search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடியில் தடுப்பணை
    X

    பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடியில் தடுப்பணை

    • அமைச்சர் ஆர்.காந்தி பணியை தொடங்கி வைத்தார்
    • 1,345 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளி லிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க பெறும்.

    மேலும் விவசாய கிணறுகள், மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×