search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema"

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
    • இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
    • வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

    அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ  கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

     

    படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்
    • தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ’லவ் ஆக்‌ஷன் டிராமா’.

    2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்குகிறார்கள்.

     

    பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க போகிறார் என்பதை படக்குழுவினர் ஒரு வீடியோவின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதில் பேப்பரில் இங்க் ஊற்றி நயந்தாராவின் புகைப்படம் தெரிகிறது. இந்த வீடியோவை நிவின் பாலி அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

    இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
    • இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரகுல்ப்ரீத்சிங் - ஜாக்கி பக்னானி, புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பண்டா ,மற்றும் டாப்ஸி பன்னு - பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ உள்ளிட்டோர்,

    கடந்த சில மாதங்களில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சித்தார்த் - அதிதிராவ் ஜோடியினர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்,

    இந்நிலையில் தமிழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் நடித்த அஞ்சு குரியன் ஜோடி காதலித்து வருவதாக கூறப்படுகிறது. "கனா" படம் வெற்றி மூலம் சிறந்த நடிகராக தர்ஷன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.




    "இக்லூ" படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சு இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

    இந்த திருமண படங்களில், தர்ஷன் ஒரு கிரீம் சட்டை மற்றும் வேட்டி அணிந்துள்ளார். அஞ்சு சிவப்பு மற்றும் தங்கநிற சேலை அணிந்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்றதாகவும் செய்தி பரவியது.

    மேலும் இது நகை பிராண்ட் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.




    இந்த புகைப்படங்களுக்கு பின் உள்ள உண்மை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஊகிக்கிறார்கள். மேலும் இவர்களிடமிருந்து உறுதிப்படுத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் தர்ஷன் - அஞ்சு உண்மை காதலர்கள் போன்று பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாக கூறப்படுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

    விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

    தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

    அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

    தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோமாளி படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்
    • உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது

    2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.

    "கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.

    அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

    அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேற்று யூ டியூபில் வெளியிட்டது.

    உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது. பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடங்களுக்கு முன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்து எடுத்த குறும் படத்தில் பிரதீப் ரங்கனாதன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்
    • தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.

    2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

     

    இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
    • பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

    தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார்.
    • இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.




    இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.

    மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் தலைவர் 171 படத்தில் 80 களில் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் பட போட்டியாளரான நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் அணுகினார். தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மோகன் நடிப்பதற்கான சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் நடிகர் மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.



    இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் 'கேமியோ' பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×