என் மலர்

    நீங்கள் தேடியது "motorists"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரை சாலையின் இரு புறமும் ஊராட்சி காலத்தில் வடிகால்கள் இருந்தது.
    • குறிப்பாக ஸ்பிக்-பாரதி நகர் சந்திப்பில் தொடர் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரை சாலையின் இரு புறமும் ஊராட்சி காலத்தில் வடிகால்கள் இருந்தது. மாநகராட்சியான பின் சாலை விரி வாக்கத்தின் போது அகற்றப்பட்டது, மீண்டும் வடிகால் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது. இது போல் துறைமுகம் மற்றும் உப்பளங்களில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து சிந்தும் நிலக்கரி, பருப்பு,உப்பு,மணல், சாம்பல் உள்ளிட்ட கிடங்குகளுக்கு செல்லக்கூடிய பொருட்கள் என அனைத்தும் சாலையில் சிந்தி கொட்டி கிடக்கிறது.

    இதனால் வாகனங்கள் செல்லும் போது புகை மண்டலம் ஏற்பட்டு மக்கள் கண் பார்வை பாதிப்பு, சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சாலையின் கீழே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்கள் தொடர்ந்து உடைந்து வருவதின் காரணமாக கிடங்குகள் ஏற்பட்டு வாகனத்தில் வருபவர்கள் அதில் விழுந்து விபத்துகள் நிகழ்ந்து வருகிறது.

    குறிப்பாக ஸ்பிக்-பாரதி நகர் சந்திப்பில் தொடர் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 43 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதி பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் சாலை முழுவதும் பேரிகாடுகளால் நிரம்பி இருக்கிறது, முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு ஒரே இடத்தில் 6 பேரிக்காடுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப் பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்து போலீசார் ஆத்துப்பாலம் பகுதியில் சிக்னல் முறையை அப்புறப்படுத்தி ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர்.
    • இந்த அறிவிப்பினை ஒரு போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் நின்று கொண்டு அறிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

    குனியமுத்தூர்.

    கோவை உக்கடத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து போலீசார் ஆத்துப்பாலம் பகுதியில் சிக்னல் முறையை அப்புறப்படுத்தி ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர்.

    இதனால் வாகனங்கள் நெரிசலில் இருந்து தப்பி சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆத்துப்பாலத்தை தாண்டி கரும்பு கடையில் மட்டும் வாகனங்கள் சிக்கி விடுகிறது. ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றாத காரணத்தால் குறுகிய சாலையில் அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு பயணிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஏனெனில் மிகவும் குறுகலான பகுதியில் அத்தனை வாகனங்களும் ஒரே நேரத்தில் கடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    அமலும் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களை போக்குவரத்து நெரிசலில் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் அங்கே நின்று கொண்டு சாலையின் இடதுபுரத்தில் இருசக்கர வாகனங்களை அனுப்பி வருகின்றனர். அதுவும் மைக்கில் சத்தமாக இரு சக்கர வாகனங்கள் இடதுபுரத்தில் வாங்க என்று கூவி கூவி அழைப்பார்கள். இருசக்கர வாகனங்கள் இடது புறமாக சென்று திரும்பி வலது புறம் வரும்போது அதே சாலையை தொட்டுவிடும். இதனால் சற்று வாகன நெரிசலை தவிர்க்கலாம். இந்த அறிவிப்பினை ஒரு போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் நின்று கொண்டு அறிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

    இருசக்கர வாகனம் சாலையின் இடது புறமாக வாங்க...என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருப்பார். ஆனால் அதே சத்தம் துரதிஷ்டவசமாக சாலையின் எதிர்முனையில் வரும் வாகனங்களும் கேட்கப்படும். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் அதே குரலைக் கேட்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. ஒருவேளை அவர்கள் அந்த குரலைக் கேட்டு இடதுபுறம் திரும்பி விட்டால் கரும்பு கடை ஊருக்குள் சென்று விடும். இது மீண்டும் குழப்பத்தை உருவாக்கும்.

