என் மலர்
நீங்கள் தேடியது "Atharvaa"
- தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
- விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.
- முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
- படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இதயம் முரளி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
கதைக்களம்
ஊதாரித்தனமாக சுற்றி திரியும் இளைஞனாக நாயகன் அதர்வா இருக்கிறார்.சில வருடங்களுக்கு பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர செல்கிறார். தனது அப்பாயிண்ட்ன்மெண்ட் ஆர்டரை பெற்று பணியில் சேர, அவருடன் சேர்ந்து ஐந்து பேரும் பணியில் சேர வருகின்றனர்.
காலை முதல் மாலை வரை போலீஸ் நிலையத்தில் இவர்கள் ஆறு பேரும் காத்திருக்கின்றனர். கடைசியாக, போலீஸ் அதிகாரி ஒருவர், ஆறு பேரையும் ரவுண்ட்ஸ் போகுமாறு சொல்கிறார். அப்போது கையில் தொலைப்பேசி என எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இவர்கள் ஆறு பேறும் நடந்தே ரவுண்ட்ஸ் செல்கின்றனர். அப்போது, பாதாள சாக்கடை மூடியினைத் திறந்து ஒருவர், இவர்களைக் கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்.
அவரை சந்தேகப்படும் அதர்வா உட்பட ஆறு போலீஸும், அவரை துரத்திக் கொண்டுச் செல்கின்றனர். ஒருக்கட்டத்தில் அவர் ஒரு பெரிய சுவரை தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு சென்று விடுகிறார். மேலும் அங்கு இருந்து மறைந்து விடுகிறார்.
எது வாசல் எது முடிவு என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் ஆறு பேரும்.
அப்போது, அங்கு அஸ்வின் உட்பட மூன்று பேர் நிற்க, அவர் யார் என்று விசாரிக்க அருகில் செல்கிறார் போலீஸ் தரணி. பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின் தன் கையில் மறைத்து வைத்திருந்த மிகப்பெரும் கத்தியை எடுத்து தரணியின் தலையை துண்டித்து கொன்று விடுகிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியாகிறார் அதர்வா. போலீஸ் ஐந்து பேரையும் சுற்றுப் போடுகிறது ஒரு கும்பல்.
இந்த கும்பலின் நோக்கம் தான் என்ன.? எதற்காக இந்த கொலை வெறி தாக்குதலை நடத்த வேண்டும்.? இந்த கும்பலுக்கும் அதர்வாவிற்கும் என்ன தொடர்பு? எந்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் அதர்வா, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.வில்லன் என்று சொல்வதை விட மற்றொரு நாயகன் என்று தான் சொல்ல வேண்டும் அஸ்வினை அவர் வரும் காட்சியில் எல்லாம் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.நாயகி லாவண்யா தனது அழகால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்.
இயக்கம்
ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரவீந்திர மாதவா. கதை கொண்டு சென்ற விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்.சில லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
சண்டை காட்சிகளில் கச்சிதமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்
இசை
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
அன்னை பிலிம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 2.5/5
- அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக தணல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'.
- இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்தது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை மை பேபி என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. ஆனால் இப்படத்தின் ஓடிடி அறிவிப்பை ஓடிடி அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 19 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இச்சூழ்நிலையில் தெலுங்கு மக்கள் யாரும் படத்தை திரையரங்கிள் பார்க்க முன்வரமாட்டார்கள், ஏனெனில் திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் அதே திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
- அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஷா ரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத், மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவை மேற்கொள்ள் கலைவாணன் படத்தொகுப்பை செய்துள்ளார்.
- நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'.
- டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் அதர்வா ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
'டிஎன்ஏ' படம் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணே கனவே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 'டிஎன்ஏ' படம் வெளியானது முதல் இதுவரை ரூ.4.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
- 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
'டிஎன்ஏ' திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.
இதனிடையே, 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'டிஎன்ஏ' படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டி.என்.ஏ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கதைக்களத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியுள்ளார். அதர்வா, நிமிஷாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
- டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் அதர்வா கம்பேக் கொடுத்துள்ளார்.
- டிஎன்ஏ படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
டிஎன்ஏ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.
மேலும், படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டிஎன்ஏ படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," DNA கதையை நெல்சன் வெங்கடேசன் எப்போதும் போல அழகாக இயக்கியுள்ளார். அதர்வா, நிமிஷா, சேட்டன், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்தது. DNA ஒரு அழகான படம்" என பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ.
- படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டுடார்கள் என வருத்தபடுவர் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ.
- இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கிழவி அரசு மருத்துவமனையில் ஸ்நாக்ஸ் விற்பது போல வந்து குழந்தையை கடத்தி செல்லும் காட்சி நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.






