search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt job"

    • அருப்புக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ‌.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    மதுரை ராமகிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவர் அறிமுகமானார்.

    அவர் ஜெயகாந்த்திடம் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயகாந்த் 2018-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. அப்போது ஜான் தேவ பிரியம் சுகாதா ரத்துறையில் அரசு வே லைக்கான ஆணை வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.

    இதுகுறித்து ஜெயகாந்த் கேட்டபோது, கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் வேண்டுமென தெரி வித்துள்ளார்.

    அதையும் நம்பிய ஜெய காந்த் ஜான் தேவபிரிய னின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரி கிறது. மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்த் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பண த்தை தராமல் மோசடி செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து அவர் பந்தல்குடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ.9 லட்சம் மோ சடி செய்த ஜான் தேவப்பிரியம், அவரது தந்தை பால்துரை சிங், தாயார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
    • தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

    தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
    • தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.

    இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.

    • பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630.
    • 46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630; பெண்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 60 ஆயிரத்து 846; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290 என மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விபத்தில் காலை இழந்த வீரரின் தாயார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
    • மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது.

    மதுரை

    மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 26-ந் தேதி மாலை 3 பழுதடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்தனர். அதுசமயம் அந்த வழியாக ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் (வயது18) என்பவர் நடந்து வந்துள்ளார். மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது. இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் உதவியுடன் இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர் விக்னேஸ்வரனை, அமைச்சர் தங்கம் தென்ன ரசு மதுரை அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சமும், மின்வாரியம் சார்பில் 3 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப் பட்டது. அப்போது விளை யாட்டு வீரரின் தாயார் தீர்த்தம் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென கோரிக்கை வைத் தார்.

    இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்த பரிதி விக்னேஸ்வரனின் தாயார் தீர்த்தம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளித்தார். அப்போது, பணம் தேவையில்லை. எனது மகனுக்கு அரசு வேலை தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜ்(வயது35). இவர் பழைய பஸ் நிலையம் எதிரில் கடை நடத்தி வருகிறார். ராஜூம், அவரது மனைவியின் தங்கை கார்த்திகாவும் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அருப்புக் கோட்டை ஆவின் பால கத்தில் வேலை பார்க்கும் சுந்தரகோபி என்பவருடன் ராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு தெரிந்த நரிக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அவர் மூலம் கிராம நிர்வாக உதவியாளர் பணியை எளிதாக பெற்று விடலாம். அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய ராஜூ, விஜயலட்சுமியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. பணத்தை கொடுத்த பின்பும் ராஜூக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் பணத்தை திருப்பி தருமாறு விஜய லட்சுமி, சுந்தரகோபி, இதற்கு உடந்தையாக இவ ரது தந்தை முருகன் ஆகியோ ருடன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். மேலும் பணத்தை தர முடியாதென கூறி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராஜ் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி விஜயலட்சுமி, சுந்தரகோபி, முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
    • அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தற்போது பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 191 அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிலும், பிரதமர் மோடியின் 6 வேலைவாய்ப்பு முகாம்களிலும் (ரோஜ்கர் மேளா) தலா 70 ஆயிரம் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 45 ஆயிரத்து 431 பேர் தேர்வு பெற்றனர் என்றும், பா.ஜனதா ஆட்சியில் 50 ஆயிரத்து 906 பேர் நியமனம் பெற்றனர் என்றும் கூறினார். அதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பா.ஜனதா ஆட்சியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்தார். இதைபோல அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது என்றும் மந்திரி கூறினார்.

    • திருமங்கலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி நடந்துள்ளது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39), அண்ணாநகரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வாணி. காளீஸ்வரியும், வாணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

    கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு வாணிக்கு அரசு ேவலை கிடைத்துள்ளதாக காளீஸ்வரியிடம் கூறியுள்ளார். உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இந்த வார்த்தையை நம்பிய காளீஸ்வரி, தனது தோழியான வாணி மற்றும் அவரது கணவர் கண்ண னிடம் ரூ.7 லட்சம் பணத்தை வங்கி மூலம் மாற்றி உள்ளார்.

    ஆனால் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, மேலும் பணத்தையும் திருப்பி தரவும் மறுத்துவிட்டார்கள். ஆகவே இதுகுறித்து காளீஸ்வரி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் விசாரணை நடத்திய போலீசார் வாணி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்்நதவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்்ந்த சேதுராமன் மனைவி பாண்டிசெல்விக்கு ஒரு சென்ட் ரூ.60 ஆயிரத்திற்கு கிரையம் பேசி மொத்தம் 6 சென்ட் விற்பதற்காக பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் அந்த இடத்தை பாண்டிசெல்விக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பாண்டிசெல்வி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 391 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (23). இவரிடம் புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துர்கா ரூ. 11 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீதி பணத்தை கேட்டபோது முத்துகுமார் தராமல் குடும்பத்துடன் துர்காவை மிரட்டினார். இது குறித்து புகாரின்பேரில் புதூர் போலீசார் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஸ்ரீஹரி, மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

    • ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.
    • கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.

    மொத்தம் 47 பக்கங்கள் கொண்ட இந்த அறிவிப்பில் ஆன்லைன் விண்ணப்பபதிவு ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கும் என்றும், மே 14-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் இது வெளியானது.

    இது குறித்து விசாரித்தபோது அரசு சார்பில் இது வெளியிடப்படவில்லை என தெரியவந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் டி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அதுபோன்று எந்த அறிவிப்பும் துறையால் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    இருந்தாலும் போலியான அறிவிப்பு வெளியானதால் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நியமன தேர்வுக்கான அறிவிப்பு தேர்வு வாரியத்தால் தயார் செய்யப்பட்டு அது முன்கூட்டியே 'லீக்' ஆகிவிட்டதா? அல்லது போலியான அட்டவணையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×