search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellakovil"

    • வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனையடுத்து ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.வெங்கடசுப்பு, செயலாளராக ஆர்.அருண்குமார், பொருளாளராக கே. ரத்தினசாமி என்கிற மணிவேல், துணைத்தலைவராக வீ.சி.சுவாமிநாதன், நிர்வாக செயலாளராக ராசி கே.ஆர் சின்னசாமி மற்றும் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

    பதவியேற்பின் போது தலைவர் ஆர்.வெங்கடசுப்பு கூறியதாவது:- கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் பகுதியில் கண் சிகிச்சை முகாம், பொது நல மருத்துவ முகாம், செயற்கை கால் வழங்கும் முகாம் மற்றும் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்சக்தி என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான மின்மயானத்தை ரோட்டரி சார்பில் நவீனப்படுத்தி செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி .கோபாலகிருஷ்ணன், என் .மணிமாறன், எம்.பிரேம்குமார், டி.கே. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் சங்க முன்னாள் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எஸ்.ரகுநாதன், செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஏ.மகாதேவன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    • 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நிழற்குடையில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் பெயர் விலாசம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.20 - 35 கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 50 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 25 க்கும், மரம் முருங்கை ரூ.20க்கும், கரும்பு முருங்கை ரூ. 35க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்,இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • ஒரு கிலோ முருங்கை ரூ.15முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 65 விவசாயிகள் 15டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • ரூ.15முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 65 விவசாயிகள் 15டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
    • பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார்.

    வெள்ளகோவில் :

    கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது வெள்ளகோவில் எம்.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 45) என்பவர் குடிபோதையில் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மின் பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை செய்யப்படும் இடங்கள்: ஊதியூா் துணை மின் நிலையம் - வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் - அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின் தடை செய்யப்படும் இடங்கள்: ராசாத்தாவலசு துணை மின் நிலையம் - மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின் நிலையம் - வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாய்க்கன்பட்டி துணை மின் நிலையம் - தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம். 

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
    • புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் இருந்து உப்புபாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் ரோட்டில் ஒரு வளைவில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் அபாயகரமான வளைவு மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிப்பு பலகை இல்லாமல் அதற்காக அமைக்கப்பட்ட கம்பம் மட்டும் உள்ளது, பலகை காற்றில் பறந்து விட்டதா இல்லை யாராவது எடுத்துச்சென்று விட்டார்களா தெரியவி ல்லை, பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு பலகை வைக்காமல் இருப்பதால் புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது.
    • அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையின் ஒரத்தில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது. இந்த வழியாக அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதனை தவிரவும் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் வரும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருவது என்று எப்போதும் பரபரப்பாக இந்த ரோடு காணப்படும்.

    பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் விநாயகர் கோவில் அருகே சதுர வடிவில் ஒரு அடி பள்ளம் உள்ளது. ரோட்டின் காணப்படுவாதல் இருசக்கர மற்றும் கார்களில் வருபவர்களுக்கு தூரத்தில் தெரிவதில்லை. மிக அருகில் வரும்பொழுது தான் தெரிகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன. அதிகளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வரும் போது இதில் சீக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர். இது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 70 ஆயிரத்து 924கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.35க்கும், குறைந்தபட்சம் ரூ.60.40க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். நேற்று செவ்வாய்கிழமை 157விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 924கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.35க்கும், குறைந்தபட்சம் ரூ.60.40க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்த ரூ.50லட்சத்து 37ஆயிரத்து 339க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்தநிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்களின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவன விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர். இச்செயலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டினர்.

    • 130 விவசாயிகள் கலந்து கொண்டு 68 ஆயிரத்து 40கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ரூ.55லட்சத்து 59ஆயிரத்து 909க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று செவ்வாய்கிழமை 130 விவசாயிகள் கலந்து கொண்டு 68 ஆயிரத்து 40கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 85.25க்கும், குறைந்தபட்சம் ரூ.68க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று முன் தினம் மொத்த ரூ.55லட்சத்து 59ஆயிரத்து 909க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×