search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர்"

    • கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர்.
    • கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரையில் நேற்று இரவு பில்லாலி தொட்டியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் விழா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென்று 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சு அரிவாளுடன் மண்டபத்திற்கு வந்தனர்.

    அங்கு நடைபெற்ற ஒலிபரப்பான பாடலுக்கு கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை சேதம் செய்து அனைவருக்கு அச்சமூட்டினர்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள், திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளர் தி.மு.க. நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் தனது வணிக நிறுவனத்தை மூடிவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சன் பிரைட் பிரகாஷ் மீது கத்தியால் தாக்கியதில் வாய், மூக்கு பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில தனியார் மருத்துவமனையில் சன் பிரைட் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி தி.மு.க.வி னரிடையே பரவியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீசார் விசாரணை செய்ததில் இந்த 3 பேரும் பில்லாலி தொட்டி எய்தனூரை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தகவல் அறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்த சன் பிரைட் பிரகாஷை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் பொதுமக்க ளை மோட்டார் சைக்கிளில் சென்று அச்சுறுத்திய நிலையில் எம்.எல்.ஏ ஆதரவாளரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதும க்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார்.
    • இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜோகண்ணால் தேவ கிருபை. தனது 2 மகன்களுடன் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த எனது கணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாக அங்கிருந்து தெரிவித்தனர்.

    பின்னர் எனது கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் எனது கணவரின் உடல் தொடர்பாக இதுநாள் வரை எதும் தெரியவில்லை. இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை. ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி, எனது கணவர் தமிழரசனின் உடலை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது.
    • டிரைவர் பலி, 22 பேர் படுகாயம்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பச்சையம்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கன் நகர் மலட்டாறு பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் அதிவேகத்துடன் மோதியது. இதில்பஸ்சின் முன் பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் ஆக்சில் முறிந்து டயர் கழன்று ஓடியது.

    மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் ராஜா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது பஸ் மோதிய வேகத்தில் டிரைவர் மீது கவிழ்ந்தது. இதனால் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் கண்டக்டர் திருக்குவளையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை ராமாபுரம் சொர்ணம் (வயது 48), கதிரேசன் (25), காரைக்கால் அஜிலியா மரியான் (65), 4 வயது பாத்திமா, 11 மாத குழந்தை ரேஷ்மா உட்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சாலையில் கவிழ்ந்த பஸ்சை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்தினர். உயிரிழந்த ராஜா உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல்.
    • சி.பி.சி.ஐ.டி போலீசார் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.

    பண்ருட்டி:

    கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ் உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மாதேஷ், மற்றும் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை உட்பட 11 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் மாதேஷ் கூறும்போது, `பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூர் பகுதியில் மூடப்பட்ட பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்று அதிகாலை சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை கைப்பற்றினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் முன்னிலையில் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.

    • போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்காக மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டது. அந்த சாலையில் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையிலான நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஏற்கனவே மனு அளித்து விட்டோம். இதனை தொடர்ந்து மேடை, பேனர் மற்றும் கொடி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக திடீரென்று நள்ளிரவில் மேடை, பேனர் ஆகியவற்றை அகற்ற வந்துள்ளீர்கள்? என போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதால் மேடையை அகற்றுகிறோம் என கூறிய போலீசார், மேடையை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி கொள்ளவும் என அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க. கொடிகளை அகற்ற முயன்ற போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் தாமாக முன்வந்து 300-க்கும் மேற்பட்ட கொடிகளை அகற்றினார்கள்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, நள்ளிரவில் மேடை, கொடிகள், பேனர்களை அகற்றிய சம்பவம் கடலூர் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர்.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து எங்கள் ஊருக்கு இழுத்து செல்ல போகிறோம் என கூறினர். அப்போது திடீரென்று அவர்களிடமிருந்த கயிறை தாழங்குடா மீனவர்களின் படகில் கட்டினார்கள்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாழங்குடா மீனவர்கள், எங்கள் படகில் எதற்கு கயிறு கட்டுகிறீர்கள்? கடலில் மீன் பிடிப்பதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என கேட்டனர். அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் சஞ்சய்குமாரை தாக்கினர். இதில் சஞ்சய் குமார் பலத்த காயமடைந்தார். மேலும், தாழங்குடா மீனவர்களின் படகில் இருந்த மீன்களை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சிடைந்த தாழங்குடா மீனவர்கள், தங்கள் படகில் கட்டப்பட்டிருந்த கயிறை அறுத்து விட்டு, பின்னர் அங்கிருந்து படகில் தப்பி கடலூர் பகுதிக்கு வந்தனர். பலத்த காயமடைந்த சஞ்சய்குமாரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவல் அறிந்த போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட வீராம்பட்டினம் மீனவர்கள் யார்? என்பது குறித்து கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
    • இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கிய நிலையில் இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய பெய்தது.

    மேலும், மழை பெய்ய தொடங்கிய போது பலத்த காற்று வீசியதால் கடலூர் அடுத்த வழிசோதனை பாளையம், ராமாபுரம், புதுக்கு குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமிட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், திடீர் காற்றுடன் கூடிய மழையால் வாழைமரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்து வந்த வாழைத்தார்கள் வீணாகிப்போனது.

    இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழை நீர் தேங்கி தற்போது குலம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் திரும்பி சென்றனர். மேலும், மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது மட்டுமின்றி கடலூர் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    கடலூர்-79.2

    வானமாதேவி-72.8

    கலெக்டர் அலுவலகம்-62.6

    வேப்பூர்-53.0

    பண்ருட்டி-49.0

    எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-46.0

    குப்பநத்தம்-32.8

    விருத்தாசலம்-32.0

    கீழச்செருவாய்-30.0

    காட்டுமயிலூர்-20.0

    வடக்குத்து-16.0

    குறிஞ்சிப்பாடி-15.0

    தொழுதூர்-13.0

    ஸ்ரீமுஷ்ணம்-10.0

    மீ-மாத்தூர்-10.0

    பெல்லாந்துறை-8.4

    சேத்தியாதோப்பு-7.4

    லக்கூர்-6.4

    கொத்தவாச்சேரி-6.0

    பரங்கிப்பேட்டை-5.9

    லால்பேட்டை-4.0

    காட்டுமன்னார்கோயில்-2.4

    சிதம்பரம்-2.0

    அண்ணாமலைநகர்-1.6

    புவனகிரி-1.0

    என கடலூர் மாவட்டத்தில் 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.
    • வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.

    விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பேசினர்.

    நிகழ்ச்சியில், பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும். பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள். மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், கண்காட்சியில் பலாச்சுளை சாறு, பலாவத்தல், பலாச்சுளை, பலாகொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)ஆகியவை இடம் பெற்றது.

    நாட்டு பலா கன்றுகள், பலா சாக்லேட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், கண்காட்சியில் இடம் பெற்றது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. மேலும் மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சி இடம்பெற்றது.

    முடிவில் அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி பலா மேம்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். 

    • கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன.
    • தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.

    இன்றைய காலகட்டத்தில் நிலவுக்கு சென்று வரும் நிலைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகார மேடு கிராமம், வளர்ச்சியின்றி பின்தங்கியுள்ளதாக குமுறுகின்றனர் ஊர் மக்கள்.

    கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன. கிராம மக்கள் சொல்லும் சொல் கேட்டால் எங்கள் கிராமத்தில் வாழ எங்களுக்கு உகந்த இடமில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.


    காரணம் என்னவென்றால், குடிக்க நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு மற்ற கிராமங்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாய விலைக்கடை கூட இல்லை என குமுறல் சத்தம் அதிகாரிகளுக்கு கேட்காமல், அங்குள்ள மக்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    எனவே தொழில்நுட்ப ரீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில்.. தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக சின்னக்காரமேடு கிராம மக்கள் புலம்புகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் என்பதால் பெண் தரக்கூட தயங்குவதாக நொந்துபோய் உள்ளனர் சின்னகார மேடு கிராம மக்கள்.



    • ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி.
    • கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது, தெற்கு பிச்சாவரம். இது சுரபுன்னை மரங்களும், தில்லை மரங்களும், அடர்ந்து காணப்படும் ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி. பிச்சாவரம் கடல் பகுதி வழியாக இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்து வந்தனர், ஆங்கிலேயர்கள் ஒரு முறை பேஸ்பரங்கி என்ற ஆங்கிலேயர், வணிகம் செய்வதற்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கிச் சென்றார்.

    பிச்சாவரம் கடற்கரையை கடக்கும் பொழுது கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது. 'இந்த வணிகம் நடைபெறவில்லை என்றால் தனக்கு வாழ்க்கையே கிடையாது'என்று வேதனைப்பட்ட அந்த ஆங்கிலேயர், இருள் சூழ்ந்த வேளையில் தில்லை நடராஜர் ஆலயம் இருக்கும் திசையான மேற்கு நோக்கி, 'யாராவது காப்பாற்றுங்கள். நான் சரக்கு கொண்டு வந்த கப்பல் தரை தட்டி விட்டது. இந்த கப்பலை மீட்க முடியவில்லை என்றால், நான் வாழ்க்கையை இழந்தவன் ஆகிவிடுவேன்' என்று கதறி அழுதார்.

    அப்பொழுது இருளில் ஒரு ஒளி தெரிந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளி வந்த திசையை பார்த்தபோது, அது நடந்து செல்லும் வகையில் மணல் பரப்பாக இருந்தது. அந்த மணல் பரப்பில் இறங்கி நடந்தபோது, ஓரிடத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன், ஆங்கிலேயரிடம் "உங்கள் கப்பலை நீங்கள் மீட்டெடுத்து செல்லலாம். அதற்கு என் அருள் உண்டு. ஆனால் நீங்கள் வணிகம் செய்து விட்டு வரும் பொழுது, எனக்கு இங்கு ஒரு ஆலயம் கட்டி விட்டுச் செல்லுங்கள்" என்றான்.

    உடனே அந்த ஆங்கிலேயர், "நிச்சயமாக என் கப்பல் மீண்டு, நான் நல்லபடியாக வணிகத்தை முடித்தவுடன், இங்கே ஒரு ஆலயத்தைக் கட்டி விட்டுத்தான் என்னுடைய சொந்த நாடு திரும்புவேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். மறுநிமிடமே அந்தச் சிறுவன் மறைய, ஆங்கிலேயேருக்கு வந்த சிறுவன் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது.

    அவர் மீண்டும் கப்பலுக்கு திரும்பியபோது, தரை தட்டிய கப்பல் சற்றே நகர்ந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர் ஆச்சரியம் அடைந்தார். அவர் மகிழ்ச்சியில் வணிகம் செய்யும் நாட்டுக்கு கப்பலை செலுத்தினார். அங்கே எதிர்பார்த்ததை விட, வணிகம் மிகவும் நல்லபடியாக நடந்தது. கூடுதல் லாபத்தையும் பெற்றுத்தந்தது. வணிகம் செய்து கிடைத்த லாபத் தொகையில், அங்கேயே கோவில் கட்டுவதற்கு தேவையான, கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கப்பலில் திரும்பினார்.

    தெற்கு பிச்சாவரம் வந்த அவர், அந்த ஊர் மக்களிடம் தனக்கு நடந்து பற்றி கூறினார். அதைக் கேட்டதும் அந்த ஊர் மக்கள் ஆச்சரியம் அடைந்து, 'ஆகாச சாஸ்தா எனப்படும் அய்யனார்தான் உங்களுக்கு உதவி செய்து இருக்கிறார். அவரின் விருப்பப்படியே நீங்கள் ஆலயம் கட்ட முடிவு செய்தால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்' என்றனர்.

    உடனடியாக அந்த பகுதியில் ஆங்கிலேயர் கோவில் கட்டத் தொடங்கினார். அப்பொழுது அவரது கனவில் வந்த அய்யனார், "நான் இங்கு இந்த ஊரை காவல் காத்து வருகிறேன். எனக்கு காவலாய் என்னோடு இருக்கும் செம்பருப்புக்கும், என் ஆலயத்திற்கு முன்னால் ஒரு சன்னிதி அமைத்து விடுங்கள். எங்கள் இருவருக்குமே உருவம் வேண்டாம். நாங்கள் அரூபமாகவே அருள்பாலிப்போம்' என்று கூறினாராம்.

    அவர் கூறியது போலவே ஆலயத்தைக் கட்டி முடித்தார், ஆங்கிலேயர். சிறுவனாக வந்து உதவியதால், அய்யனாரை 'குட்டியாண்டவர்' என்று பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். அதுவே அய்யனாரின் திருநாமமாக இன்றும் உள்ளது. கோவில் கட்டி முடித்து விட்டு அந்த ஆங்கிலேயர் இத்தல சாஸ்தாவை வணங்கியபோது, ஒரு அசரீரி ஒலித்தது. அந்தக் குரல், 'கோவில் கட்டியது போக, எத்தனை கருங்கற்கள் மீதி இருந்தாலும் அதை உன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடு. இங்கே வைக்காதே' என்று கூறியதாம். 'எதற்காக அப்படிச் சொல்கிறார், சாஸ்தா' என்பது புரியாமல், மீதமிருந்த கருங்கற்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார், ஆங்கிலேயர். அவது சொந்த ஊருக்கு திரும்பியபோது, அந்த கருங்கற்கள் அனைத்தும் தங்கமாக மாறியிருந்ததாம்.

    குட்டியாண்டவர் கோவில் கருவறையில், கருங்கல் சுவரில் மூன்று அணிகள் மட்டுமே இருக்கும். அவைகளுக்கு தான் எல்லா விதமான பூஜைகளும் செய்யப்படுகிறது. கோவிலின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் முதலில் காணப்படுவது அணிவகுத்து நிற்கும் யானைகள், குதிரைகள். அதன் எதிரே அய்யனாரின் காவலரான செம்பருப்பு சன்னிதி உள்ளது. இவருக்கு உருவம் கிடையாது. கருவறையில் வேல்கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. அதை வணங்கி விட்டு நேராக சென்றால், மகாமண்டபத்தில் பலிபீடம், மூன்று யானைகள் காணப்படுகின்றன. அதைக் கடந்து அர்த்த மண்டபம் சென்றால் துவார பாலகர்கள் கம்பீரமாக நிற்க உள்ளே, குட்டியாண்டவர் அரூபமாக தரிசனம் தருகிறார்.

    இங்கு கருவறையில் குட்டியாண்டவர் அரூபமாக இருப்பதால் பூரண - புஷ்கலா இருவரும், குட்டியாண்டவர் சன்னிதிக்கு வலது பக்கம் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். அய்யனார் எல்லாத் தலங்களிலும் பூரண புஷ்கலாவோடுதான் காட்சி தருவார். ஆனால் இவ்வாலயத்தில் அவர்கள் தனித் தனியாக காட்சி தருவது சிறப்பம்சமாகும். இக்கோவிலை சுற்றிலும் வலது பக்கம் விநாயகர், காசியம்மன், கருப்புசாமி, ராகு- கேது, விநாயகர், பாவாடைராயன் முனீஸ் வரன், சங்கிலிவீரன், அக்னிவீரன் சன்னிதிகளும் உள்ளது.

    கடற்கரையை ஒட்டிய கோவில் என்பதால், இங்கு மீனவர்கள் குல தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள். தாங்கள் தொழிலுக்கு செல்லும் முன் இங்கு வந்து வணங்கி விட்டுச் செல்வதால் தங்கள் தொழில் சிறப்பாக நடப்பதாகவும், அதனால் அதிக அளவில் லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இக்கோவிலைச் சுற்றிலும் எல்லாவிதமான காவல் தெய்வங்களும் இருப்பதால், இங்கு குலதெய்வ வழிபாடுகள் தினந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கோவிலை ஐந்து முறை சுற்றி வந்து வணங்கினால் திரு மணத்தடை, பிள்ளைப்பேறு, கடன்களால் அவதி என அனைத்து பிரச்சினைகளும் தீரும். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் பேருந்தில் சென்றால், தெற்கு பிச்சாவரத்தில் இறங்க வேண்டும். அங்கே கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது, இந்த ஆலயம்.

    • 20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.
    • வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    ஸ்தல வரலாறு

    கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது.

    20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.

    பெருமாள் கடலில் குளித்து விட்டு அந்த குன்றின் மீது வந்து அமர்ந்ததாகவும் அப்போது தனது வலது கையில் உள்ள சக்கரத்தை அங்கு வைத்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் கோவில் சுயயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது.

    கோவிலில் உள்ள சக்கரம் 3 அடி உயரம் உள்ளது.

    இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 1 அடி உயரம் மட்டுமே இருந்தாகவும் அது தானாக வளர்ந்து இப்போது இந்த உயரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    கோவிலில் சித்திரை வருட பிறப்பின் போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

    ஆனி மாதத்தில் சுதர்சன ஜெயந்தியும், சிறப்பு யாகமும் நடக்கின்றன.

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமை கருட வாகனசேவை மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    தைமாதம் 3-ம் வெள்ளி, 5-ம் வெள்ளி கிழமைகளில் அரசு-வேம்பு திருக்கலயாணம் நிகழ்ச்சியும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் வழிபடும் போது ஒவ்வோரு விசேஷ பலன் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

    செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இடப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும், வியாழக்கிழமை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும், கல்வி யோகமும் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    குழந்தை இல்லாதவர்களும், திருமணதடை உள்ளவர்களும் வெள்ளிக்கிழமை வழிபட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பில்லிசூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை வழிபட்டால் அவர்கள் பிரச்சினை தீரும்.

    • பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
    • 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.

    1. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்திக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று ரதோஸ்வம் நடைபெறுகிறது.

    2. பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.

    3. கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. புதுவை மாநிலம், தமிழ்நாடு மாநிலம் இவர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.

    4. 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது.

    5. ஸ்ரீ ராஜ ராஜசோழன், விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர்களாலும் சில கைகங்கர்யங்கள் செய்யப்பட்டுள்ளன.

    6. இந்த கோவிலுக்கு பின்புறம் ஸ்ரீமத் அகோபில மடம் 4-வது பட்டம் ஸ்ரீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது.

    ×