search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild boars"

    • புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
    • கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப்பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்ட வற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

    காட்டுப்பன்றிகள்

    இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றி கள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர், கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளதால் அது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இது குறித்து விவசாயி காசியம்மாள் என்பவர் கூறுகையில், இதுபற்றி வேளாண்மை துறை, வனத்துறை அதி காரிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை காட்டுப்பன்றிகள், மான்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

    நிலத்தில் இறங்கி வேலை செய்து எனது இரு கால்களும் காயம்பட்டு உள்ளது. இந்தக் காயத்துக்கு மருந்தாக கூட இந்த நிலத்தில் விளைந்த கடலை விற்பனை விலை வராது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வளவு இன்னல்களிலும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறியல் போராட்டம்

    இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கூறுகையில், தமிழகத்தை போன்று இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் தொல்லையால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அவதி அடைந்து வந்தபோது, அந்த மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்று வதற்காக உடனடியாக விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுத்துள்ளது.

    காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விளாத்திகுளம் பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மறியல் போராட்டம் நடத்த உள் ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மணி நேரம் போராடி மீட்டனர்
    • காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதிகளை சுற்றி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்த காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளது.

    இந்த காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை, முள்ளம்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. விலங்குகள் அடிக்கடி உணவுகளை தேடி விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

    இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் வனவிலங்குகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் கூட்டமாக வந்து செல்கின்றன.

    ஒடுகத்தூர் அடுத்த அத்தி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.

    வழக்கம்போல ரமேஷ் காலை நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார் அப்போது கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பன்றி குட்டிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    வனத்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த 11 காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

    வனத்துறையினர் அருகே இருந்த காப்பு காட்டில் பன்றிகளை பத்திரமாக விட்டனர்.

    • புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.
    • புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம்.

    உடுமலை:

    மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் விவசாயத்துக்கு சவாலாகவும், விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அமராவதி, உடுமலை, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட இரை விலங்குகளிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்திலும், இரைகளை தேடியும் அடிவார பகுதிகளுக்கு வந்த காட்டுப்பன்றிகள் அங்கேயே தங்கி விட்டன. அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் இடம் பெயர்ந்து பரவியுள்ளன.மேலும் அந்த பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.

    மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பயிர்களைத் தின்றும் மிதித்தும் வீணாக்கி வருகின்றன. அத்துடன் கால்நடைகளை தாக்குவதுடன் மனிதர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.காட்டுப்பன்றிகளை விரட்டும் நோக்கத்தில் தாக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை.இதனால் காட்டுப்பன்றிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாற்று வழி தேட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் விளைநிலங்களை சுற்றி சேலைகளை கட்டி விட்டால் அவை காற்றில் அசையும் போது அச்சத்தில் காட்டுப்பன்றிகள் ஓடி விடும். ஆனால் தற்போது சேலைகளை கிழித்து உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்துமளவுக்கு அவற்றின் வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம். சந்தையில் கிடைக்கும் அந்த திரவத்தை கயிறுகளில் நனைத்தோ அல்லது பாட்டில்களிலோ விளைநிலத்தைச் சுற்றி தொங்க விட வேண்டும்.அதிலிருந்து வெளிவரும் விரும்பத்தகாத வாசனையால் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களை நெருங்குவதில்லை.

    ஆனால் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இந்த திரவத்தை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இது மேற்கு மலைத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இதனால் அங்கு வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகயுள்ளது.

    இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் படித்து கொண்டு இருந்தனர். அப்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், மருதமலை பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றி திரிகிறது. பல்கலைக்கழக வளாகத்திலும் உலா வருகிறது. இது வாகன ஓட்டிகள், மாணவ மாணவியரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலையில் ெசல்லும் காட்டுப்பன்றிகள் வாகனங்களை முட்டி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மருதமலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழக வளாகத்திலும் அடிக்கடி ரோந்து சென்று காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயிகளையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கந்தாடு, புதுப்பாக்கம் ,நடுக்குப்பம் ,அசப்போர், ஊரணி, ராய நல்லூர், வட அகரம், காக்காபாளையம் , திருக்கனூர், வண்டி பாளையம், காணி மேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடுகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது . மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் தைல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து அடர்த்தியான காடுகளாக உள்ளது .இதுபோல் இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏரிகள், ஓடைகள் குட்டைகள் உள்ளது.

