search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    • 55 வயதான பள்ளி பிரின்சிபல் கோவிந்த் நாத் போலீசின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்
    • சிறுமி ஒத்துழைக்காமல் கத்தியதால் கழுத்தை நிறுத்து கொலை செய்தேன்

    குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஒத்துழைக்க மறுத்த 6 வயது சிறுமியை தனியார் பள்ளி தலைமையாசிரியர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தாகோத் [Dahod] மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்திலிருந்து புதைக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியின் உடல் கடந்த வாரம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உயிரிழந்த சிறுமி படித்து வந்த பள்ளியின் பிரின்சிபல் தான் சிறுமியைத் தினமும் பள்ளிக்கு தனது காரில் அழைத்துச்செல்வார் என்று சிறுமியின் தாய் போலீசிடம் தெரிவித்தார். எனவே 55 வயதான பள்ளி பிரின்சிபல் கோவிந்த் நாத் - யிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அன்றைய தினம் காலையில் தான் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு தான் வேறு ஒரு வெளியாகப் பள்ளியிலிருந்து சென்றதாகக் கூறியுள்ளார். கோவிந்த் நாத் அன்றைய தினம் சென்ற இடங்களை அவரின் போன் லொகேஷன் மூலம் போலீசார் டிராக் செய்துள்ளனர்.

    அவர் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டதாக சென்ற அன்றைய தினம் காலை பள்ளிக்கு தாமதமாகவே வந்தது தெரியவந்தது. இதை வைத்து பிரின்சிபலிடம் மீண்டும் விசாரித்ததில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று காலை சிறுமியை வீட்டிலிருந்து காலை 10.20 மணிக்கு அழைத்துக்கொண்டு சென்றதாக சிறுமியின் தாய் தெரிவித்தார். ஆனால் சிறுமி பள்ளிக்கு வரவே இல்லை என்று ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்தனர்.

    சிறுமியை பள்ளிக்கு செல்லும் வழியில் தான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காமல் கத்தியதால் கழுத்தை நிறுத்து கொலை செய்தேன் என்று பிரின்சிபல் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடலை தனது காரில் வைத்து பூட்டிவிட்டு மாலை 5 மணியளவில் பள்ளிக் சட்டத்துக்கு பின்னால் சிறுமியை புதைத்தாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரின்சிபலை போலீஸ் கைது செய்தது.

    • அந்த நபர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
    • சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.

    அவர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார்.

    பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் பலாத்கார முயற்சியின்போது அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தியது. குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார்.

    இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

    அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.
    • லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    பஞ்சாபில் வழிப்பறி  கொள்ளையர்களால் 12 வகுப்பு மாணவி இரு சக்கர வாகனத்தில் சுமார் 350 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப்  மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இளைய சகோதரியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 12 வகுப்பு படிக்கும் லக்ஷ்மி என்ற பெண் [18 வயது] சாலையில் நடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் லக்ஷ்மியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார். லக்ஷ்மியின் கையை பிடித்தபடி அந்த தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசென்ற அவர்கள் கடைசியாக அந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர்.

    சிறிதுதூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லக்ஷ்மியை பார்த்து மன்னிப்பு விடு [sorry] என்று சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன் சென்றுள்ளான். லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த லக்ஷ்மி மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டுளார். லக்ஷ்மியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளில் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிய போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 

    • பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் விவாதமாகியுள்ளது
    • அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்கணிப்பார்

    பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார். 

    • 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
    • ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    உத்தரகாண்ட மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சால்ட் பகுதியில் தனது சகோதரனுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    அவரிடம் இருந்து தப்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூறவே அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு போரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    • சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அரசுப் பள்ளி பியூன் கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூகாபாத் Farrukhabad பகுதியைச் சேர்ந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சிறுமி வசித்து வந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியபோது, உள்ளூர் கவுன்சில் அரசுப் பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வந்த பங்கஜ், அமித் என்ற மற்றொரு நபருடன் இணைந்து சிறுமியைக் கடத்தி ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இந்த விவகாரம் தற்போது தெரியவந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பங்கஜ் மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
    • நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தின் இன்னும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் வெவேறு மருத்துவமனைகளில் பாலியல் துன்புறுத்தல் அரங்கேறியுள்ளது.

