என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Bhushan"

    • சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.
    • தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, மத்திய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் அறிவித்தது.

    முதல் கட்டத்தில், நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் என மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து எஞ்சியுள்ள  68 விருத்தாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    அந்த வகையில் இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதைப் பெற்றார். தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

    முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

    மேலும், சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.

    பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர்.

    கண்ணப்பா சம்பந்தன், டாக்டர் நீர்ஜா பட்லா, மந்த கிருஷ்ண மடிகா, சையத் ஐனுல் ஹசன், சாந்த் ராம் தேஸ்வால் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

    • நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
    • அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருது பெற்ற நிகழ்ச்சியின்போது, அவரின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொஞ்சிய புகைப்படத்தை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், 'பொக்கிஷமான தருணம்' என ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்

    • இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.
    • அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே எனக்கு போதும்.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி நேற்று அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இதன்பின் ஆங்கில செய்தி ஊடகமான இந்தியா டுடே நடத்திய நேர்காணலில் அஜித் குமார் பங்கேற்று பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    அதில், பத்ம பூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.

    பத்ம பூஷன் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் இந்த விருதினை வாங்கியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறேன்.

    இந்த மாதிரி விருதுகளை வாங்கும்போதும் தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என தெரிகிறது. எனவே, நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.

    என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள், ஷாலினி மற்றும் எனது குழந்தைகள். என்னுடைய வெற்றி, தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள்தான்.

    என்னுடைய மனைவி ஷாலினி எப்போதும் என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார். எனக்கு வரும் எந்த அங்கீகாரமும் பெரும்பகுதி எனது மனைவியையே சேரும்"  என்று தெரிவித்தார்.

    சூப்பர் ஸ்டார், தல என்று பட்டங்கள் குறித்துப் பேசிய அஜித், "இந்தப் பட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சினிமாவில் நடிக்கிறேன். அதற்கு நல்ல சம்பளமும் வாங்குறேன்.

    அதைத் தாண்டி இந்தப் பட்டங்கள் எல்லாம் தேவையில்லை. சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கை, எனக்குப் பிடித்த வேறு பல வேலைகள், கனவுகள் இருக்கின்றன. அதனால் அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே எனக்கு போதும்.

    எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமே, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன்.

    மக்கள் என்மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்தத் துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
    • இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.

    • டெல்லியில் இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
    • மத்திய அரசின் உயரிய விருதகளில் பத்மபூஷன் ஒன்று

    அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

    இதனிடையே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெறுகிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவ்விருதை வழங்கவுள்ளார்

    மத்திய அரசின் உயரிய விருதகளில் பத்மபூஷன் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • வைஜெயந்திமாலா, சிரஞ்சீவு, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஐந்து பேர் விபூஷன் விருது பெறுகிறார்கள்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம்தேதி விஜயகாந்த் காலாமானார்.

    பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் விவரம்:-

    1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு - ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) - பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு

    பத்ம பூஷன் விருது:

    6. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - தமிழ்நாடு, 7. ஹோர்முஸ்ஜி- மகாராஷ்டிரா, 8. மிதுன் சக்ரவர்த்தி- மேற்கு வங்காளம், 9. சீதாராம் ஜிண்டால்- கர்நாடகா, 10. யங் லியு- தைவான், 11. அஷ்வின் பாலசந்த்- மகாராஷ்டிரா, 12. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்)- மேற்கு வங்காளம், 13. ராம் நாயக் - மகாராஷ்டிரா, 14. தேஜஸ் மதுசூதன் படேல்- குஜராத், 15. ஓலஞ்சேரி ராஜகோபால்- கேரளா, 16. ராஜ்தத்- மஹாராஷ்டிரா, 17. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக், 18. பியாரேலால் சர்மா- மகாராஷ்டிரா, 19. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்- பீகார், 20. உஷா உதுப்- மேற்கு வங்காளம், 21. பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்)- கேரளா, 22. குந்தன் வியாஸ் - மகாராஷ்டிரா

    • மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
    • சசீந்திரன் முத்துவேல், செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

    மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

    தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

    அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பத்ம விருது பெற தேர்வாகியுள்ளவர்களுக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    • விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
    • பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

    மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். 

    • கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
    • பிரேமலதா விஜயகாந்த் பத்ம விருதை பெற்றுக் கொண்டார்.

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த வகையில், இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தயில், "என் நண்பன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இதே போன்று நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது, என் இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்ம பூஷன் விருதை கேப்டனுக்கு கொடுத்ததில் எங்க திரையுலகம் மிகவும் சந்தோஷம் அடைகிறோம். எங்களது அன்னை இல்லம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனுசல வாழ்ந்துட்டு இருக்காறு. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி," என்று தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
    • பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா மே 9 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

    மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.

    விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

    அதன்பின்பு விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

    காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் சாலை மார்க்கமாக கோயம்பேடு வந்தடைந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். 

    ×