என் மலர்
நீங்கள் தேடியது "Sexual assault"
- ஒடிசா கடற்கரையில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- இதுதொடர்பாக 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரையில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆண் நண்பருடன் அப்பெண் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரில், பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தங்களை நெருங்கி நண்பரை கட்டிப்போட்டு, தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் குற்றவாளிகள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒடிசாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதல் மந்திரியே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம் என பதிவிட்டுள்ளார்.
- பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கியது.
- அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரையில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு சிறுவர்கள் உட்பட பத்து பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆண் நண்பருடன் அப்பெண் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கி, நண்பரை கட்டிப்போட்டுவிட்டு, பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.
காவல்துறையினர் முதலில் ஏழு பேரையும், பின்னர் மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டனர். மூவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், மற்ற ஏழு பேர் அதற்கு துணை நின்றனர் என்றும் எஸ்பி சரவண விவேக் எம் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டதால், அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
- சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
- அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியின் நேரு விஹார் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு (ஜூன் 7) இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் முகத்தில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி அருகில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்று 2 மணி நேரமாக திரும்பாததால் பெற்றோர் அவளை தேடத் தொடங்கினர். நேரில் பார்த்தவர்கள், சிறுமி அவளது வீட்டுக்கு 200 மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து வீட்டில் நுழைவதை கண்டதாக தெரிவித்தனர்.
எனவே சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சூட்கேஸில் இரத்த வெள்ளத்தில், அரை நிர்வாணமாகக் கிடந்த தனது மகளை தந்தை கண்டார்.
இக்குற்றத்தை அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு டெல்லி, காஜியாபாத், மீரட், அலிகர் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலை ஏற்பட்டுள்ளது.
- மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தினார்.
- சிறுமியின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலையில், பரபரப்பான ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தீபக் வர்மா என்பவர் கடத்திச் சென்றார்.
அதிகாலையில் எழுந்த குடும்பத்தினர் சிறுமியைக் காணாததால் கவலையடைந்தனர். பின்னர், ஒரு வழிப்போக்கர் சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். சிறுமி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீஸ் ஐந்து சிறப்பு குழுக்களை அமைத்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி தீபக் வர்மா அடையாளம் காணப்பட்டார்.
தீபக் இருக்குமிடைமறிந்து அங்கு சென்ற போலீஸ் சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது தீபக் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் வர்மா பலத்த காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
- இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டினர்.
- பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க உதவுவதாக அந்த பெண்ணுக்கு உறுதியளித்தார்.
இதற்காக நான்காயிரம் ரூபாய் கேட்ட அவர், ஆசிரமத்தில் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் கடைக்கு இடம் தருவதாகவும் கூறினார். அவரது வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட பெண், ஜனவரி 28 அன்று அந்த முதியவருடன் ஆசிரமத்திற்குச் சென்றார்.
அங்கு போதைப்பொருள் கலந்த லட்டுவை சாப்பிடக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட பிறகு சுயநினைவை இழந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
பின்னர், அந்த முதியவர், ஆசிரமத்தின் தலைமை சாமியார் மற்றும் இரண்டு பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
பயந்துபோன அவர், இறுதியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடந்த வியாழக்கிழமை தெற்கு துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு துணை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார். காணொளியில் காணப்படும் ஆசிரம அறையை சனிக்கிழமை ஆய்வு செய்தோம். நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம், மேலும் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.
- வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கர்நாடகாவின் பெல்காமில் 15 வயது சிறுமி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிறுமியுடன் டிசம்பர் 2024 இல் இளைஞர் ஒருவர் நட்பு கொண்டார். பின்னர் அந்த இளைஞன் சிறுமியை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தான்.
அதை மொபைல் போன் கேமராவில் பதிவு செய்த அவன் வீடியோவை வைரலாக்குவேன் என்று மிரட்டி சிறுமியை மிரட்டி வந்தான்.
