என் மலர்
நீங்கள் தேடியது "Cinema"
- நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் உலகப்போர் நடிகரின் கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். இவர் பொதுவாக பொது விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் சமீபத்தில் ஒரு நடிகரின் திருமண விழாவிற்கு சென்றாராம். அப்போது அவருடன் ஒரு இளம் பெண் சென்றிருக்கிறாராம்.
இதைப்பார்த்த பலரும் நடிகரின் காதலி அவர் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதைக்கேட்ட நடிகரும் கண்டுக்கொள்ளாமல் சென்று விட்டாராம். நடிகரின் இந்த மௌனம், அவருடன் வந்த பெண் காதலிதான் என்று பலரும் உறுதி செய்து விட்டார்களாம்.
- நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
- செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை.
- கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். வக்கீல். இவரது மனைவி ராஜாத்தி. கடந்த 6-ந் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர், ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1½ பவுன் நகைகளை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தங்கி சினிமாவில் மேக்கப்மேனாக வேலை பார்த்து வந்த அவர் போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.