என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actor Ajith Kumar"

    • சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான்.
    • சினிமா பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

    திரைப்படத் துறையில் தனது 33வது ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை.

    சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

    இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு ஈந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன் காயங்கள், மீண்டு வருதல், தோல்லி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை முயற்சி செய்தேன். மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!

    ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புநான் என்னை மீண்டு வர செய்துள்ளது.

    இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன் இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால் என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.

    மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது.

    அதற்கு தேவை Respect, Focus & Goti அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது என்னை பலமுறை தூக்கி மறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல.

    ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன் வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.

    அஜித்குமார் மோட்டார் ரேசிங்' என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன்.

    உத்வேகம் நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.

    சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி!

    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

    எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி. எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்.

    என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள்.

    சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ். மணி மற்றும் என் அம்மா மோகினி மணி என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

    நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம் ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுந்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.

    என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி) உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன் என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.

    உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். வாழு, வாழ விடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.
    • அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

    கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.

    2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

    2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    இதற்கிடையே, குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

    இந்நிலையில், அஜித்குமார் சமீபத்தில் பூனையை கொஞ்சும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    பூனையிடம்," நீ என்னுடன் சென்னைக்கு வா.. சென்னைக்கு கூட்டிட்டு போறேன். வரியா பேபி.." என்று அஜித் பேசியுள்ளார்.

    • பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
    • இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.

    • துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
    • உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.

    ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • GBU படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
    • ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

    ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.

    முன்னதாக, அஜித் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

    இந்நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
    • குட் பேட் அக்லி படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட்பேட் அக்லி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதை முன்னிட்டு, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • பயிற்சியின் போது அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது.
    • அதில் அஜித்திற்கு காயம் ஏதுமின்றி தப்பினார்.

    நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.

    சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக அவர் துபாய் சென்றார்.

    அங்கு ரேசிற்கான பயிற்சியில் அஜித் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு ஒன்றும் ஆகாமல் உயிர் தப்பினார். கார் முன் பகுதி மிகுந்த சேதம் அடைந்தது.

    இந்நிலையில் கார் பந்தய பயிற்சியில் விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று 2 கட்டமாக நடந்த தகுதிச் சுற்றில் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டியுள்ளார். நாளை நடக்கும் கார் அணிவகுப்பிலும் அஜித் குமார் பங்கேற்பார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

    • நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை.
    • கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன்.

    நடிகர் அஜித் குமார் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றார்.

    அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
    • கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.

    சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

    இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது.

    வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.

    வாழ்க்கை மிக மிக குறுகியது அழகாக வாழ பாருங்கள். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
    • தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.

    ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.

    இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கல் சென்றுள்ள நிலையில், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
    • கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.

    ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸின்போது, "ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் தமிழில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா வாழுங்க. LOVE YOU ALL" என்று அஜித் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×