என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணம்"
- உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டலத்தைச் சேர்ந்த சஜின்ராஜ் (27) என்பவரும் பணியாற்றி வந்தார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சஜின்ராஜூம், காதலிப்பதாக கூறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைவாணி கேட்டபோது, சஜின்ராஜ் மறுத்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது காதலனுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கலைவாணி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின்ராஜை தேடி வந்தனர்.
சஜின்ராஜின் செல்போன் அவ்வப்போது ஆன் செய்து பின்னர் அணைத்து வைக்கப்பட்டது. இதனை வைத்து ஆய்வு செய்ததில் சஜின்ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் தயாராகி வந்தது கலைவாணிக்கு தெரிந்தது.
இதனையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த கலைவாணி அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சஜின்ராஜை கையும் களவுமாக பிடித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்து தப்பித்து விடாமல் இருக்க கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரிடமும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமா என கேட்டனர்.
இதனிடையே கலைவாணியை தானே திருமணம் செய்து கொள்வதாக சஜின்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அவர்களை போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையில் ஏமாற்றிய காதலனை கொடைக்கானலில் தேடி கண்டுபிடித்து இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் விநியோகித்து வருகிறார்.
9-ந்தேதி திருமண சடங்குகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. சமூகவலைதளங்களில் ஷாமா பிந்துவின் இந்த விநோத திருமணம் பற்றி தான் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அவர் பிரபலமாகிவிட்டார். அவரது இந்த திருமணத்தை தான் தற்போது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
இந்தநிலையில் ஷாமா திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா நகர துணைத்தலைவர் சுனிதா சுக்லா கூறியதாவது:-
இது போன்ற தனக்கு தானே திருமணம் செய்வது என்பது இந்து மதத்திற்கு எதிரானது. பிந்துவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கிறேன்.
ஒரு ஆணை ஆண் திருமணம் செய்வது, பெண்ணை பெண் திருமணம் செய்வது என்பது இந்து கலாச்சாரம் கிடையாது. அது போன்றுதான் பிந்துவின் திருமணமும் சட்டத்துக்கு புறம்பானது. இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தால் இந்துக்களின் பிறப்பு குறையும், இதனால் அவரது திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதை அனுமதிக்க முடியாது.
அவர் எந்த இந்து கோவிலிலும் திருமணத்தை நடத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதுபோன்று பலரும் பிந்துவின் புதுமையான திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் ஷாமா பிந்துவின் திருமணம் அவரை போலவே சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதனால் அவரது திருமணம் திட்டமிட்ட படி 11-ந்தேதி நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
பட்டதாரி பெண்ணான ஷாமா பிந்து தற்போது வதோதராவில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர்கள் இருவரும் என்ஜீனியர்கள் ஆவார்கள். தந்தை தென் ஆப்பிரிக்காவிலும், தாய் அகமதாபாத்திலும் வசித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமணங்கள் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக நடைபெறவில்லை. கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக எளிமையாக நடந்தது.
கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
கடந்த மாதத்தில் இருந்து மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற தொடங்கிவிட்டன.
கடந்த வாரம் தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ராஸ்மாடாஸ் குழுமத்தின் திருமண கண்காட்சி மிகவும் ஆடம்பரமாக நடந்தது. தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் நடந்த இந்த திருமணக் கண்காட்சி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை காட்டியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை நாடு முழுவதும் 40 லட்சம் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை ஐ.டி.சி. கிராண்ட்சோழா நட்சத்திர ஓட்டல் பொதுமேலாளர் கபின் சாங்கட்வான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
2019-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது ஐ.டி.சி.கிராண்ட் சோலாரில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளன. அறைகளில் தங்கும் வருவாய் கிட்டதட்ட இரட்டிப்பாகும். விருந்து வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிப்புறங்களில் இருந்தும் எங்களுக்கு திருமணங்களுக்கான உணவு ஆர்டர் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமணங்கள் மூலம் ஜவுளி, நகைகள், கார்கள் விற்பனை மிகப்பெரிய அளவில் அமோகமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக நகை கடையின் உரிமையாளர் ஒருவர் கூறும்போது:-
இந்த கோடையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். திருமண நிகழ்ச்சிக்காக புதிய வகை பிராண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நகை விற்பனை அதிக அளவில் இருக்கும் என்றார்.
பட்டுப்புடவை கடை உரிமையாளர், ஒருவர் கூறும்போது, மணப்பெண் அணியும் முகூர்த்த பட்டுப்புடவைகள் மட்டுமின்றி செமி காட்டன், ஆர்கான்கள், லைட் சில்க்ஸ் போன்ற இலகுவான புடவைகளுக்கும் அதிக தேவைகள் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