    எனவே மைக்கில் அறிவிப்பு செய்யும் போலீசார்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடதுபுறம் வாங்க என்று சரியாக கூற வேண்டும். அவ்வாறு கூறினால், சாலையின் இரு புறமும் பயணித்துக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படாது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- இது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. ஆனால் மைக்கில் அறிவிப்பு தரும் போலீசார் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடது புறம் வாருங்கள் என்று முறையாக கூறினால் குழப்பம் ஏற்படாது. இல்லையென்றால் எதிர்முனையில் உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் குழப்பம் ஏற்பட்டு கரும்பு கடை ஊருக்குள் சென்று விடும். எனவே அறிவிப்பு தரும் போலீசார் சரியாக அறிவிப்பு செய்தால் யாவருக்கும் குழப்பமில்லாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீர்காழியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
    • விபத்தை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சென்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது.

    இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.

    வாகன ஓட்டிகள் அவதி பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

    மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.

    புகையான் நோய் தாக்கம் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார்.
    • இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சி சவுக்கை மூக்கு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார். தென்காசி கேன்சர் சென்டர் இயக்கு னரும், அடையாறு கேன்சர் சென்டர் முன்னாள் தலைமை மருத்துவருமான அருணா சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.


    விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டுனர்களிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பான், குட்கா, புகையிலை, சிகரெட் ஆகிய பொருட்களை புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து வாங்கப்பட்டது.

    மேலும் புற்று நோயால் ஒரு தனி நபரின் வாழ்க்கையும், அவரது குடும்பத்தின் நிலைமையும் எவ்வாறு பாதிப்படையும் என கூறப்பட்டது. வாகன ஓட்டுனர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி- சர்ட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தென்காசி கேன்சர் சென்டர் சார்பாக வழங்கப்பட்டது.

    அனைத்து வாகன ஓட்டு னர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    இதில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவசந்திரன், தென்காசி மெடிக்கல் சென்டர் இயக்குனர் பாரதிராஜா, பொது மேலாளர் அகமது பாத்திமா, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் மாரியப்பன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா பாண்டியன், அ.ம.மு.க. பிரமுகர் சுப்பிரமணியன் என்ற சுப்பு பாண்டியன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் , ஆசிரியர்கள் சுரேஷ் ,சங்கர், என்.சி.சி. ஆசிரியர் செந்தில் பாபு , என்.எஸ்.எஸ். ஆசிரியர் குத்தாலம் மற்றும் குற்றாலம் காவல்துறை, தென்காசி போக்குவரத்து துறை, காவல் துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனை மருத்து வர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது
    • இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதன் வழியாக பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், உகாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த மாதத்தில் ரோட்டில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு கீறல் போடப்பட்டது. புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரோட்டில் கீறல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    விரைவில் ரோடு போடப்படும் என ரோட்டில் கீறல் போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் ரோடு போடும் பணிகள் துவங்கவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ரோட்டை விரைவாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்த பணியாளர்கள் பொங்கல் விடுமுறைக்கு சென்றதால் ரோடு போடும் பணிகள் தாமதமானதாகவும், விரைவில் பணி துவங்கும் என தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாவூர்சத்திரம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர். பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் கூடுதலாக தண்ணீரை தெளித்து சாலை அமைக்கவும், தென்காசியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெறும் சாலை பணியில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், சாலை பணி நடைபெறுவதை குறிக்கும் எச்சரிக்கை பலகையும் பயன்படுத்தப்படவில்லை. எனவே அவைகளை முறையாக அமைத்து வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லை எனில் பாவூர்சத்திரம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன.

    போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.

    மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை.

    இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
    • வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
    • புதிதாக சாலை போட்ட பின்பு அதனை‌ தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

    வீரபாண்டி : 

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையத்தில் இருந்து கோவில் வழி செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். பலஆண்டுகளாக மோசமாக இருந்த சாலை கடந்த 5மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அந்த நிம்மதி நிரந்தரமாக நீடிக்கவில்லை.

    தற்பொழுது அந்த பகுதிகளில் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    பலவஞ்சிபாளையத்திலிருந்து கோவில்வழி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிக மிக மோசமாக இருந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை போடப்பட்டது. தற்பொழுது குடிநீர் குழாய் பாதிப்பிற்காக தோண்டப்பட்டு இருக்கிறது.

    பல இடங்களில் இப்படித்தான் பணியை மேற்கொள்கின்றனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணியை முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக சாலை போட்ட பின்பு அதனை‌ தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது உரிய முறையில் கவனம் செலுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print