என் மலர்

    நீங்கள் தேடியது "Treatment"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • காது, மூக்கு, தொன்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் கிராமத்தில் அல்-ஹிதானா மெட்ரிகு லேசன் பள்ளியில், புதிய பாதை அறக்கட்ட ளையும், விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமிற்கு கிளியனூர் முத்தவல்லி அபுல் ஹசன் தலைமை வகித்தார்.

    ஜாமியா மஸ்ஜித் நாட்டாமை எம்.பி.ஹலில், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது வரவேற்றார்.

    இதில், பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல்ம ருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், காது- மூக்கு- தொன்டை மருத்துவம், எலும்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை புதியபாதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செல்வேந்திரன், ரகோத்குமார் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    மெலட்டூர்:

    தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தஞ்சை அவர் லேடி ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

    முகாமில் புனித சந்தன மாதா ஆலய பங்குதந்தை விக்டர்தாஸ் முன்னிலை வகித்தார்.

    இதில் ராராமுத்திர கோட்டை ஊராட்சி தலைவர் சோழன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய மாதா ஆஸ்பத்திரி ஷோபா, வின்மலர் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது,

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சென்னையி லிருந்து வருகை புரிந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிப்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அரசு மருத்துவ மனை டெங்கு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பெங்களூரில் இருந்து வருகை புரிந்தவருக்கும், சீர்காழி சேர்ந்த மற்றொருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவம னையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது.

    டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள் , பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தே ங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறு த்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புஷ்பாம்பாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 73). இவரது மனைவி புஷ்பாம்பாள் (70). இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை புஷ்பாம்பாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை மன்னார்குடி ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.
    • இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் சென்னத் நிஷா. இவரது மகன் பாபா பக்ரூதீன். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். பாபா பக்ரூதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட சென்னத் நிஷா பின்னால் அமர்ந்து இருந்தார்.

    இவர்கள் மோட்டார் சைக்கிள் நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்ற போது, எதிரே நாகூரைச் சேர்ந்த நஜிம் முஹமது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தோஷ், சதிஸ் ஆகிய 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பாபா பக்ரூதின் மற்றும் சென்னத் நிஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 3 வாலிபர்களும் நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.

    இதனால் டாக்டர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாமல் எப்படி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொது மக்களிடையே கேள்வி எழுந்தது.

    மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு நாகை மட்டுமன்றி இன்வெட்டர் இல்லாத அனைத்து அரசு ஆஸ்பத்திகளுக்கும் இன்வெட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.

    திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

    பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 24). கூலித்தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த தண்டபாணி நேற்று முன்தினம் காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக

    ல் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் குழு சாதனை படைத்தது.

    மதுரை

    தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை யாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தில் நீரிழிவு, சிறுநீரக நோய், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் உள் ளிட்ட பல்வேறு நோய் பாதித்த 69 வயதான ஆண் நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மூளை செயல்பாட்டில் சிரமங்கள், தன்னிச்சையான நடுக்கங்கள், திடீரென ஏற்படும் தசை வெட்டியி ழுப்பு, நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் 4 மாதங்களாக இருந்துள்ளது. வேறு இடங்களில் குணப்ப டுத்த இயலாத பார்கின்சன் நோயும் இருந்தது. இதைய டுத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நரம்பி யல் நிபுணர் டாக்டர். நரேந் திரன், மூளை – நரம்பியல் துறை தலைவரும், முது நிலை நிபுணருமான டாக்டர். விஜய் ஆனந்த் ஆகி யோர் தலைமையிலான குழுவினர் அவரை பரிசோ தித்து, சிகிச்சை திட்டத்தை உருவாக்கியது. அதன்படி அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் அவர் பூரண குணமடைந்தார்.

    இதுபற்றி டாக்டர் நரேந்தி ரன் கூறியதாவது:-

    பார்கின்சனிசம் என அழைக்கப்படுவது, நரம்பி யல் சிதைவு கோளாறுகளின் ஒரு தொகுப்பாகும். அவ ருக்கு இமேஜிங் மற்றும் பெட் சோதனைகளும் மேற் கொள்ளப்பட்டன. மேலும் ஒரு புதிய எதிர்ப்பு உயிரி இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இவையெல் லாம் சேர்ந்து இந்நோயா ளியை குணப்படுத்துவதற்கு எங்களுக்கு உதவின என் றார்.

