search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering student suicide"

    • தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    நீலகிரி மாவட்டம் இடுகட்டி தோட்டானி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தனுஷ் (வயது 18). இவர் பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை தனது விடுதி அறை நண்பர்களுடன் சேர்ந்து கேண்டினில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனுஷ் மட்டும் தான் விடுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் தனுஷ் வகுப்புக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் மூலம் போன் செய்து பார்த்துள்ளனர். பலமுறை போன் செய்தும் எடுக்காததால் விடுதி வார்டன் மகேந்திரகுமார் மற்றும் காவலாளியாக வீரமணி ஆகியோர் தனுசு அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளனர். அங்கு தனுஷ் ரூம் உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது.

    உடனடியாக அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தனுஷை கீழே இறக்கி பார்த்துள்ளனர். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

    உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பெருந்துறை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வீரபத்திர ராவ் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், நந்தி காம அடுத்த கம்மவாரி பாளையத்தை சேர்ந்தவர் வீர பத்ரராவ். இவரது மனைவி அருணா ஸ்ரீ. தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மூத்த மகள் ஹர்ஷிதா வர்த்தினி (வயது 19). இவர் அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் வீர பத்ர ராவ் அங்குள்ள வங்கியில் ரூ.3.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டினர். வங்கி ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்த வீரபத்திர ராவ் மனைவி மற்றும் மகள்களை விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரபத்திர ராவ் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தாய் மற்றும் சகோதரி கதறி அழுதனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹர்ஷிதா வர்த்தினியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது ஹர்ஷிதா வர்த்தினி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், கடன் தொல்லை இருப்பதால் நாம் பிழைப்பது கடினம். மேலும் கல்லூரிக்கு கட்டணம் கட்ட கூட வசதியில்லை.

    இதனால் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் எம்.டெக் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவும். கல்லூரி ஸ்காலர்ஷிப் வர வேண்டி உள்ளது. அதனை வாங்கி தங்கையை நன்றாக கவனித்து கொள்ளவும் என உருக்கமாக எழுதி இருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன். ரைஸ்மில் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது19). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து 2-ம் ஆண்டுக்கு செல்ல தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனின் உறவினர் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு ஜவுளி வாங்கி சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது சரண்யாவுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி தரவேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் சரண்யா வழியிலேயே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வீட்டுக்கு வந்த சரண்யா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டின் மாடி அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக மாடியில் இருந்து சரண்யா வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சரண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை தூக்கில் இருந்து மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரண்யாவின் தாய் மனோன்மணியம் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×