என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt job"

    • இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
    • பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது.

    அரசு வேலை என்பது பலருக்கும் லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்திற்காக பாடுபடுபவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள், தோல்வியும் அடைகிறார்கள். தோல்வி அடைந்தாலும் விடாது அரசு வேலைக்காக அரும்பாடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில், அரசு வங்கி வேலைக்காக அயராது படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வங்கியில் வேலைபார்த்த 29-வயது இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 29 வயதான வாணி என்பவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீரட் கிளையில் கடன்களை நிர்வகிக்கும் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது. இதனால் அவர் தனது வேலையை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை. எனது கதையை மட்டுமே நான் இங்கு பகிர்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கு தைரியம் தேவை! எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சியாக இருங்கள் என்றும், மற்றொருவர், இப்போதெல்லாம், எல்லோரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக மாறுகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு, என்னிடம் சில சேமிப்புகள் உள்ளன. மேலும் வேலையில் இருந்தபோது அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே நான் செலவிட்டேன். நான் எந்தக் கடனும் எடுக்கவில்லை, அதனால் எனக்கு EMI இல்லை. எனது மாதாந்திர செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு என வாணி பதில் அளித்துள்ளார். 



    • நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
    • நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயரில் புத்தகங்களை கைவிட்டு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கல்லூரி காதல் ஜோடி ஒன்று அரசு வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியத்தில் வெற்றி பெற்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பாப்பண்ண பேட்டையை சேர்ந்தவர் நவீன். இவர் கல்லூரியில் படிக்கும் போது பத்மா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது இருவரும் அரசு வேலை கிடைத்தால் தான் இரு வீட்டாரின் சம்மதம் கிடைக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அரசு வேலை என்பது லட்சியம்.

    அது கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் பத்மா வேலைவாய்ப்பு படிப்புக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்து படித்து வந்தார்.

    அதேப்போல் நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். நவீன் குருப் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர், கல்லூரி உதவியாளர், கல்லூரி ஆசிரியர் உட்பட 4 அரசு பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.

    பத்மா குரூப் தேர்வில் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியை பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் நிரந்தர அரசு வேலை கிடைத்ததால் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நவீன்- பத்மா கூறியதாவது:-

    நாங்கள் அரசு வேலை என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று இருக்கிறோம். காதலர்கள் பலர் குறிக்கோள் இல்லாமல் திசை மாறி சென்று திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் காதல் திருமணம் வெற்றி பெறுவது இல்லை.

    திருமணம் நடந்த சில மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கி சென்று வெற்றி அடைந்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 39). இவர் நேற்று முன்தினம் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    உறவினர்கள் போராட்டம்

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவமனையில் மாயாண்டியின் குடும்பத்தி னர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தாசில்தார் பேச்சுவார்த்தை

    இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பாளை தாசில்தார் ஆனந்த பிரசாத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இதுவரை அரசு வேலை வழங்கப்பட வில்லை. எனவே அவரது குடும்பத்தின ருக்கும், மாயாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும்.

    அப்பொழுது தான் மாயாண்டியின் உடலை பெற்று செல்வோம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுடன் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் பாதுகாப்பு

    இந்நிலையில் இவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிக்காக சென்றபோது அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முக்கிய கொலையாளியான சுந்தரபாண்டி கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நங்கையார் சந்திப்பு போலீசிலும், துரை முருகன் என்ற ராஜா பேட்டை போலீசிலும் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே கொலையாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் நம்பிராஜனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அரசு பணிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    பணி ஆணை

    அதன்படி இன்று காலை நம்பிராஜனின் மனைவி பேச்சியம்மாள் என்ற பேச்சிக்கு ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரவு பதிவேற்ற கணிணி ஆபரேட்டர் பணிக்கான ஆணையை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

    ஆதரவற்ற விதவை சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அப்போது நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    உடலை பெற்றுக்கொண்டனர்

    இதையடுத்து நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்த நம்பிராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நம்பிராஜன் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    இதனையொட்டி நடுக்கல்லூரில் தொடங்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரி வரையிலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்தார்.
    • பரிபூரணத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்தார்.

    அதை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கியிருந்தார்.


