search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shobana"

    • இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்.
    • ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா.

    பின் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

    அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

    தற்பொழுது அவர்கள் நடிக்கும் படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார்.

    இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

     

    கடைசியாக மோகன்லால் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை, எல் 360 படம் வெற்றியடைய வேண்டும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இது குறித்து மோகன்லால் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
    • மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்

    1980 - ம் ஆண்டு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. 1984-ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.

    'தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷோபனா பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் தற்போது அறிவித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்





    இப்படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    மேலும் நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இப் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோ மோகன்லால் சார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என  கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
    • இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

    இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

    ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.

    இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.

    பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.

    காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்.
    • பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகை ஷோபனா, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை ஷோபனா போட்டியிடவேண்டும் என்று நடிகர் சுரேஷ்கோபி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதே எனது விருப்பம். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஷோபனா.
    • பரதநாட்டிய கலைஞரான இவர் நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.

    பிரபல திரைப்பட நடிகையான ஷோபனா பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார். இவர் ரஜினி, கமல், பாக்யராஜ் உள்பட பல திரைப்பிரபலங்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் நடிகை ஷோபனாவின் வீட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த விஜயா என்பவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஷோபனாவின் தாயை விஜயா உடனிருந்து கவனித்து வந்த நிலையில், தாயார் வைத்திருந்த பணம் அடிக்கடி மாயமானதால் குழம்பி போன ஷோபனா போலீசில் புகாரளித்திருக்கிறார்.

    இந்நிலையில், வீட்டிலிருந்து பணத்தை தான் திருடியதாகவும், சிறுக சிறுக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை திருடி, அப்பணத்தை ஜிபே மூலம் தனது மகளுக்கு அனுப்பியதாகவும் கூறி பணிப்பெண் விஜயா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், போலீசிடமிருந்து புகாரை வாபஸ் பெற்ற நடிகை ஷோபனா, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்காமல், திருடிய பணத்தை வீட்டில் வேலை பார்த்தே கழிக்குமாறு கூறி எச்சரித்திருக்கிறார்.

    பெண்ணை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக ஷோபனா நடிக்க இருக்கிறார். #Shobana
    மலையாளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இவர் கடந்த 37 ஆண்டுகளில் மலையாள மொழியில் உள்ள அத்தனை முக்கிய கதாநாயகர்களையும் வைத்து சுமார் 60 படங்களை இயக்கியிருக்கிறார்.

    தற்போது அவரது மகன் அனூப் சத்யன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருக்கும் அனூப் சத்யன், பெண்ணை மையமாக வைத்து ஒரு முழு நீள படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.



    2005-ம் ஆண்டு வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்திற்கு பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷோபனாவும், சுரேஷ்கோபியும் இணையும் படம் இதுவாகும். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் சுரேஷ்கோபி போட்டியிடுவதால், தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
    ×