பின்னர் ஜனவரி 2025 இல், அதே நபர்களில் மூன்று பேர் மீண்டும் சிறுமியை வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த முறை பாதிக்கப்பட்ட சிறுமி தனது துயரத்தை குடும்பத்தினரிடம் கூறினார். குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று காவல் ஆணையர் போர்ஸ் பூஷன் குலாப்ராவ் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- போதைப்பொருள் கலந்த இனிப்புகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 23 வயது Influencer-க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
காவல்துறை அறிக்கைப்படி, 40 வயது பெண் தனது ஆடை பிராண்டை விளம்பரப்படுத்த சமூக ஊடக Influencer தேடும் போது, 2021 இல் அந்த இளைஞரை முதன்முதலில் தொடர்பு கொண்டார். அதன்பின் இருவரும் தொழில்ரீதியான தொடர்பில் இருந்தனர்.
இதற்கிடையே ஒரு பிராண்ட் படப்பிடிப்புக்காக இருவரும் சென்றுள்ளனர். பயணத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்புகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அவரது பணப்பையில் இருந்து பணத்தை திருடி, அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, படங்களை காட்டி அந்தப் பெண்ணை ஜம்முவுக்கு பயணிக்க அந்த இளைஞர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் இரண்டரை வருட காலமாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 9 மாதமாக அவர் சிறையில் உள்ள நிலையில் அவரின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பின் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் .வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "ஒரு கையை தட்டினால் ஓசை வராது. எந்த அடிப்படையில் ஐபிசி பிரிவு 376 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தீர்கள்.
அந்த பெண் ஒன்றும் குழந்தை அல்ல. அந்தப் பெண்ணுக்கு 40 வயது. அவர்கள் இருவரும் ஜம்முவுக்கு ஒன்றாகச் சென்றுள்ளனர்.
ஏன் 376 ஐப் பயன்படுத்துகிறீர்கள். இந்தப் பெண் ஜம்முவுக்கு ஏழு முறை சென்றுள்ளார், கணவருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பதால், வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததால், இடைக்கால ஜாமீன் வழங்க இது பொருத்தமான வழக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
குற்றவாளியை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது, பெண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று பெஞ்ச் கூறியது.
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
- குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் 45 வயது பழங்குடிப் பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்வா தாலுகாவில் உள்ள ரோஷ்னி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராஜேஷ் ரகுவன்ஷி கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
கண்ட்வா மாவட்ட மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அறிக்கை வந்த பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.
இறந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் குர்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெள்ளிக்கிழமை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎஸ்பி தெரிவித்தார்.
- இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் பெண்ணை தரதரவென இழுத்து சென்றனர்.
- அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது
அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் சிறை காவலர்களான ஹரேஷ்வர் கலிதா (45) மற்றும் கஜேந்திரா கலிதா (50) ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் அவ்வழியே சென்ற இளம்பெண்ணை அவர்கள் இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்து சென்றனர்.
அந்த பெண் கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. இதன்பின்பு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, அந்த வழியே போலீசார் ரோந்து பணிக்காக வந்துள்ளனர்.
அவர்கள் சிறை காவலர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது
- ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
- பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.
பின்பு பெலகாவியில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் அந்த சிறுமியை இறக்கிவிட்டார்.
வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது. இந்த விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அந்த வழக்குகளையும் போலீசார் தூசி தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக டி.ஜி.பி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அிறவித்துள்ளது. கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
- தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர்
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் காருக்குள் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது தோழி கொலை செய்யப்பட்டார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தீப், அமித் மற்றும் கௌரவ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அந்த 17 வயது சிறுமியையும் அவரது 19 வயது தோழியையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிரேட்டர் நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டதை உணர்ந்து பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஓடும் காரிலிருந்து 19 வயது பெண்ணை குற்றவாளிகள் கீழே தள்ளிவிட்டனர். மேலும் 17 வயது சிறுமியை மூவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
பின்னர் அலிகார்-புலந்த்ஷர் நெடுஞ்சாலை அருகே குற்றவாளிகள் மூவரும் பயணித்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர். சாலையில் விழுந்து படுகாயமடைந்த 19 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.