    மேற்கு வங்கம் - பீர்பும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவு டியூட்டியில் இருந்த நர்ஸுக்கு குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் இருந்த நோயாளி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அந்த நோயாளிக்கு நேற்று இரவு டியூட்டியில் இருந்த நர்ஸ் குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் அளித்த நிலையில், அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்

    இதேபோன்று நேற்று இரவு மேற்கு வங்கம் ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் வைத்து 13 வயது சிறுமிக்கு மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர், நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், ஸ்கேன் அறையில் இருந்து தங்களது மகள் அழுதுகொண்டே ஓடிவந்து நடந்ததைச் சொன்னதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விஷயம் மருத்துவமனை கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை அவர்கள் தாக்க முயன்ற நிலையில் சமய இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நகரை மீட்டு கைது செய்தனர். இருப்பினும் மருத்துவமனையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. அதனை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'பெண்கள் பைக் ஓட்டும்போது துப்பட்டா அணிய வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
    • சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

    வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில்  சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.

    இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

     சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிறுமி பஸ்சில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட டிரைவர், கண்டக்டர் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    டேராடூன்:

    பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி டெல்லி வழியாக மீண்டும் மொராதாபாத் பகுதிக்கு வந்துள்ளார்.

    பின்னர் மொராதாபாத்தில் இருந்து மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு அதிகாலை 2.30 மணியளவில் வந்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமி பஸ்சில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட கும்பல் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 13-ந் தேதி அதிகாலையில் சிறுமியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

    கொட்வளி படேல் நகர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே அலங்லோலமான நிலையில் தவித்துக் கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுபற்றி சிறுவர்கள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுவர் நல காப்பக குழுவினர் அந்த சிறுமியை மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். முதலில் அந்த சிறுமி எதுவும் பேசாமல் இருந்தார்.

    இதையடுத்து அவருக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுந்தைகள் நல காப்பக குழுவினர் இதுபற்றி ஐ.எஸ்.பி.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி பஞ்சாப்பில் இருந்து டெல்லி சென்று விட்டு பின்னர் மொராதாபாத் திரும்பி உள்ளார். வழியில் டேராடூன் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் பஸ் டிரைவர் தர்மேந்திரகுமார் (வயது 32), கண்டக்டர் தேவேந்திரகுமார் (52), டிக்கெட் கவுண்டர் காசாளர் ராஜேஸ்குமார் சோன்கர் (38), மற்றும் தற்காலிக டிரைவர்கள் ரவிக்குமார் (34) ராஜ்பால் சிங் (57) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக டேராடூன் போலீஸ் அதிகாரி அஜய்சிங் கூறுகையில், அந்த சிறுமி மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால் முதலில் சரியான தகவல்களை கூறவில்லை. ஒரு முறை தான் மொராதாபாத்தை சேர்ந்தவள் என்றும், மறுமுறை பாட்டியாலாவை சேர்ந்தவள் என்றும் கூறினார். மறுநாள் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட போதுதான் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.

    தொடர்ந்து பெண் அதிகாரிகள் மூலம் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்ழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பஸ்சில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார்.
    • வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார்

    தெலுங்கானாவில் தனது தாயின் சடலத்துக்கு அருகில் அமர்ந்து இறுதிச் சடங்கு செலவுக்காக 11 வயது சிறுமி யாசகம் வேண்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் தன்னூர் [Thanoor] மண்டலத்தில் உள்ள பெல்தரோடா [Bheltharoda] கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காமணி [35 வயது]. இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார். துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

    நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த  நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பக்கத்துக்கு வீட்டுக் காரர்களிடம் சென்று துர்கா கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில்தான் தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தைக் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்கு காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் வேண்டியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின்பேரில்  அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலரும் காசு வழங்கி கங்காமணியின் இறுதிச் சடங்கை செய்ய உதவியுள்ளனர்.

    • சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    ×