என் மலர்
நீங்கள் தேடியது "damage"
- கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
- அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கால்களில் வீக்கம்
ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
மஞ்சள் காமாலை
எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
வயிற்று உப்புசம் மற்றும் வலி
கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.
வாந்தி, சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
தலைச்சுற்றல்
ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.
குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
அடர் நிற சிறுநீர்
கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.
சோர்வு
நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.
- சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
- ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில் மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று கமன்ட் tவருகின்றனர்.
- அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
- கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆனால் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ராம் பாத் சாலையில் பொத்தல்கள் ஏற்பட்டு மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில்தான் தற்போது, யோகி ஆதித்தனாத் அரசு மூன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாகவும், கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.
- மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
- தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ரீமால் புயலால் தெலங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
10 people have died as a stone quarry collapsed on the outskirts of #Aizawl following incessant #rains. Police personnel are engaged in rescue operations. The water levels of rivers are also rising up and many people living in the riverside areas have been evacuated#Mizoram pic.twitter.com/gQ0WG4iNp4
— Smriti Sharma (@SmritiSharma_) May 28, 2024
புயலின் தாக்கத்தால் சாலையோர மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சார வயர்கள் அறுந்து மழை நீரில் விழுந்து பொதுமக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Las inundaciones en #Afganistán ya han matado a más de 300 personas (muchos niños) y dejan 1.600 heridos, de momento. ¿Dónde está el #periodismo? Dos medios ya me han informado de que "esa historia no nos interesa". Parece ser que la vida de los niños afganos vale menos que la de… pic.twitter.com/zZoxqPIgEA
— @AmadorGuallar2 (@AmadorGuallar2) May 14, 2024
முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
⛈??Fuertes inundaciones devastan #Afganistán y dejan más de 300 muertos
— Karlita °*Chavistamente*° 28K (@kb_ql22) May 11, 2024
Lluvias estacionales inusualmente intensas provocaron inundaciones repentinas en Afganistán, que se han saldado con más de 300 muertos y más de 1.000 viviendas destruidas, informó @ActualidadRT pic.twitter.com/ryLsKfkaZg
ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.
நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
- பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
- சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது
தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.
பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.
சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.
#Philippines accuses #China's coast guard of damaging its vessel in #SouthChinaSea
— DD News (@DDNewslive) April 30, 2024
Two Chinese coast guard vessels used water cannons against the Philippine ship, which was patrolling together with a civilian fisheries vessel pic.twitter.com/Y95G3VNOCJ
- நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
- சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.
சென்னை:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.
31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.
ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.
எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.
பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
- சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.
நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.
இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.
- யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.
சென்னை:
சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் மீட்பு பணிகள் விடிய விடிய நடந்தன.
சென்னை தண்டையார் பேட்டையில் ஐ.ஓ.சி-க்கு சொந்தமான எண்ணை கிடங்குகள் உள்ளன. அங்கிருந்து சரக்கு ரெயில் மூலம் டீசல், பெட்ரோல் நிரப்பப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதிகாலை 2.30 மணி யளவில் பெட்ரோல் ஏற்ற யார்டுக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அப்போது 2 பெட்டிகள் தடம் புரண்டன. 4 சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின.
இதையடுத்து உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தடம் புரண்ட சரக்கு காலி பெட்டிகளால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆனாலும் விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தன. காலை 7 மணிக்கு சரி செய்யப்பட்டு யார்டுக்கு பெட்டிகள் கொண்டு செல்லப் பட்டன.
இதேபோல சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.
யார்டில் இருந்து என்ஜின் வெளியே வந்தபோது தண்டவாளத்தைவிட்டு இறங்கியது. இதனால் யார்டில் இருந்து ரெயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.
இந்த 2 ரெயில் விபத்தாலும் அடுத்தடுத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
- மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.
திருவொற்றியூர்:
மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.
இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,
எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.