search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raja mla"

    • புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வன்னிக்கோேனந்தல் தம்பிராட்டி அம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா செல்வி அன்பழகன், ஒன்றிய ஆணையாளர் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலநீலித நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி, வன்னிக்கோேனந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் வீமராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், கூவாச்சிபட்டி செல்வம், காங்கிரஸ் கணேசன், முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
    • இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கிப்ட்சன் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    அதனை கேட்டுக் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தகவல் தொழில் நுட்ப அணி செயல்பாட்டிற்கு வடக்கு மாவட்ட கழகம் என்றும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சிவாஜி, ரெஜிகலா, வாசு தேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர்கள் சுவாமி நாதன், ரஜினி காந்த், சங்கரேஸ்வரி, சங்கரன் கோவில் சட்ட மன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்பாண்டியன், வீமராஜ், சங்கரேஸ்வரி, நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கணேஷ், சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
    • நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், பரமகுரு, மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வர்த்தக அணி இணை செய லாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலா ளர்கள் ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றார். மருத்துவ அணி மாவட்ட அமைப்பா ளர் டாக்டர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவ ருக்கு அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளார்.

    அதன்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி மட்டுமல்லாமல் அனைத்து சார்பு அணிகளும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை புரட்சி இயக்கமாக மாற்றி தென்காசி வடக்கு மாவட்டத் தில் இருந்து அதிகமான அளவில் கையெழுத்துக் களை பெற்று அனுப்ப வேண்டும்.

    நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய். இதனால் ஏழை, எளிய மக்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் அதிக அளவு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி.

    ஆனால் தமிழக மாண வர்கள் மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்காமல் இந்த நீட் தேர்வினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து பரப்பரை யாளர் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினார். தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலிலும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, பேரூர் செயலா ளர்கள், நகராட்சி சேர்மன் கள் சங்கரன் கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தர ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்புடாதி, வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட சார்பு அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், சரவணன், சதிஷ், முத்துலட்சுமி, விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், சுற்றுச் சூழல் அணி துணை அமைப் பாளர் சிவகிரி சேதுசுப்ர மணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் முருக ராஜ், ஜெயகுமார், ஜான், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் பகுதிகளில் தாமிரபரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.
    • மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோ வில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த மாதம் அமைச்சரால் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கரன் கோவில் தொகுதி நிலத்தடி நீர் இல்லாத பகுதி ஆகும். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், மானூர், சங்கரன் கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் தாமிர பரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.

    மழை இல்லாத நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வற்றி போவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வலியுறுத்தி உள்ளார்கள்.

    அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அம்பாசமுத்தி ரத்தில் இருந்து கடைய நல்லூர் வரை பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருக்கும்.

    அந்த பணிகள் தொடங்குவதற்கு தற்போது ஆய்வுகள் நடந்து கொண்டி ருப்பதாகவும், கூடிய விரை வில் திட்டம் செயல்படுத் தப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக் கப்படும் என தெரிவித்தார்.

    • பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    கடந்த 11-ந் தேதி தியாகி இம்மானு வேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி யில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    • சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளிக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கினார்.

    தொடர்ந்து ஓட்டபயிற்சி மேற்கொள்ளும் மாணவி களுக்கு ஷூக்கள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் நுழைந்துள்ள ஊத்துமலையை சேர்ந்த மாணவி கலைச்செல்விக்கு ஸ்டெதஸ்கோப் மறற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அணி கார்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் சங்கர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர்கள் சுப்புத்தாய், முத்துக்குமார் வார்டு செயலாளர் பழனிச்சாமி, காவல் கிளி, ஜான், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
    • புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை பால்வளத்துறை மற்றும் ஆவின் இணைந்து நடத்திய கடன் வழங்கும் நிகழ்ச்சி 0.1884 சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் (பால்வளம்) நெல்லை மற்றும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.

    மேலும் 80 பயனாளி களுக்கு தாட்கோ மூலம் வங்கி கடன் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. விழாவில் அரசின் சார்பில் பால்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மேலும் மாட்டுக்கடன்கள் குறித்து உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் 0.1884 சங்கரநயினார்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செய லாட்சியர், தாட்கோ மேலாளர், தென்காசி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர், சங்கரன்கோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர், சங்கரன்கோவில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி முதுநிலை ஆய்வாளர் (பால்) தென்காசி நன்றி கூறினார்.

    • எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252-வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகுதுரை, துணை அமைப்பாளர் விஜயபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் மற்றும் காவல் கிளி, ஜலால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக விருந்தில் பங்கேற்றவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் வேஷ்டி-சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வீரா, நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அஜய்மகேஷ்குமார், சங்கர்கணேஷ், வக்கீல் ஜெயக்குமார் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் முத்துராஜ், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புதாய், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜ், அன்சாரி, மாவட்ட வக்கீல் துணை அமைப்பாளர் காளிராஜ், உதவி தலைமை ஆசிரியர் பூமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தமிழ் ஆசிரியர் சங்கர்ராம், என்.சி.சி. அலுவலர் பாலமுருகன், ஆசிரியர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார், துணை தலைவர் குமார், உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மனோகரன், வேல்ராஜ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த அஜய்மகேஷ்குமார், கணேஷ், ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், சங்கர், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, ஜெயக்குமார், காவல்கிளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.
    • பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜன், கார்த்தி, மணிகண்டன், அன்சாரி, ராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும். தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன் முத்தையா பாண்டி யன், பூசைபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, ராமச்சந்திரன், கிறிஸ்டோபர் வெற்றிவிஜயன், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவா என்ற தேவதாஸ், மகேஸ்வரி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×