என் மலர்
நீங்கள் தேடியது "பரிசோதனை"
- ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது.
- ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.
அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி ஆகியவை இணைந்து இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஆபத்து
இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய், இதயத்தின் மேல் அறைகள் (ஏட்ரியா) ஒழுங்கற்றதாகவும், வேகமாகவும் துடிப்பதால் ஏற்படும் பாதிப்பான ஏட்ரியல் பைப்ரிலேஷன் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட உயர்ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதுவே இதயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது.
அவசர சிகிச்சை
ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது. இந்த அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். மார்பு வலி, மூச்சுத்திணறல், முதுகுவலி, உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் மாற்றம், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவசர சிகிச்சை மிகவும் முக்கியமானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.
வழக்கமான பரிசோதனை
ஒவ்வொருவரும் ரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
உணவு
பெரியவர்கள் தினமும் 2,300 மி.கி. சோடியம் (சுமார் ஒரு டீஸ்பூன் உப்பு) அல்லது அதற்கும் குறைவான அளவையே உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். 1,500 மி.கி. என்ற அளவுக்கு படிப்படியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க அல்லது குறைக்க மதுப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை
உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால், உங்கள் உடல் எடையில் 5 சதவீதம் குறைப்பது கூட உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அல்லது தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை 5 சதவீதம் குறைப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு
ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். தியானம், சுவாச பயிற்சி, யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளிலும் கவனம் பதிக்க வேண்டும்.
- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம்.
ஷில்லாங்:
மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும்."
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநில துணை முதல்-மந்திரி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார் வழிகாட்டுதலின் பேரிலும், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மார்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் மணவாளன் முன்னிலை வசித்தார்.
இதில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மார்பக புற்றுநோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
- குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
- 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சித் தலைவர் யசோதா சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து, கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் அடங்கிய பொட்டலங்களை கால்நடை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
மேலும், சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.
முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் கண்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கமித்ரா அபிவதி, சரவணன், ராஜா, கால்நடை ஆய்வாளர்கள் தமிழ்வாணன், தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், சாந்தி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.
- கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- கண் அறுவை சிகிச்சைக்காக 142 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கம், மதுரை கண் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கண்புரை, சக்கரை நோய், , குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில் 398 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை கண் அரவிந்த் மருத்துவமனைக்கு 142 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து, கண் குறை அறுவை சிகிச்சை என எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதில் அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியர் வடிவேலு சிறப்புரையாற்றினர்.
மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், இசிஜி, ஸ்கேனிங் மக்களை தேடி மருத்துவம், டிபி டெஸ்ட், எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து மாத்திரையில் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா நேசமணி, அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் திரளானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
மேலும் இந்த முகாமில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண் . ராமநாதனுக்கு, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பரிசோதனை மேற்கொண்டார்.
- வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் திருநள்ளார் தென்னங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35) கூலித்தொழிலாளி.
இவரும் இவருடைய நண்பர் தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (32) என்பவரும் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் டிரோன் எந்திரம் மூலம் களைக் கொல்லி மருந்து அடித்துள்ளனர்.
அப்போது வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென ராமகிருஷ்ணன் மயங்கி வயலில் விழுந்தார்.
உடன் அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும், ஏவிஆர் தனலட்சுமி ஜுவல்லரி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெ ற்றது.
முகாமிற்குசங்கத் தலைவர் எஸ்பாண்டிய ராஜன் தலைமைவகித்தார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பி ரமணியன், மாவட்டத் தலைவர்கள் எம்.நீலகண்டன், கே.இளங்கோ, சங்கச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் தனலட்சுமி ஜுவல்லரி நிறுவனர் சுதர்சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றினார்.
முகாமை கண்பார்வை மாவட்ட தலைவர் வி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
மண்டலத் தலைவர்சிவகுமார், வட்டாரத் தலைவர் குருநாதன், கண் சிகிச்சை முகாமின் ஒருங்கிணை ப்பாளர் செல்வகுமார், ஏவிஆர் தனலட்சுமி பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிக ழ்ச்சியில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், சாசனச் செயலாளர் வ.ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன்பிச்சை, செய்தி தொடர்பாளர் கதிரவன், சபரி முத்துகுமார்உள்ளிட்ட உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் 116 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை.
- ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முகாமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மங்கள தீபம் ஏற்றினார்.
சௌராஷ்ட்ர கல்வி நிதி உதவி சங்கம் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பராமன், உமாபதி, ஆதிநாராயணன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, எடை, உயரம், இ.சி.ஜி. கால் பாதம், நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் மருந்துகள் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பிரதி ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும் என்று கவுன்சிலர் யு.என். கேசவன் தெரிவித்தார்.
இதில் 30-வது வார்டு பகுதி சபா குழு உமாபதி, ராமமூர்த்தி ,ஜெகநாதன், ரங்கராஜன், தஞ்சாவூர் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், பொருளர் தமிழவதி, துணைத் தலைவர் துரை பத்மநாபன், சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜு நன்றி கூறினார்.
- நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
- இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.
நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.
குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.
இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.
- கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
- நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகளை உடனடியாக விற்பனைக்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது.
அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே இந்த விதைகளை சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும் வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளுக்கு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள், களை விதைகள், பிறரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்து உள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
எனவே விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து நல்விதையாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த நாஞ்சி க்கோட்டை கன்னி தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை கன்னிதோப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி லோகநாதன் அஞ்சம்மாள் (வயது 72) என்பதும், அவரது மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து லோகநாதன் அஞ்சம்மாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் அஞ்சம்மாள் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்ற பல்ேவறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.






