என் மலர்
நீங்கள் தேடியது "Motorists"
- சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- நடைபாதை சிமெண்டு சிலாப்புகளும் உடைந்து போய் கிடக்கிறது.
எம்.ஜி.ரோடு:
பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுபோன்ற சாலைகளை சரி செய்யாமல் மாநகராட்சி இருந்து வருகிறது. தார் சாலை அமைப்பதால், மழை உள்ளிட்ட காரணங்களால் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வருவதால், மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அந்த கான்கிரீட் சாலைகளும் குண்டும், குழியுமாக மாறிவருகிறது. அதுபோல், எம்.ஜி.ரோடு அருகே உள்ள கருடாமால் ரோடும், கான்கிரீட் சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கான்கிரீட் சாலையும் தற்போது மோசமாக மாறி உள்ளது.
அந்த சாலை தற்போது கரடு, முரடாகவும், ஜல்லி கற்களாகவும், குழியாகவும் மாறிபோய் உள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அவ்வாறு இல்லை. அந்த சாலை முழுவதுமே ஜல்லி கற்களாகவும், குழிகள் விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் விதமாக அபாயகரமாகவும் காணப்படுகிறது.
அந்த சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவது நிச்சயம்.
சாலையோரம் போடப்பட்டுள்ள நடைபாதை சிமெண்டு சிலாப்புகளும் உடைந்து போய் கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் நடந்து கூட செல்ல முடியவில்லை.
சில வளர்ச்சி பணிகளுக்காக கான்கிரீட் ரோட்டில் குழிகள் தோண்டியதால், இவ்வாறு மாறி இருப்பதாகவும், இதை சீரமைக்க மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஜல்லி கற்களாக காட்சி அளிக்கும் கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
- ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசா ணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் புதிய போக்கு வரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார் கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேக மாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் .
அதே நேரத்தில் அதி வேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளி டம் எடுத்துக் கூறப்பட்டது.
உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப் படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பாது காப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங் களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீசார் கூறுகையில் 'போக்குவரத்து விதிமுறை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகளை சோதனைச்சாவடிகளில் பிடித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் இன்னமும் புதிய கட்டணப்படி யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்து விரிவான அறிவுறுத்தல் வந்த பின் அறிவிப்பு வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.விதிமுறை பின்பற்றினால் அபராதம் குறித்த அச்சம் வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லை என்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர்.
நெல்லை:
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீ சார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
இன்றும் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பேட்டை காட்சி மண்டபம், டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற வர்களை கண்காணி த்தனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக் கொண்டு சென்றவர்களை பிடித்து எச்சரிக்கை செய்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும், இனி இதுபோன்று வந்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர். ஒரு சில இடங்களில் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை சரிபார்த்தனர். மேலும் வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர். மது குடித்து சென்றவர்களுக்கு புதிய சட்டத்தின்படி 10 மடங்கு அபராதம் வசூலித்தனர்.
- தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
- நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.
உடுமலை:
உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
- தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
நாம் பயன்படுத்தும் சொந்த வாகனம் அல்லது பொதுத்துறை மற்றும் பயணிகள் வாகனம் என்று எதுவாக இருந்தாலும், அந்த வாகனத்துக்குபுகைச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியம்.புதுடெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது. அதனால் அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு புகைச்சான்று அவசியம். புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.
புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.பிற மாநிலங்களிலும், இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் புகைச்சான்றும், இன்சூரன்சும் அவசியம் வைத்திருக்க வேண்டும். தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புகைச்சான்றும், இன்சூரன்சும் காலாவதியாகி இருந்து, அப்போது வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த வாகனத்தை இயக்கியவர், உடன் பயணித்தவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இன்சூரன்ஸ் பணப்பலன்கள் போய் சேராது. அதை கேட்டும் பெற முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்கின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்.
இதுகுறித்து திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின், இப்புதிய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பணப்பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.இதுதொடர்பான வழக்கையும் தொடர முடியாது. அதனால், வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்றை சோதித்து பெற்று வைத்திருப்பது அவசியம் என்றனர். இந்த உத்தரவு திருப்பூர் உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
- தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
பல்லடம் :
பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
- குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைப்பது எப்போது? என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை
கோவில் மாநகரம், தூங்கா நகரம், கூடல் மாநகர் என்றழைக்கப்படும் மாமதுரையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள ரோடுகள் சீரான போக்குவரத்திற்கு வழியின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மதுரையில் மழை காரணமாக முக்கிய சாலைகள், ரோடுகள் மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கி றது.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளி லும் ரோடுகள் மற்றும் வீதிகளில் பொதுமக்கள் வாக னங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களை மிரட்டி வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். மதுரை மற்றும் விரி வாக்கப் பகுதி யில் உள்ள சேதமடைந்த சாலைகளை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீப நாட்களாக போலீசாரின் வாகன சோதனை மற்றும் கெடுபிடிகள் மதுரையில் அதிகரித்துள்ளன. மதுரை நகர் பகுதிகளை பொறுத்தவரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, காளவாசல், பழங்காநத்தம், புதூர், தெப்பக்குளம், தெற்கு வாசல், வில்லாபுரம், செல்லூர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் வாகன நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
இந்த பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க முடியும். ஆனாலும் இந்த பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரோடுகளில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை சுற்றி வளைத்து அபராதம் போடுவதை பெரிய சாதனையாக நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு வழியின்றி கிடக்கும் நிலையில் கூட அதன் அருகே நின்று வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிப்பதை முக்கிய கடமையாக எண்ணி போலீசார் பணி செய்து வருகிறார்கள். இதனால் போலீசாரின் அபராத ஜாக்பாட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். அதிவேகம் மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் சாரை, சாரையாக இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்து அபராதங்களை விதிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 11 மாதத்தில் மட்டும் மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 338 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 831 பேர் அதிவேகமாக சென்றதாக வும், 1,407 பேர் குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதாகவும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரையின் முக்கிய சாலையான நேதாஜி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.
7 ஆயிரத்து 71 பேர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாகவும், 4 ஆயிரத்து 960 பேர் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 15 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி மற்றும் தியாகி இமானுவேல்சேகரன், மருது பாண்டியர், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்ற வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 69 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை மதுரையில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சம் அபராத தொகையாக வசூலித்து மதுரை போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
ஆனால் மதுரையில் போக்குவரத்திற்கு தகுதி யான சாலைகள் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் டி.பி.கே. ரோடு மற்றும் மேலவாசல் பகுதியில் கூட சாலைகளில் படுகுழிகளாக மோசமாக காணப்படுகிறது.
இது தவிர பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலை பள்ளங்களில் மண்ணை கொட்டி நிரப்பாமல் உரிய தார், ஜல்லி கலவைகளை போட்டு சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளமான இடங்களில் மண்ணைக் கொட்டி செல்வதால் வெயில் காலங்களில் அந்த பகுதி முழுவதும் தூசி மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளை பல்வேறு சிர மத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
எனவே தரமான சாலைகளை முதலில் அமைத்து கொடுத்துவிட்டு சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அபராத வசூல் நடவடிக்கைகளை போலீசார் இறங்கலாம் என்பதும் மதுரை மக்களின் கருத்தாக உள்ளது.
எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து தரமான சாலைகளை அமைத்துக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
- திருவிழா சமயங்களில் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
- தானியங்கி சிக்னலை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரம் சேலம் கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மெயின்ரோட்டில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவில் அதையொட்டி நான்கு ரத வீதிகளில் 10 திருமண மண்டபங்கள், போலீஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் , சார்பதிவாளர் அலுவலகம், தபால் அலுவலகம் ,ஜவுளி, நகை கடைகள், அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஓட்டல்கள், பூக்கடைகள், பழக்கடைகள், ஸ்டேசனரி உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளது. அவினாசி நகரில் இருந்து ஈரோடு சேலம், சென்னை, பெங்களூரு, கோவை மேட்டுப்பாளையம், கூடலூர், ஊட்டி,குன்னூர் கோத்தகிரி, சத்தியமங்கலம், புளியம்படி, கோபி, மை சூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினசரி டிராவல்ஸ், லாரி,கார், தனியார் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் அவினாசிக்கு மிக அருகில் பனியன் நகரமான திருப்பூர் மற்றும் நியூ திருப்பூர் உள்ளது. இங்குள்ள பனியன் கம்பெனி மற்றும் பனியன் சார்ந்த தொழில்கூடங்களுக்கு தனியார் கம்பெனி பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோடு வழியாகத்தான் கடந்தாகவேண்டும். முகூர்த்த நாட்கள்,திருவிழா சமயங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதேபோல் ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பிலும் எப்போதும்போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து அவினாசி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அசுரவேகத்தில் வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோடு சந்திப்பு, ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில்தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வந்தது. ஆனால் அவைகள் இரண்டும் பழுதடைந்து பல வருடங்களாக கவனிப்பாரற்று கிடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகளும் தாறுமாறாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேரிடுகிறது .எனவே போக்குவரத்தை சீர்படுத்த இரண்டு இடங்களிலும் உள்ள தானியங்கி சிக்னலை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வாகன ஒட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
,
- ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
- பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இன்று காலை 8.00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.
இந்த பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். ஊட்டியில் இருப்பது போல குளிர்ச்சியான நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட் டனர். இதேபோல் செஞ்சி பகுதியிலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
- சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி 54வது வார்டு கிருஷ்ணா நகர் ஏக்டென்ஷன் வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதி சாலை மிகவும் சிதலமடைந்துள்ளது.
சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
- புதிதாக சாலை போட்ட பின்பு அதனை தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையத்தில் இருந்து கோவில் வழி செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். பலஆண்டுகளாக மோசமாக இருந்த சாலை கடந்த 5மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அந்த நிம்மதி நிரந்தரமாக நீடிக்கவில்லை.
தற்பொழுது அந்த பகுதிகளில் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
பலவஞ்சிபாளையத்திலிருந்து கோவில்வழி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிக மிக மோசமாக இருந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை போடப்பட்டது. தற்பொழுது குடிநீர் குழாய் பாதிப்பிற்காக தோண்டப்பட்டு இருக்கிறது.
பல இடங்களில் இப்படித்தான் பணியை மேற்கொள்கின்றனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணியை முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக சாலை போட்ட பின்பு அதனை தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது உரிய முறையில் கவனம் செலுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
- வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.