search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயான கொட்டகையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    பழுதடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை.

    மயான கொட்டகையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

    இந்நிலையில், அங்குள்ள மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் மழைகாலங்களில் பிணத்தை எரியூட்டும்போது கொட்டகை இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு வேற மயானம் கிடையாது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் எனவும், மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×