என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளி"

    • தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
    • விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.

    தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.

    அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.

    • சுந்தரா டிராவல்ஸ் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது

    இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.

    முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

    இந்நிலையில் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால இப்படம் அப்போது வெளியாகவில்லை. இப்போது புதுப்பொலிவுடன் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

    ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
    • 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.

    முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

    இந்நிலையில் தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி,
    • ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

    நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

    நடிகை அதிதி, "முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி".

    அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×