என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர்
Byமாலை மலர்24 May 2022 12:04 PM GMT (Updated: 24 May 2022 12:04 PM GMT)
16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கமாரி (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் ஊரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு சிவகாசியில் வசித்தனர்.
சிவகாசியில் தங்கமாரி சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்து 7 மாதம் ஆன நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற போது டாக்டர் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு 16 வயது என்பது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர், கள்ளிக்குடி சமூக நல அலுவலர் பேபி ஜீவசெல்வமணிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அதிகாரி செல்வமணி அங்கு வந்து விசாரணை நடத்தி இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் வாலிபர் தங்கமாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X