என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child Sexual Abuse"

    • தனது மூன்று வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது சிறுமி 4 சிறுவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
    • மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி, நாட்டின் மகள்கள் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    உத்தரப் பிரதேசத்தில் நான்கு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை குர்ஜா நகர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிறுமியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜூன் 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது மூன்று வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது சிறுமி அக்கம் பக்கத்தை சேர்ந்த 4 சிறுவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது இது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாயாரின் புகாரின் பேரில், ஜூலை 2 ஆம் தேதி சிறுவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக குர்ஜா வட்ட அதிகாரி பூர்ணிமா சிங் தெரிவித்தார். இந்த சூழலில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக ஒடிசாவில் ஆசிரியரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளான கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விமர்சித்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி, நாட்டின் மகள்கள் எரிந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆனாலும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் மௌனம் நாட்டிற்கு தேவையில்லை. பதில்கள் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. #NoMoreChildSexualAbuse #Cuddalore
    கடலூர்:

    சிதம்பரம் அருகே கடந்தாண்டு 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், பழனிசாமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    குற்றத்துக்காக அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். 
    ×