என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DNA"

    • 1953 இல் 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரியை கண்டறியப்பட்டது.
    • மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.

    அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.

    1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

    இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது. 

    • எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
    • என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில், தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

    அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.

    ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

    செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்,

    இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

    கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.

    நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதில், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை தன்னுடையது தான் என நிரூபிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.

    மேலும், குழந்தை என்னுடையது என நிரூபணமானால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயார் என கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,"டிஎன்ஏ பரிசோதனை செய்து குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்குத் தான் பிறந்தது என நிரூபிக்கத் தயார்" என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் எனக்கூறிவிட்டு இப்போது சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைவிட்டுள்ளார்.

    மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மனவலியை கொடுக்கின்றனர்.

    குழந்தை என்ஐசியூ-வில் உள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கை தேவையா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்
    • இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் கண்டு கழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரை இச்செய்தியில் காண்போம்.

    DNA

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    குபேரா

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மனிதர்கள்

    ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. இத்திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பைரவம்

    சூரி நடித்த கருடன் படத்தை தெலுங்கு மொழியில் பைரவம் என்ற தலைப்பில் ரீமேக் செய்து இருந்தனர். இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்கியுள்ளார். சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா , ரோகித், அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    சட்டமும் நீதியும்

    சரவணன், நம்ரிதா, அருள் மற்றும் ஷன்முகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகிறது சட்டமும் நீதியும் வெப் தொடராகும். இது ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருக்கிறது. ஒரு சாதாரண வக்கீல் ஒரு நீதிக்காக எந்த எல்லை வரை சென்றான் என்பதை மையமாக வைத்து இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'.
    • இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்தது.

    படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை மை பேபி என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. ஆனால் இப்படத்தின் ஓடிடி அறிவிப்பை ஓடிடி அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 19 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    இச்சூழ்நிலையில் தெலுங்கு மக்கள் யாரும் படத்தை திரையரங்கிள் பார்க்க முன்வரமாட்டார்கள், ஏனெனில் திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் அதே திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'.
    • டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் அதர்வா ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    'டிஎன்ஏ' படம் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணே கனவே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.



    அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், 'டிஎன்ஏ' படம் வெளியானது முதல் இதுவரை ரூ.4.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
    • 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

    'டிஎன்ஏ' திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதனிடையே, 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'டிஎன்ஏ' படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டி.என்.ஏ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கதைக்களத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியுள்ளார். அதர்வா, நிமிஷாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் அதர்வா கம்பேக் கொடுத்துள்ளார்.
    • டிஎன்ஏ படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

    டிஎன்ஏ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    அதர்வா கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

    மேலும், படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், டிஎன்ஏ படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," DNA கதையை நெல்சன் வெங்கடேசன் எப்போதும் போல அழகாக இயக்கியுள்ளார். அதர்வா, நிமிஷா, சேட்டன், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்தது. DNA ஒரு அழகான படம்" என பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    • அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ.
    • படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டுடார்கள் என வருத்தபடுவர் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ.
    • இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கிழவி அரசு மருத்துவமனையில் ஸ்நாக்ஸ் விற்பது போல வந்து குழந்தையை கடத்தி செல்லும் காட்சி நெஞ்சை பதபதைக்க  வைக்கிறது.

    • அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ.
    • இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

    இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

    மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாக இதயம் முரளி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனால் இதற்கடுத்து வரும் திரைப்படங்கள் நல்ல வெற்றிப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • DNA படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
    • டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

    அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்

    டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் படமாக இப்படம் அமைந்துள்ளது.

    மேலும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×