search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repair"

    • பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.
    • கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் போல் இருக்கிறது.

    கீழ் தளங்களில் உள்ள வீடுகளை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

    வெள்ளம் வடிந்த பின்னர் தங்களது வீடுகளை போய் பார்த்த மக்கள் சேதமான பொருட்களை கண்டு கண்ணீர்விட்டனர். சேதம் அடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கட்டில் மெத்தைகளை எப்படி வாங்கப் போகிறோம் என நினைத்து பொதுமக்கள் வேதனையில் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வீடுகளின் அருகில் மேடான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி கடுமையான சேதம் அடைந்து உள்ளன. இவைகளை பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு பழுதாகியுள்ள டி.வி., வாஷிங் மிஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களாலும் கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

    மாதச் சம்பளத்தில் குடும்பம் நடத்துவோர் ஏற்கனவே இ.எம்.ஐ. தவணை தொகையால் பார்த்து பார்த்து செலவழித்து வரும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டு உள்ள இந்த திடீர் செலவு அவர்களது கழுத்தை நெரிப்பதாகவே மாறி இருக்கிறது.

    சென்னையில் கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி திருநின்றவூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயபால் கூறும்போது, "கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த நிலையில் எனது வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரமாவது செலவு வைத்துவிடும். வேறு வழியின்றி பழுது நீக்க எடுத்து வந்திருக்கிறேன்" என்றார்.

    கொரட்டூரைச் சேர்ந்த வாகன பழுது நீக்கும் கடை உரிமையாளர் எம்.கோபால கிருஷ்ணன் கூறும்போது, 'பழுதான ஒரு வாகனத்தை சரி செய்ய குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேலாகும். மேலும் என்ஜின் பழுதடைந்து இருந்தால், ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்' என்றார்.

    தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும் போது, ஆட்டோவுக்குள் நீர் புகுந்தால் சரிசெய்ய ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். அதேநேரம் ஒரு வாரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இவற்றை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஜாகிர் ஹூசேன் கூறும்போது, 'கார்களை பொறுத்தவரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். வெள்ளத்தில் சிக்கினால் காப்பீடு கிடையாது என பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே அரசு உதவ வேண்டும்' என்றார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

    இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

    அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

    உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

    குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வலுவிழந்து ஆபத்தான நிலையில் திருச்சி கோட்டை ரெயில்வே மேம்பாலம் உள்ளது
    • டெண்டர் முடிந்த நிலையில் பணிகள் தொடங்குவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது

    திருச்சி, 

    திருச்சி மாநகர போக்குவரத்தில் பிரதான இடம் வகிப்பது, கோட்டை ரெயில்வே மேம்பாலம். திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியையும், தில்லைநகர், உறையூர், தென்னூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. திருச்சி - கரூர் ரெயில்வே மார்க்கத்தின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 157 வருட பழமையான இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 மழையின் போது பக்கவாட்டு மண் சரிந்து பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்றது. ரூ.2.90 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த பாலம் மிகவும் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பாலத்தின் தூண்களும், பக்கவாட்டு சுவர்களும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்து காணப்படுகிறது. கனரக வாகனத்தின் பளு தாங்காமல் பாலத்தின் மீது உள்ள சாலைகளும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ரெயில்வே நிர்வாகம், இந்த பாலத்தின் மீது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து ரூ.44 கோடி ரூபாய் செலவில் பாலத்தை புதிதாக கட்டுவதற்கு கடந்த 2022-23 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 50 சதவீதம் மாநகராட்சி, 50 சதவீதம் ரெயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தது.

    இதற்கான டெண்டரும் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஏனோ பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் கேட்டபோது, மாநகராட்சி இதற்கான முன்னெடுப்பு செய்யும் பொழுது அதற்கான முழு ஒத்துழைப்பும் தர நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி வட்டார அதிகாரிகள் கூறும்போது, டெண்டர் விடப்பட்டு அனைத்து அலுவலக பணிகளும் முடிந்து விட்டது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் பாலப்பணிகள் தொடங்கும் என்று மட்டும் தெரிவித்தனர்.

    வலுவிழந்து, பலவீனமான நிலையில் உள்ள, இந்த கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கி ன்றனர். ஆபத்தை உணர்ந்தவர்களாய் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.  

    • எரிவாயு தகன மேடை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
    • இதனால் இறந்தவர்களின் சடலங்கள் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி ஈசானியத்தெரு வில் குப்பை கிடங்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.

    சீர்காழி நகரில் இறக்கும் நபர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி இயந்திரம் மூலம் எரியூட்டப்படுவது வழக்கம்.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக எரிவாயு தகனமேடை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு, எரிவாயு தகன மேடை ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

    இந்நிலையில் தகனமே டை எந்திரம் மீண்டும் பழுதாகிவிட்டது.

    இதனால் எரிவாயு தகனமேடைக்கு வரும் இறந்தவர்களின் சடலங்கள் வெளிப்புறத்தில் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    இதனால் புகை மூட்டம் அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஆகையால் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடை இயந்திர பழுதினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுதானது
    • 2 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காய் சோளிபாளையம் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில்வே பாதையில் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று மாலை 6:45 மணி அளவில்பயணிகள் ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற பின் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் மாங்கா சோளிபாளையதிலிருந்து கரூர், வேலாயும்பாளையம், தளவா பாளையம் , சேலம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட் பழுதடைந்தது தொடர்பாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் ரயில்வே கேட் ஊழியர் தகவல் கூறிய பின் ரயில்வே கேட் பழுதுபார்க்கும் ரயில்வே பணியாளர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மாங்கா சோளி பாளையம் ரயில்வே கேட்டை,இரவு 9.30மணி அளவில் சரி செய்யப்பட்டது.அதன் பின் அங்கு வரிசையாக நின்றிருந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடிந்தது. சுமார் 2 .30மணி நேரம் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 

    • பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
    • பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் கடலூர் அண்ணா பாலத்தை கடந்து பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு பதறிய பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் பஸ் பழுதானது குறித்து, போக்குவரத்து பணிமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து பழுதாகி நின்ற பஸ்சை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சை சாலையோரம் அப்புறப்படுத்தி அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு இடையே பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று பஸ்சில் பண்ருட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர்
    • மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை செப்பனிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர். அதன்படி சாலைப்பணிகள் செப்பனிடுவது, தார் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி பகுதியில் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரில் மொத்தம் 402 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.207 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம் நிதி அரசிடம் கோரப்பட்டது. அதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து டெண்டர் விடப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்த பணிக்காக ரூ.228 கோடி திட்டமிடப்பட்டு அரசிடம் நிதிஉதவி கோரப்பட்டது. தற்போது முதல்கட்டமாக ரூ.40 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-

    சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் கடந்த2017 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ மனைக்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

    கால்நடை மருத்துவமனை திறந்து சில ஆண்டுகளிலியே கட்டிடத்தின்வெளி மற்றும் உட்பகுதியில் பல இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கட்டிடத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    அரசின் நிதிமூலம் கட்டபட்ட கட்டிடம் சில ஆண்டுகளிலேயே விரிசல்ஏற்பட்டு விரைவிலேயே கட்டிடம் இடிந்து விடும்அபாயத்தில் உள்ளது என இப்பகுதியினர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

    மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதான அந்த கட்டித்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 3 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே பழையனகோட்டை அருகே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை சரி செய்யப்படவில்லை. 

    இந்த பள்ளத்தால் இரவில் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளான சம்பவமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பு இதே பள்ளத்தில திருவெற்றியூரைச் சேர்ந்தவர் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    மேலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக அடிக்கடி தோண்டிய பள்ளங்கள் சாலைகளின் ஓரங்களில் சரி செய்யப்படாமல் இச்சாலை தரமற்ற நிலையில் உள்ளது. இதேபோல் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதாகி உள்ளது. 

    அந்த பள்ளத்தில் கடந்த மாதம் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த டி. கிளியூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×