    நரம்பியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபு ணருமான டாக்டர். விஜய் ஆனந்த் கூறுகையில், இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட போது, குமட்டல், பொதுவான உடல் நடுக்கங் கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப் பதாக நோயாளி கூறினார். அவருக்கு செய்யப்பட்ட விரிவான மருத்துவ பரிசோ தனைகளில் ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறை வாக இருப்பது தெரிந்தது. ரத்தசோகை பாதிப்பும் இருந்தது. மூளை முதுகுத் தண்டு நீரை பரிசோதித்த போது வெள்ளை ரத்த அணுக்களும், புரத அளவு களும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. பல் வேறு சாத்தியமுள்ள நோய றிதல் முடிவுகளை பரிசீலிப் பதற்கு இந்த ஆய்வு முடிவு கள் தூண்டின என்றார்.

    இவரது பாதிப்பிற்கு உறுதியான காரணத்தை அறிய ஒரு நுட்பமான நோயறிதல் செயல்முறை மருத்துவர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, ஸ்டீ–ராய்டுகள், சிரை ஊடாக செலுத்தப்ப டும் இமுனோ–குளோபிளின் கள் ஊசி மருந்து ஆகிய வற்றை உள்ள–டக்கிய ஒரு விரிவான செயல் உத்தியை பல்வேறு மருத்துவ நிபுணர் களை உள்ளடக்கிய குழு இந்நோ–யாளிக்காக வடிவ–மைத்தது. மிக கவனமாக திட்டமிடப்பட்ட இந்த அணு குமுறை யானது, நோயாளி யின் நிலைமையில் கணிச மான முன்னேற்றம் ஏற்பட வழி வகுத்தது என்றார்.

    டாக்டர். நரேந்திரன் கூறுகையில், மருத்துவ நோயறிதலிலும், சிகிச்சையி லும் அதுவும் குறிப்பாக, நுட்பமான, அரிதான மருத் துவ பாதிப்பு நிலைகளை மேலாண்மை செய்வதில் துல்லியமான விளிம்பு நிலை யின் முக்கியத்துவம், மருத்து வம் மற்றும் நோயா ளியின் நலனை மையமாக கொண்டு வடிவமைக்கப்ப டும் சிகிச்சை பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதி நேர்மறையான சிகிச்சை விளைவுகளை அடைவதில் மிக முக்கிய பங்காற்றியி ருக்கிறது என்றார்

    மீனாட்சி மிஷன் மருத்து வமனை மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். பி.கண்ணன் கூறுகையில், இந்த சிக்கலான நேர்வில் வெற்றிகர சிகிச்சை மேலாண்மை, மீனாட்சி மிகச்சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முழுமையான அர்ப்பணிப் பிற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூளை நரம்பியல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத் தின் முன்னணி சிறப்பு நிபுணர்களால் மேற்கொள் ளப்பட்ட இந்த அணுகுமுறை பல்வேறு துறைகளை உள் ளடக்கிய ஒத்துழைப்பு நடவ டிக்கையாக இருந்தது. நோயாளியின் நலவாழ்வு மற்றும் மேம்பட்ட சிகிச் சையை வழங்குவதில் எங்க ளது குறிக்கோள் மற்றும் செயல்பாட்டிற்கு நேர்த்தி யான சாட்சியமாக இது திகழ்கிறது என்றார்.

    இதற்காக நன்றி தெரிவித்த நோயாளி, எனது நோய் பாதிப்பிற்கான கா ரணத்தை சரியாக கண்டறியவும் மற்றும் அதற்கு தீர்வு காணவும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்து வக் குழுவினர் வெளிப்ப டுத்திய உறுதியான அர்ப்ப ணிப்பிற்கும், உயர்தர சிகிச் சைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்பத்திரியில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்க னூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்ற னர். இவர்களில் ராஜேந்திர னுக்கும், கிருஷ்ணணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக்ராஜூக்கும், தர்ம ராஜூக்கும் திருமணம் ஆக வில்லை. ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரம சிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் தற்போது கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர் தர்மராஜ் தனது அண்ணன் அசோக்ராசுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் சக்திவேல் மற்றும் சிலர் சேர்ந்து தர்மராஜ், அசோக்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர்கள் வைத்தி ருந்த கம்பியால் 2 பேரை யும் பலமாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியா மல் அசோக்ராஜ் அங்கிருந்து தப்பித்து அய்யனார் கோவில் அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றார். தர்மராஜை அந்த கும்பல் தலை, கை, கால்களில் பலமாக தாக்கியது. இந்த தாக்குதலில் தர்மராஜ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. அந்த வழியாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

    தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்திற்காக தம்பியை அண்ணனே கும்பலுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram