என் மலர்

    நீங்கள் தேடியது "repair"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எரிவாயு தகன மேடை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
    • இதனால் இறந்தவர்களின் சடலங்கள் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி ஈசானியத்தெரு வில் குப்பை கிடங்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.

    சீர்காழி நகரில் இறக்கும் நபர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி இயந்திரம் மூலம் எரியூட்டப்படுவது வழக்கம்.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக எரிவாயு தகனமேடை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு, எரிவாயு தகன மேடை ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

    இந்நிலையில் தகனமே டை எந்திரம் மீண்டும் பழுதாகிவிட்டது.

    இதனால் எரிவாயு தகனமேடைக்கு வரும் இறந்தவர்களின் சடலங்கள் வெளிப்புறத்தில் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    இதனால் புகை மூட்டம் அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஆகையால் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடை இயந்திர பழுதினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுதானது
    • 2 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காய் சோளிபாளையம் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில்வே பாதையில் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று மாலை 6:45 மணி அளவில்பயணிகள் ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற பின் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் மாங்கா சோளிபாளையதிலிருந்து கரூர், வேலாயும்பாளையம், தளவா பாளையம் , சேலம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட் பழுதடைந்தது தொடர்பாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் ரயில்வே கேட் ஊழியர் தகவல் கூறிய பின் ரயில்வே கேட் பழுதுபார்க்கும் ரயில்வே பணியாளர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மாங்கா சோளி பாளையம் ரயில்வே கேட்டை,இரவு 9.30மணி அளவில் சரி செய்யப்பட்டது.அதன் பின் அங்கு வரிசையாக நின்றிருந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடிந்தது. சுமார் 2 .30மணி நேரம் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
    • பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் கடலூர் அண்ணா பாலத்தை கடந்து பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு பதறிய பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் பஸ் பழுதானது குறித்து, போக்குவரத்து பணிமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து பழுதாகி நின்ற பஸ்சை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சை சாலையோரம் அப்புறப்படுத்தி அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு இடையே பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று பஸ்சில் பண்ருட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர்
    • மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை செப்பனிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர். அதன்படி சாலைப்பணிகள் செப்பனிடுவது, தார் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி பகுதியில் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரில் மொத்தம் 402 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.207 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம் நிதி அரசிடம் கோரப்பட்டது. அதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து டெண்டர் விடப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்த பணிக்காக ரூ.228 கோடி திட்டமிடப்பட்டு அரசிடம் நிதிஉதவி கோரப்பட்டது. தற்போது முதல்கட்டமாக ரூ.40 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-

    சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் கடந்த2017 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ மனைக்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

    கால்நடை மருத்துவமனை திறந்து சில ஆண்டுகளிலியே கட்டிடத்தின்வெளி மற்றும் உட்பகுதியில் பல இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கட்டிடத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    அரசின் நிதிமூலம் கட்டபட்ட கட்டிடம் சில ஆண்டுகளிலேயே விரிசல்ஏற்பட்டு விரைவிலேயே கட்டிடம் இடிந்து விடும்அபாயத்தில் உள்ளது என இப்பகுதியினர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

    மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதான அந்த கட்டித்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது. இது பற்றி பக்கத்தில் உள்ளவர்கள் உடனடி யாக மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்த னர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியருக்கு நன்றி கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print