என் மலர்
ஒடிசா
- விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.
ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.
அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.
ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.
- பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
- பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தங்களுடைய கட்சி ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் சேவையாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் தந்தையும், ஒடிசா முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கால் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சியின் 29-வது தொடக்க நாளான இன்று நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள், தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல. இதை நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். ஒடிசாவின் விருப்பம் மற்றும் பெருமையில் வேரூன்றிய மக்கள் இயக்கம். பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் குரல் கொடுக்கும்.
தேர்தல் தோல்வி ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அரசியலில் அமைதி காப்பது மிகவும் முக்கியமானது. கட்சி தொண்டர்களின் கடின உழைப்பு, கமிட்மெண்ட் ஆகியவற்றில் நான் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன். வலுவான ஒடிசாவை எழுப்ப இன்றைய சவால்களை நாளையை வாய்ப்புமாக மாற்ற எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
- பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாஜ்பாய் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமரான பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.
- நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும்.
- இந்த தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் ஆவார்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு எண்ணற்றோர் விண்ணப்பிப்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது.
அவ்வகையில் ஒடிசாவில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இதனை பேர்களுக்கு தேர்வு அரை ஒதுக்க முடியாமல் விமான ஓடுதளத்தில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
விமான ஓடுதளத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட 8,000 பேர் தேர்வெழுதினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஊர்க்காவல் படை பணிக்குத் தினசரி ரூ.612 ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது மாதத்திற்கு சுமார் ரூ.18,360 ஆக வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும். ஆனால் தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- ஆண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே பொறுப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக முகமது யூசுப் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னீம் மிர் உடன் மோதினர்.
முதல் செட்டை 18-21 என இழந்தார் உன்னதி ஹூடா. இதனால் சுதாரித்துக் கொண்ட் அவர் அடுத்த இரு செட்களை 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இறுதிப்போட்டியில் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஈஷாராணி பரூவா உடன் மோதுகிறார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் டிடாரோன் கிளிபைசன் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 25 நிமிடங்களில் முடிவடைந்தது.
- எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒடிசாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் மந்திரி, மந்திரிகள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17-21, 21-18 என ஜப்பானின் அனா இவாகியை வீழ்த்தினார்.






