என் மலர்

    நீங்கள் தேடியது "raja mla"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் மனோ கரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். அதில், வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதபடுத்த வேண்டும். தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும்.

    ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமிக்க பட வேண்டிய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பட்டியலை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. தலை வர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தியதை போல் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்காக முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தில்தான் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் என்ற பெருமையை பெற கடுமை யாக உழைக்க வேண்டும். தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவடடம் முதலிடம் பெற வேண்டும். சமூக வலைத்தளங்களை தமிழக அரசின் சாதனைகளை அனைவரும் அறியும் வகை யில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, பூசைபாண்டியன், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா என்ற தேவதாஸ், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி,

    மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, விவேகானந்தன், சுந்தரவடி வேலு, மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், இளைஞரணி சரவணன்,

    பசுபதிபாண்டியன், திலிப் குமார், வீமராஜ், சுற்று சூழல் அணி அழகுதுரை, நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய் குட்டி, கேபிள் கணேசன், வீரா, சிவா, ஜான்சன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.
    • கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.

    இதில் அணி அமைப்பா ளர்கள் அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல், இணையதளம் மூலமாக இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்களையும் மக்கள் இடையே கொண்டு சேர்த்தல், கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர், மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வெயில் காலம் முடியும் வரை தினமும் நீர், மோர், பழங்கள் வழங்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர், மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் வெயில் காலம் முடியும் வரை தினமும் நீர், மோர், பழங்கள் வழங்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் இளையரசேனந்தல் மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குருவிகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட தூய்மை நகரங்களுக்கான துணைச் செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மதுரை, மாவட்ட பிரதிநிதி மனோகரன், கிளைச் செயலாளர்கள் ஆண்ட்ரூஸ், லட்சுமணபெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில்,

    இந்த பகுதியின் முக்கிய தேவையான குடிநீர் கிடைப்பதற்கு தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும், கூடிய விரைவில் திட்டம் நிறைவேறி தண்ணீர் பிரச்சினை நீங்கும், மேலும் இப்பகுதியில் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், ஐசக்தவராஜ், பொருளாளர் செல்ல பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் செந்திவேல்கடற்கரை, திருவேங்கடம் முன்னாள் பேரூர் செயலாளர் பவுல்ராஜ், வெங்கடாசலபுரம் செயலாளர் கருப்பசாமி, நக்கமுத்தலம்பட்டி செயலாளர் சூசை, கருப்பசாமி, ஜான் பிரிட்டோ, பிச்சைதலைவன் பட்டி செயலாளர் பாண்டித்துரை, திருமால் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்.
    • 13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கீழ் வரும் தேதிகளில் பொதுக் கூட்ட ங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த ப்படும்.

    அதன்படி வருகிற மார்ச் 11-ந் தேதி (சனிக்கிழமை) குருவிகுளம் கிழக்கு ஒன்றியத்தில் கழகப் பேச்சா ளர் வேங்கை சந்திரசேகர் மற்றும் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய த்தில் கழகப் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை)குருவிகுளம் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் வேங்கை சந்திர சேகர், வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தில் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)ராயகிரி பேரூர் கழகத்தில் முரசொலி மூர்த்தி மற்றும் புளியங்குடி நகரத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    15-ந் தேதி (புதன்கிழமை) திருவேங்கடம் பேரூர் - கழக பேச்சாளர் சேலம் சுஜாதா மற்றும் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

    16- ந் தேதி (வியாழக் கிழமை) சிவகிரி பேரூர் கழகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    17-ந் தேதி (வெள்ளிக் கிழமை)குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    19-ந் தேதி (ஞாயிற்று க்கிழமை)சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டு பேசுகிறார்.

    மேல் காணும் தேதி களில் நடைபெறும் பொது கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்களுடன் அந்தந்த பகுதி வார்டு மற்றும் கிளைக் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அணி சார்பில் சங்கரன்கோவில் 30-வது வார்டு காவேரி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பயிலும் 120 மாணவ- மாணவியருக்கு மரக்கன்று, கல்வி உபகரணங்கள் அனைத்தும் மஞ்சள் பையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செய லாளர் ராமலிங்கம், முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.இளைஞர் அணி அன்சாரி தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞரணி சரவணன், நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக் குமார், சுப்புத்தாய், வீரா, ரபிக், ஷெரிப், ஹிதாயத், த.மு.மு.க.வை சேர்ந்த ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அயலக அணி சார்பில் முகமது இஸ்மாயில் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கினார்.

    இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மூத்த உறுப்பினர் சந்திரன், வார்டு செயலாளர்கள் தங்கவேல், துரைபாண்டியன், காளிச்சாமிபாண்டியன், கணேசன், வைரவேல், சதாசிவம், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாரிராஜ், ஆறுமுகம், சங்கரன், வீராசாமி, வீரமணி, தடிகாரன், சரவணன், முத்துக்குமார், கோமதிநாயகம், மாரியப்பன், சுப்பராஜ் மற்றும் கேபிள் கணேசன், அன்சாரி, சபரிநாத், தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. விழாவுக்கு தலைமை தாங்கி சங்கரலிங்க சுவாமி கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
    • தொடர்ந்து 23- வது வார்டு வடக்கு ரதவிதியில் பொதுமக்களுக்கு இனிப்பு, சேலை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    நகர தி.மு.க. செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சங்கரலிங்க சுவாமி கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து 23- வது வார்டு வடக்கு ரதவிதியில் பொதுமக்களுக்கு இனிப்பு, சேலை வழங்கப்பட்டது.

    5-வது வார்டு இலவங்குளம் ரோட்டில் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதேபோல் தற்காலிக பஸ் நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் 70 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 21- வது வார்டு வடகாசி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் டி.டி.டி.ஏ. சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, குவளைக்கண்ணி பஞ்சாயத்து தலைவர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மூத்த உறுப்பினர் சந்திரன்,

    வார்டு செயலாளர்கள் தங்கவேல், துரைபாண்டியன், காளிச்சாமிபாண்டியன், கணேசன், வைரவேல், சதாசிவம், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாரிராஜ், ஆறுமுகம், சங்கரன், சிவசங்கரநாராயணன், வீராசாமி, வீரமணி, தடிகாரன், சரவணன், 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் ராஜா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் 1-ந்தேதி பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் செய்வது, மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்.

    பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, தமிழக முதல்-அமைச்சரின் திறமையான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் முதல்-அமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணி அளவில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டி களுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தி.மு.க. ஒன்றிய செய லாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெள்ளத் துரைபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திருமலைகுமார், மகேந்திரன், முகேஷ், கிளை செயலாளர் செந்தில்குமார், சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றிய பிரதிநிதி சுதா, பால்பாண்டியன், ராமசுப்பு, மகேந்திரன் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.