search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50"

    • ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது.
    • அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.

    சத்தியமங்கலம்,

    சத்தியமஙகலம் புலிகள் காப்பகத்துக்குட் பட்ட பவானிசாகர் வனப்பகுயில் தெங்குமரகடா செல்லும் வழியில் அடர்ந்த வன ப்பகுதியில் கெஜலெட்டி பகுதி அமைந்துள்ளது.

    இந்த அடர்ந்த வனப்பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ண ராயர், பொம்மா தேவி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் உப்பிலி நாய்க்கர் சமுதாய மக்களின் குல தெய்வமாக இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது. இந்த கோவில் விழாவையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநில ங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    இதையொட்டி இந்தா ண்டுக்கான ஆதி கருவண்ண ராயர் பொம்மா தேவி கோவில் 3 நாள் மாசி மாத பொங்கல் விழா நேற்று மதியம் கணபதி ேஹாமம் செய்யப்பட்டு தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி னர்.

    தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்கள் பஸ், லாரி, கார், வேன் மற்றும் பல்வேறு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையொட்டி பவானி சாகர் வனத்துறை சார்பில் வன சரகர் சிவகுமார் தலை மையில் காராச்சி கொரை வன சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிர சோத னைக்கு பிறகே அனு மதிப்பட்டு வருகிறார்கள்.

    இதைெயாட்டி இன்று (திங்கட்கிழமை) காலை பொங்கல் விழா நடந்து வருகிறது. இதில் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.

    இதை ெதாடர்ந்து இன்று மாலை முதல் கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆடு, கோழிகளை பக்தர்கள் பலியிட்டு வழிபடுகிறார்கள். தொடர்ந்து இன்று மாலை முதல் விடிய, விடிய கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் ஆடு, கோழிகளை கொண்டு வந்திருந்தனர். அவற்றை வனப்பகுதியில கட்டி பராமரித்து வரு கிறார்கள்.

    இதை தொடர்ந்து சுவாமிக்கு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை அடர்ந்த வனப்பகுதியில் சமைத்து சாப்பிடுகிறார்கள். இதை யடுத்து நாளை காலை சிறப்பு பூஜை நடக்கிறது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாத வாறு வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீ சார் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறார்கள்.

    ×