என் மலர்
நீங்கள் தேடியது "Telangana couple"
- நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
- நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.
இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயரில் புத்தகங்களை கைவிட்டு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் கல்லூரி காதல் ஜோடி ஒன்று அரசு வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியத்தில் வெற்றி பெற்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பாப்பண்ண பேட்டையை சேர்ந்தவர் நவீன். இவர் கல்லூரியில் படிக்கும் போது பத்மா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது இருவரும் அரசு வேலை கிடைத்தால் தான் இரு வீட்டாரின் சம்மதம் கிடைக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அரசு வேலை என்பது லட்சியம்.
அது கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் பத்மா வேலைவாய்ப்பு படிப்புக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்து படித்து வந்தார்.
அதேப்போல் நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். நவீன் குருப் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர், கல்லூரி உதவியாளர், கல்லூரி ஆசிரியர் உட்பட 4 அரசு பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.
பத்மா குரூப் தேர்வில் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியை பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.
அவர்கள் இருவருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் நிரந்தர அரசு வேலை கிடைத்ததால் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நவீன்- பத்மா கூறியதாவது:-
நாங்கள் அரசு வேலை என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று இருக்கிறோம். காதலர்கள் பலர் குறிக்கோள் இல்லாமல் திசை மாறி சென்று திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் காதல் திருமணம் வெற்றி பெறுவது இல்லை.
திருமணம் நடந்த சில மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கி சென்று வெற்றி அடைந்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
இதற்கிடையில், பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை தேடுவதை அறிந்த ரேஷ்மா சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விகாராபாத் நகரில் உள்ள கிராஃபோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ரேஷ்மாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவினாஷ், அவரது விபரீத முடிவுக்கான காரணம் தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார். ரியாஸ் காதல் விவகாரம் பற்றி தெரியவந்த டாக்டர் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமரசம் பேசினார்.
உங்களது பிடிவாதத்தால் இரு உயிர்கள் பலியாக வேண்டுமா? அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றால் என்னவாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறிய அறிவுரை கைமேல் பலனைத் தந்தது. அதுவும் உடனடியாக.
இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
இருவீட்டார் முன்னிலையில் மதகுருவின் தலைமையில் மணமகளுக்கு ‘மஹர்’ பணம் மற்றும் தங்க நகைகளை தந்து நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.






