search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Concrete Road"

    • 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரிய கோட்டை முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன் , பெரிய கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் இளம்பிறை சாதிக், செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி அங்குள்ள லட்சுமி நகரில் ரூ.6லட்சத்து66 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி( பல்லடம்), வக்கீல் குமார் (பொங்கலூர்), பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×