search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barricade"

    பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.
    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள காந்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பிரபுகுமார். இவரது மகன் அபிஷேக் (வயது 30).  இவர் இன்று அதிகாலை திண்டிவனம்-புதுவை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்கூத்த ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. 

    இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    • மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

    • ராஜலிங்கம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள கோவில்விளை அண்ணாநகரை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் ராஜலிங்கம்(வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கார்த்தி(25). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கார்த்தியும், ராஜலிங்கமும் காவல்கிணறு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டி வந்த நிலையில், பணகுடி நெருஞ்சிகாலனியில் நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜலிங்கம் தூக்கி வீசப்பட்டார். தலையில் அவருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கார்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜலிங்கம் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
    • விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு் உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்த வந்த அதனை தடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அதி வேகமாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் வரும் போது வேகத்தை குறித்து சென்று வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலைநில் தற்போது திடிரென்று தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த மீண்டும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் சாலை தடுப்புகளை அமைத்து விபத்து பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர்.
    • .இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம்நடுக்கா ட்டுபாளையத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர். இதனால் அதே ஊராட்சியைசேர்ந்த மேல்காட்டுபாளையத்திற்கு எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். இதில்உடன்பாடு ஏற்பட்டு மேல் காட்டுபாளையத்திற்கு

    செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது . இந்த வழி மட்டும் போதாது கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு ள்ள தடுப்பு வேலிகளை முழுமை யாக அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வந்தனர்  இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தொடர்ந்து இன்று காலை நடுக்காட்டு பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் பெண்கள், இளைஞர்கள், பண்ருட்டி வருவாய் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் பொதுமக்கள் பண்ருட்டிதலைமை இடத்து துணை தாசில்தார் கிருஷ்ணாவிடம் மனு கொடுத்தனர். தாசில்தார் அவசர வேலையாக வெளியில்சென்றுள்ளார். அவர்வந்தவுடன் 5 பேர் மட்டும் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடுக்காட்டு பாளையம் கிராம மக்கள் கலைந்து சென்றனர் .இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

    • 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலசபாக்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் நீர் செய்யாற்றில் செங்கம், காஞ்சி, கடலாடி, மாதிமங்கலம், எலத்தூர், பழங்கோவில், பூண்டி கலசபாக்கம், போளூர், ஆரணி வழியாக செல்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதன்படி முதல் கட்டமாக கலசபாக்கம் அருகே ஆணைவாடி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டன. இதன் மூலம் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன.

    இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து வருகின்றனர்.தற்போது மழை நின்ற காரணத்தால் தடுப்பனையில் சுமார் 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த தண்ணீரை மர்ம நபர்கள் மணல் கொள்ளை அடிப்பதற்காகவும் மற்றும் மீன்பிடிப்பதற்காகவும் இரவில் தடுப்பணையில் உள்ள ஷட்டரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குறைந்து தற்போது 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது சம்பந்தமாக விவசாயிகள் கலசபாக்கம் தாசில்தார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    • அமைச்சர் ஆர்.காந்தி பணியை தொடங்கி வைத்தார்
    • 1,345 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளி லிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க பெறும்.

    மேலும் விவசாய கிணறுகள், மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் மீன் மார்க்கெட் வீதியில் வசிப்பவர் ஜனார்த்தனன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 28). இன்று அதிகாலை தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். நண்பரை இறக்கி விட்டு வீடு திரும்பினார். அப்போது பனி ப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் குச்சிப்பாளையம் அருகேமோட்டார் சைக்கிளில் வந்தபோது சாலையோரமிருந்த குடிநீர் குழாய் கட்டையில் மோதினார். இதில் மார்புப் பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் கல்லூரியில் படித்து வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் கல்லல் அருகே உள்ள ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட பொது மக்கள் நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந்தேதி காலை அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உச்ச அளவாகஆற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை துவங்கியதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.உடனடியாக, அணைக்குள் வரும் நீர் அனைத்தும் உபரியாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணை நீர்மட்டம் 88.65 அடியாகவும், நீர் இருப்பு, 3,924.72 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த, 15ந் தேதி, அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்படுவதால், ஆயக்கட்டு நிலங்களில், சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. வரும் நீர் அனைத்தும், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.

    அமராவதி அணையிலிருந்து மழைக்காலத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்த, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால், முப்போக நெல் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    கோடை காலத்திலும் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மழை சீசனிலும், அணையிலிருந்து பல டி.எம்.சி., தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.இதே போல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மண் கால்வாய் வழியாகவே பாசன நீர் செல்கிறது.

    இந்த கால்வாய்களை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தினால், அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக செல்லும்.அனைத்து வகை சாகுபடியும் செழிக்கும். இது குறித்தும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் தொடர் கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

    • சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.

    ×