    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைபாட்டால் பரிபூரணம் உயிரிழந்தார். இந்நிலையில் பரிபூரணம் அரசு வேலையில் இருந்தபோது மறைந்ததால் அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தேவநேயப் பாவாணர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவநேய பாவாணர் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்

    இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

    • ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.
    • கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.

    மொத்தம் 47 பக்கங்கள் கொண்ட இந்த அறிவிப்பில் ஆன்லைன் விண்ணப்பபதிவு ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கும் என்றும், மே 14-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் இது வெளியானது.

    இது குறித்து விசாரித்தபோது அரசு சார்பில் இது வெளியிடப்படவில்லை என தெரியவந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் டி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அதுபோன்று எந்த அறிவிப்பும் துறையால் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    இருந்தாலும் போலியான அறிவிப்பு வெளியானதால் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நியமன தேர்வுக்கான அறிவிப்பு தேர்வு வாரியத்தால் தயார் செய்யப்பட்டு அது முன்கூட்டியே 'லீக்' ஆகிவிட்டதா? அல்லது போலியான அட்டவணையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (23). இவரிடம் புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துர்கா ரூ. 11 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீதி பணத்தை கேட்டபோது முத்துகுமார் தராமல் குடும்பத்துடன் துர்காவை மிரட்டினார். இது குறித்து புகாரின்பேரில் புதூர் போலீசார் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஸ்ரீஹரி, மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 391 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமங்கலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி நடந்துள்ளது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39), அண்ணாநகரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வாணி. காளீஸ்வரியும், வாணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

    கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு வாணிக்கு அரசு ேவலை கிடைத்துள்ளதாக காளீஸ்வரியிடம் கூறியுள்ளார். உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இந்த வார்த்தையை நம்பிய காளீஸ்வரி, தனது தோழியான வாணி மற்றும் அவரது கணவர் கண்ண னிடம் ரூ.7 லட்சம் பணத்தை வங்கி மூலம் மாற்றி உள்ளார்.

    ஆனால் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, மேலும் பணத்தையும் திருப்பி தரவும் மறுத்துவிட்டார்கள். ஆகவே இதுகுறித்து காளீஸ்வரி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் விசாரணை நடத்திய போலீசார் வாணி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்்நதவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்்ந்த சேதுராமன் மனைவி பாண்டிசெல்விக்கு ஒரு சென்ட் ரூ.60 ஆயிரத்திற்கு கிரையம் பேசி மொத்தம் 6 சென்ட் விற்பதற்காக பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் அந்த இடத்தை பாண்டிசெல்விக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பாண்டிசெல்வி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
    • அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தற்போது பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 191 அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிலும், பிரதமர் மோடியின் 6 வேலைவாய்ப்பு முகாம்களிலும் (ரோஜ்கர் மேளா) தலா 70 ஆயிரம் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 45 ஆயிரத்து 431 பேர் தேர்வு பெற்றனர் என்றும், பா.ஜனதா ஆட்சியில் 50 ஆயிரத்து 906 பேர் நியமனம் பெற்றனர் என்றும் கூறினார். அதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பா.ஜனதா ஆட்சியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்தார். இதைபோல அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது என்றும் மந்திரி கூறினார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜ்(வயது35). இவர் பழைய பஸ் நிலையம் எதிரில் கடை நடத்தி வருகிறார். ராஜூம், அவரது மனைவியின் தங்கை கார்த்திகாவும் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அருப்புக் கோட்டை ஆவின் பால கத்தில் வேலை பார்க்கும் சுந்தரகோபி என்பவருடன் ராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு தெரிந்த நரிக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அவர் மூலம் கிராம நிர்வாக உதவியாளர் பணியை எளிதாக பெற்று விடலாம். அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய ராஜூ, விஜயலட்சுமியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. பணத்தை கொடுத்த பின்பும் ராஜூக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் பணத்தை திருப்பி தருமாறு விஜய லட்சுமி, சுந்தரகோபி, இதற்கு உடந்தையாக இவ ரது தந்தை முருகன் ஆகியோ ருடன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். மேலும் பணத்தை தர முடியாதென கூறி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராஜ் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி விஜயலட்சுமி, சுந்தரகோபி, முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ×