என் மலர்
நீங்கள் தேடியது "heroine"
1990 கால கட்டத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த வெளி மாநில கதாநாயகிகள் பலர் திருமணமாகி சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டனர்.
ரூபினி- 1987 முதல் 1994 வரை ரஜினி, கமல் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த ரூபினி 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு அனிஷா ரயானா என்ற மகள் உள்ளார்.
மும்பையில் வசித்து வரும் ரூபினி இயற்கை மருத்துவராகவும், மகளுடன் இணைந்து நடனபயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
சிவரஞ்சனி: 1990-1999 வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் கதாநாய–கியாக ஜொலித்து வந்தவர் சிவரஞ்சனி. பூனைக்கண் அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவரஞ்சனி மனசார வாழ்த்துங்களேன், தலைவாசல், தங்கமனசுக்காரன், சின்ன மாப்ளே, பொன் விலங்கு உள்பட பல படங்களில் நடித்தார். மெதுவா தந்தி அடிசாமி என அரவிந்தசாமியுடன் அவர் ஆடிய நடனம் ரசிகர்களை இருக்கையில் ஏறி ஆட வைத்தது.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரோஷன், ரோகன் என்ற 2 மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர்.
ரோஷன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. மகள் மேதா கனடாவில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சிவரஞ்சனி குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அவரது தந்தையும், தாயாரும் அவருடன் வசித்து வருகிறார்கள்.
ரவளி: 1995-ம் ஆண்டு வெளியான திருமூர்த்தி படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவளி தொடர்ந்து சத்யராஜ், பார்த்திபன், நெப்போலியன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
2007-ம் ஆண்டு நீலிகிருஷ்ணா என்பவரை ரவளி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
செங்குருவி, செங்குருவி என்ற பாடலுக்கு விஜயகாந்துடன் ஆடி பாடிய ரவளி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் தோற்றமளிக்கிறார். கணவர் மற்றும் மகள்களுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
நக்மா: நக்மா... தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரையுலக ரசிகர்கள் மறக்க முடியாதவர். சினிமாவில் இருந்து விலகிய நக்மா மும்பையில் வசித்து வருகிறார். அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
மோகினி: வா வா அன்பே... தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... அங்கே சென்று அன்பை சொல்லு என ஈரமான ரோஜாவில் இடம் பெற்ற பாடலில் மோகினியின் காந்த கண் அழகு இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த மோகினி கடந்த 2006ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
தஞ்சாவூரில் ஸ்ரீனிவாசன் ஐயங்கார்-சுந்தரி ஆகியோருக்கு மகளாக பிறந்த மோகினி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்தவ போதகராக இருந்து வருகிறார்.
மந்த்ரா: பிரியம் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மந்த்ரா. தொடர்ந்து லவ்டுடே, ரெட்டை ஜடை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்காகவுரி உள்பட பல படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர் மந்த்ரா. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த மந்த்ரா, நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த மந்த்ரா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஐதராபாத்தில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மாளவிகா: கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்களால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாளவிகா. 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 38 வயதாகும் மாளவிகாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். உடல் கட்டுகோப்பு விஷயத்தில் அக்கறை கொண்ட மாளவிகா யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ஆரோக்கியத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் தற்போது நடித்துள்ளார்.
- தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேர்முக தேர்வு நடைபெறும்.
- 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000 வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை பளுதூக்குதல் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ளது.
விளையாடு இந்தியா மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட பளுதூக்குதல் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்ப டவுள்ளார்.
விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம்வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்க ளுக்கிடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல.
முற்றிலும்த ற்காலிகமானதாகும். இதன் அடிப்டையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) வருகிற 3-ந்தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் என்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.
உடற்தகுதி, விளையாட்டு த்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட அலுவலக தொலைபேசி எண்.04362-235 633 என்ற எண்ணிலும் மற்றும் கைபேசி எண்.7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
- மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்
1980 - ம் ஆண்டு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. 1984-ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.
'தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷோபனா பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் தற்போது அறிவித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்

இப்படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இப் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோ மோகன்லால் சார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
- நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
சுமார் 40 கோடி பேர் இங்கு புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற 16 வயது பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்று வருகிறார்.
மோனாலிசா தனது தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், கும்பமேளாவில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார். அவரின் பாசி மாலை வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மோனாவிசாவுக்கு சினிமாவில் ஹீரோனியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

'டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க பொருத்தமான ஒருவருக்காக காத்திருந்ததாகவும், மோனாலிசாவின் கரிய தோல் மற்றும் தேன் போன்ற கண்கள் தனது படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பு.
அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தில் கிட்டதட்ட 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
டோகோக என்ற இடத்தில் நேற்று மாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகாலாந்தின் டியாம்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றோருவர் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் பகுதியைச் சோர்ந்த பெண் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பாகும் என போலீசார் தெரிவித்தனர்.






