search icon
என் மலர்tooltip icon

    ஒடிசா

    • இரவு 9 மணியளவில் பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புரியில் இருந்து நேற்று ஒரு பஸ் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணியளவில் அந்த பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.

    இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

    • நாடு முழுவதும் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
    • வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஒடிசாவில் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

    புவனேஸ்வர்:

    தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசாவின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஸ்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்பம் தொடர்பாக வெப்பச் சோர்வு, உஷ்ணப் பிடிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.

    அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்களுக்கான பயிற்சியை சமீபத்தில் நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

    • ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
    • சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இங்கு மே மாதம் 13-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 4 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநில முதல்-மந்திரியும், பிஜூ ஜனதாதள கட்சி தலைவருமான நவீன்பட்நாயக் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். தொடர்ந்து 5-வது முறையாக அவர் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

    இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் இரு கட்சிகள் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என அம்மாநில தலைவர் அறிவித்தார்.

    இதையடுத்து அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் 15 பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் மற்றும் 72 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் நவீன்பட்நாயக் தொடர்ந்து 6-வது முறையாக ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஏற்கனவே இவர் 5 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5-வது தடவையாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். நீண்ட நாள் முதல்-மந்திரியாக இருந்து வருபவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    தற்போது மீண்டும் அவர் ஹிஞ்சிலி தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார்.

    இக்கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னாள் மனிதவள தலைவராக இருந்த சாண்ட்ரூப் மிஸ்ரா போட்டியிடுகிறார். விருப்ப ஓய்வு பெற்ற அவர் பிஜூ ஜனதாதள கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 3 முறை எம்.எல்.ஏவாகவும், மந்திரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் பூரி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ரவுத்ரே மகன் மன்மத் ரவுத்ரே புவனேஸ்வர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். பிஜு ஜனதா தள கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் மற்றும் சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
    • பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.

    புவனேஸ்வர்:

    கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    • அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டன.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதா உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 21 தொகுதிகளை கொண்ட மக்களவைக்கும், 147 இடங்களை கொண்ட சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    2009-க்கு பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இரு கட்சி தலைவர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    147 சட்டமன்ற இடங்களில் 100 இடங்களுக்கு மேல் பிஜு ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது. ஆனால் பா.ஜனதா அதிக இடம் கேட்கிறது.

    அதேவேளையில் 21 மக்களவை இடங்களில் 14-ல் பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. பா.ஜனதாவின் இந்த கோரிக்கையை ஏற்க பிஜு ஜனதா தளம் மறுத்துவிட்டது.

    மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் அவர் கூறுகையில் "கூட்டணி குறித்து பேசவில்லை. ஒடிசா தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் இறங்க போகிறது. டெல்லியில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றம் தேர்தலுக்கான எங்களுடைய தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. எங்களுடைய பலத்துடன் தனியாக நிற்போம்" என்றார்.

    கடந்த மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜனதா 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

    • ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
    • குடிசைவாசிகள் நில உரிமை, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனரான பில்கேட்ஸ் இன்று காலை ஒடிசா மாநிலம் புவேனஸ்வரில் உள்ள பிஜு ஆதார்ஷ் காலனிக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளை பார்வையிட்டுள்ளார். மேலும், அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் உரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

    இது தொடர்பாக மாநில வளர்ச்சி துறைக்கான கமிஷனர் அனு கார்க் கூறுகையில் "குடிசைவாசிகள் நில உரிமை பெற்றது, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி பெற்றுள்ளதை அவருக்கு நேரில் சென்று காண்பித்தோம். குடிசை பகுதிகள் நவீன காலனியாக மாற்றம் அடைந்ததை பார்த்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்" என்றார்.

    மாநில நகர்ப்புற வளர்ச்சிதுறையின் செயலாளர் ஜி மதி வதனன், "மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்கள் உடன் பில்கேட்ஸ் பேசினார்" என்றார்.

    பில்கேட்ஸ் உடன் பேசிய பெண்மணி ஒருவர் "நாங்கள் இதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கை, தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்" என்றார்.

    நேற்று ஒடிசா வந்த பில்கேட்ஸ் பின்னர் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

    ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகனுமான ஆனந்த் திருமண விழாவில் பில் கேட்ஸ் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள் இருக்கிறார்கள்.

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
    • நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.

    புவனேஷ்வர்:

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:

    உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.

    உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.
    • புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஒடிசா:

    ஒடிசா மாநிலத்தில் இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புஜ்ஜி ஆம்மா (52) என்ற பெண் புதைப்பதற்கு முன்பு கண்விழித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பிப்ரவரி 1-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புஜ்ஜி, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலையில், புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மயானத்தில் புதைப்பதற்கு முன்பு அவர் எழுந்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அதே வாகனத்திலேயே மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    ×