    இப்பகுதிகளில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் இருக்கின்றது. இங்குள்ள காடுகள் மற்றும் கருவேல மரங்கள் இருக்கும் இடத்தில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றது. இந்த காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல் ,மணிலா, தர்பூசணி மரவள்ளி போன்ற பயிர்களை அழித்து நாசப்படுத்துகின்றது. இதுபோல் விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயி களையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்காக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது காடுகளை ஒட்டி உள்ள விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளை தடுக்க அரசு சார்பில் ஒருவித ரசாயன மருந்தை மானிய விலையில் கொடுக்கின்றனர்.

    இந்த ரசாயன மருந்தை வயல்வெளியில் தெளித்து விட்டால் வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிக்காது. இது போன்ற ரசாயன மருந்துகளை பல இடங்களில் வேளாண் துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே மரக்காணம் மட்டும் சுற்றுப்புற ப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க இது போன்ற ரசாயன மருந்துகளை உடனடியாக வழங்கி விவசாயி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
    • பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார ங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றி களால் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வன எல்லை மட்டுமல்லாது, வெகு தொலைவிலுள்ள கிராம ங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

    நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயி களும் காட்டுப்ப ன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்க ளுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவிலும் பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்பு களை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.வனத்து றையினர் இப்பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கி ன்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கி பெருகும் காட்டுப்ப ன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இதற்கான கருத்துருவை வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கி ணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • காட்டு பன்றிகள் கூட்டம் 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
    • களக்காடு பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் கென்னி டேவிஸ் (வயது36). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு பகுதியில் உள்ளது.

    காட்டுபன்றிகள் அட்டகாசம்

    நேற்று முன் தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது தோட்டத்துக்குள் சென்று 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அரசின் விதை பண்ணையில் இருந்து விதை வாங்கி பயிர் செய்யப்பட்டதாகும்.

    அறுவடை செய்த பின்னர் நெல்லை அரசின் விதை பண்ணைக்கு வழங்க வேண்டும். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் நாசம் செய்து விட்டன. களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    விவசாயிகள் புகார்

    வனப்பகுதிக்குள் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல், மலையடிவார புதர்களில் பதுங்கியுள்ளன. இவைகள் இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

    காட்டுபன்றிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • காட்டுபன்றிகள் தொடர்ந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகன் (41). விவசாயி.

    இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு செல்லும் வழியில் பாழம்பத்து பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் இவரது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 1 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை நாசம் செய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனைதொடர்ந்து விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேலகுன்னத்தூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

    தற்போது அந்த நெற்ப யிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மேலகுன்னத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை நாசம் செய்தது.

    இன்று காலை வயல்பகுதிக்கு சென்ற விவசாயிகள் நாசமான பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, நாங்கள் கஷ்டப்பட்டு அதிகளவு நிலத்தில் நெல் நடவு செய்துள்ளோம்.

    விவசாயிகள் கோரிக்கை

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. ஆனால் காட்டுப்பன்றிகள் புகுந்து அதனை நாசம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். 

    • மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.

    காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம், குண்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள், விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன.வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திலும் மான், மயில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.மயில் தேசிய பறவை என்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம்.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் காடுகள் அல்லாத பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக முந்தைய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அவ்விவரங்கள் ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    கோவில்பட்டி:

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் இருக்கும் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போது தான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016-ம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.

    அதேபோல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத் துறை மூலம் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், வன விலங்கு சட்ட நடை முறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரி களிடமும் கலந்தாலோ சித்து, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி யளித்தார்.

    ×