன்"

    • இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே சரல்விளை ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் நாகர்பிள்ளை வயது (72).

    இவர் ஆற்றூர் சந்திப்பில் இருந்து திருவட்டார் நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மினி டெம்போ மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த நாகர்பிள்ளையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பிறகு அவர், மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகள் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கலியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மினி டெம்போ டிரைவர் ஆல்பின்(50) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது.
    • 2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலையில் உள்ள 63 வேலம்பாளையம் பகுதியில் இன்று காலை பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.

    அதன்பிறகு போக்குவரத்து சீரானது. 

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
    • மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் குமாரதாஸ் வரவேற்று பேசினார். துணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் தாசீம், கில்லேரியன் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் அனீபா, சிசிலி, ஜெகன், ரமேஷ்பாபு, வெள்ளிச்சந்தை சரவணன், பெலிக்ஸ்ராஜன், ஆனக்குழி சதீஷ், ஆன்றனி, சுபல், தேவிசக்தி, சகாயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை யில் நடக்கும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு குளச்சலில் இருந்து 5 வேன்களில் 100-க்கும் மேற்பட்டோர் செல்வது, மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ராஜ்ய சபாவில் வலியுறுத்தி பேசிய தம்பித்துரை எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது நன்றி கூறினார்.

    • கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.
    • அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் ஆகியது. கார் ஓட்டுநர் , சரக்கு வேன் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.

    அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×