என் மலர்
நீங்கள் தேடியது "Cinema"
- 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
- தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்
தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.
என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.
- இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
- இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.
அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. சினேகன் - கன்னிகா:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.

2. பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார்.

4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார்.

5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

6. கியாரா அத்வானி
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

7. பரினீதி சோப்ரா
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

8. ராஜ்குமார் ராவ்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
- அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
- இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
- இந்தாண்டு அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டு உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆண்டாக அமைந்தது. உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. சீனா, தென் கொரியாவை சேர்ந்த படங்களும் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகின்றன.
லைவ் ஆக்சன் படங்களை விட சமகாலத்தில் அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன. இந்தாண்டும் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை அனிமேஷன் திரைப்படம் தான் பிடித்துள்ளது.
அவ்வகையில் இந்தாண்டு உலக அளவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இந்த ரீவைண்டில் பார்ப்போம்.

1. Ne Zha 2
சீன அனிமேஷன் திரைப்படமான Ne Zha 2 திரைப்படம் உலக அளவில் ரூ.19,750 கோடி வசூலித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட் படங்களே எப்போதும் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் அந்த இடத்தை Ne Zha 2 இந்தாண்டு தட்டி பறித்துள்ளது.

2. Lilo & Stitch
2002 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷனை திரைப்படமான Lilo & Stitch மாபெரும் வெற்றியை பெற்றது. அதனால் இப்படத்தை தற்கால தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி லைவ் ஆக்சன் படமாக டிஸ்னி வெளியிட்டது. இப்படம் உலக அளவில் ரூ.9,350 கோடி வசூல் குவித்து இப்பட்டியலில் 2 ஆம் பிடித்துள்ளது.

3. A Minecraft Movie
உலக புகழ்பெற்ற Minecraft என்ற வீடியோ கேமை மையமாக கொண்டு A Minecraft Movie படம் உருவாக்கப்பட்டது. இப்படம் வீடியோ கேமிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உலக அளவில் ரூ.8,600 கோடி வசூலை ஈட்டி இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

4. Jurassic World: Rebirth
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
டைனோசர் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. உலக அளவில் இப்படம் ரூ.7,800 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது.
5. How to Train Your Dragon
How to Train Your Dragon என்ற அனிமேஷன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் லைவ் ஆக்சன் திரைப்படம் இந்தாண்டு வெளியானது. அனிமேஷனை படத்தை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.5690 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. F1: The Movie
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் இந்தாண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
உலக அளவில் இப்படம் ரூ.5580 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. Superman
ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு ரீபூட் செய்யப்பட்ட புதிய சூப்பர்மேன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. உலக அளவில் இப்படம் ரூ.5525 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.

8. Mission: Impossible – The Final Reckoning
Mission: Impossible படங்களின் கடைசி பாகம் என்ற எதிர்பார்ப்போடு The Final Reckoning படம் வெளியானது. டாக் குரூஸ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட உலக அளவில் இப்படம் ரூ.5360 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

9. The Fantastic Four: First Steps
வழக்கமாக டிசி படங்களை விட மார்வெல் படங்கள் அதிக வசூலை ஈட்டும் நிலையில், இந்தாண்டு மாற்வல் படங்கள் வசூலில் சற்று சறுக்கியது. மார்வெல் தயாரிப்பில் வெளியான The Fantastic Four: First Steps படம் நல்ல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.4650 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.
10. Captain America: Brave New World
இப்பட்டியலில் கடைசி இடத்தை Captain America: Brave New World படம் பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. உலக அளவில் இப்படம் ரூ.3725 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.
- நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
- காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.
இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.
அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மாலைமலர் ரேட்டிங் : 2 / 5
- விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
- ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களிடையே பேசிய கவின்,
"ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
- நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
- ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்
பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார்.
இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார்.
- முன்னதாக நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசனுக்கு (2016) வழங்கப்பட்டது.
- சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






