search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    • சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
    • உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

    அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
    • மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன்-அழகுகோமதி தம்பதியின் 2-வது மகள் ஸ்ரீநிதா (வயது13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது 4 வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார்.

    ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார்.

    ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் 'மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    இதுகுறித்து ஸ்ரீநிதா கூறுகையில், நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார்.

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். 

    • 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார்.
    • சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர்.

    அப்போது சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை செய்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இரவு பள்ளிப்பாளையம் வந்து சிறுமியிடம் தீ காயம் எப்படி ஏற்பட்டது? யாராவது சூடு வைத்தார்களா? எனவும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

    • சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.
    • உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    திருப்பதி:

    ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம் பனிமுந்திராவை சேர்ந்தவர் 44 வயது காவலாளி.

    இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலத்தில் தங்கி இருந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது 17 வயது மகள் துறைமுக குடியிருப்பில் உள்ள கடற்படை அதிகாரி வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    சிறுமி உள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி சிறுமி தனது காதலுடன் லாட்ஜிக்கு சென்றார்.

    அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் காதலன் தனது நண்பர்களுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வர வழைத்தார். சிறுமியை மிரட்டி காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் லாட்ஜில் இருந்து வெளியே வந்த சிறுமி இது குறித்து தனக்கு தெரிந்த போட்டோகிராபர் ஒருவரிடம் கூறினார். சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.

    பின்னர் அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்ற போட்டோகிராபர் மேலும் தனது 7 நண்பர்களை போன் செய்து வர வழைத்தார்.

    8 பேரும் சேர்ந்து சிறுமியை 1 வாரம் அறையில் அடைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் அவரை ஒரிசாவில் உள்ள சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தனர். வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம் பெண் தனது சொந்த ஊரில் இருப்பது தெரியவந்தது.

    அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    பின்னர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 8 வாலிபர்களை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் புறநகர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

    இளம் பெண்ணை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கர்னூல் ஊரக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலில் அடைத்தனர்.

    தாயை போலீசார் எதற்காக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் என சிறுமிக்கு தெரியவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் உன்னுடைய தாய் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலுக்கு சிறுமி சென்றார். அப்போது ஜெயிலின் கதவு மூடப்பட்டு இருந்தது.

    தனது தாயை காண வேண்டும் என கூறி ஜெயில் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார். ஜெயில் கதவு திறக்காததால் கதறி அழுதபடி மீண்டும் மீண்டும் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயில் அதிகாரிகள் கதவைத் திறந்து சிறுமியை ஜெயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு தனது தாயை கண்ட சிறுமி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

    அப்போது சிறுமி தனது தாயிடம் போலீசார் உன்னை ஏன் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள் என கேட்ட சம்பவம் அங்குள்ளவர்களின் நெஞ்சை உருக செய்தது.

    சிறிது நேர சந்திப்பிற்கு பிறகு சிறுமியின் உறவினர்கள் ஜெயிலுக்கு வந்தனர்.

    ஜெயில் அதிகாரிகள் சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.
    • சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    செய்யாறு:

    செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் 'ராசாத்தி சர்க்கஸ்' என்ற பெயரில் கிராமம், கிராமமாக சென்று கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இவருடன் மனைவி சுலோச்சனா, மகன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் என 10 பேர் சர்க்கஸ் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ரத்தினம் குழுவினர் கடந்த 23-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள மோரணம் கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தனர்.

    பின்னர், அங்குள்ள பஜனை கோவில் தெருவில் டெண்ட் அமைத்து கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து வந்தனர்.

    இந்நிலையில், ரத்தினத்தின் இளைய மகள் ராசாத்தி (வயது 15) என்பவர் நேற்று முன்தினம் பூப்பெய்தினார்.

    இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் பூப்பெய்திய சிறுமி ராசாத்திக்கு கிராம மக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்துவது என முடிவு செய்தனர்.

    சிறுமிக்கு புதிய சேலை, மாலை, கண்ணாடி, வளையல்கள், பொட்டு வகைகள், மை, பவுடர், பழங்கள், அரிசி, மளிகை பொருட்கள் என 50 வகையான சீர்வரிசை பொருட்களை வாங்கினர்.

    தொடர்ந்து, நேற்று மாலை கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி ராசாத்திக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    மேலும், சிறுமியை மஞ்சள் நீராட்டி நாற்காலியில் அமர வைத்து அவரது மாமா ராம்ராஜை மாலை அணிவித்து வாழ்த்த செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.

    இதைகண்ட சிறுமி ராசாத்தி, தந்தை ரத்தினம், தாயார் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    அவர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த சம்வம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவஹரி (வயது31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (26). இருவரும் நேற்று இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாமூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாமூர் ரோட்டில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு கொண்டு வெளியே வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதனால் படுகாயம் அடைந்த சிவஹரியும் சந்திரலேகாவையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
    • வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.

    இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.

    உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×