என் மலர்
நீங்கள் தேடியது "துணை முதலமைச்சர்"
- திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது.
- தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய இபிஎஸ், ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.
திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.
இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.
நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி" என்று தெரிவித்தார்.
- பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
- பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.
- சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது.
மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியது. அவர் கடந்த 31-ந்தேதி மராட்டிய முதல் பெண் துணை மந்திரியாக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து சரத்பவார் கட்சியுடன் இணையும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதா சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும், பவார் கட்சிகள் இணைவதை விரும்பவில்லை என்றும் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பா.ஜனதா தலைமை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர்களான சுனில் தட்கரே, பிரபுல் படேல் ஆகியோர் தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் இணைவதை விரும்பவில்லை. அஜித்பவார் மரணத்துக்கு பிறகு என்.சி.பி.யில் சிலர் அதிக லட்சியம் கொண்டவர்களாக மாறினர். துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. தட்கரே, படேல் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி படேலிடம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
சுனேத்ரா பவார் யாருடைய விருப்பத்தின் பேரில் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார் என்பதுதான் மராட்டிய மாநிலம் முன்புள்ள கேள்வியாகும். ஏனென்றால் சரத்பவார், சுப்ரியா சுலே அல்லது பவார் குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி தெரியாது. இந்த அரசியலுக்கு பின்னால் பா.ஜனதா தலைமைதான் சூத்திரதாரி.
அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன. இந்த சிக்கல்கள் தீர்க்கப்படக் கூடாது என்று பலர் விரும்புகிறார்கள். சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது. அவரது கருணையின் பேரில்தான் சுனேத்ரா பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் தங்கள் பதவியில் இருக்க முடியும்.
சுனேத்ரா பவார் அலங்கார பொருளாக இருக்கக் கூடாது. பொம்மையாக இல்லாமல் திறமையாக செயல்பட வேண்டும். சுனேத்ரா பவார் தனது கணவரின் இறுதி சடங்குகளுக்கு பிந்தைய சடங்குகள் முடிவடைவதற்கு முன்பே பதவியேற்றது இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு பொருந்தவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம்.
- சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி செங்கிப்பட்டியில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.
தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் முதல் 4 இடங்களில் உள்ள மாநிலங்களை ஆள்வது பாஜக தான். பாஜகவின் முரட்டு அடிமையை நம் கண் முன் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்மை சேர்ந்தவர்கள் தான்.
மகளிருக்கான அரசு என்பது தான் திராவிட மாடல் அரசுக்கான அடையாளம்.
திராவிட மாடல் பார்ட்-2க்கு மக்கள் தயாராிவிட்டார்கள். நாம் தான் மீண்டும் வெல்வோம். நாம தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
பில்கிஸஅ பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூந்தமல்லி மின்சார பேருந்து பணிமனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம்ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், மாநகர் போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குனர் இராம.சுந்தர பாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட னர்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர்," தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றன், விளையாட்டிலும் சாதிக்கின்றனர்" என்றார்.
இதுகுறித்து மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்," இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, ஆனால் தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது. பெண்ணுரிமையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.
திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று இந்திய ஒன்றியமே சொல்கிறது.
உத்தியோகம் புருஷனுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் அழகு என மாற்றிக் காட்டியுள்ளது நம் அரசு" என கூறினார்.
- ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம்.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் வரும் 28ம் தேதி 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.
- பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபறெ்றது.
- சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.
பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல் நடைபறெ்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.
Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.
தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
- 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய அரசு அமைந்த இந்த 4½ வருடத்தில் மட்டும், இன்றைக்கு வரை சுமார் 4 ஆயிரத்து 510 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.
4 வருடத்தில் மட்டும் இந்தியாவுலேயே இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும், இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
இன்றைக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறோம் என்றால், அதற்கும் நம்முடைய முதல்-அமைச்சர் தான் காரணம்.
பொதுவாக, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு அந்த அங்கீகாரத்தை கொடுக்கும், அந்த பரிசுத்தொகை கொடுக்கும்.
ஆனால், நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசு மட்டும் தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னாடியே அந்த வீரர்களை அழைத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையை, முன்னாடியே நிதி உதவியை செய்கின்றது நம்முடைய அரசு. நிதி உதவி மட்டும் அல்ல, நீங்கள் வெற்றி பெற்று வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அரசு வேலையையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த வருடம் 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
அந்த வகையில், இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்து இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும் போது, நம்முடைய முதல்-அமைச்சர் உங்களுக்கு அரசு வேலையும் நிச்சயம் பெற்றுத் தருவார்.
இந்த அளவுக்கு, தமிழ்நாட்டினுடைய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதில் ஒரு சில பேரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றீர்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில் 2 பேரை அமர வைத்திருக்கின்றோம்.
அதில் ஒருத்தர், தம்பி ஆனந்த்குமார் வேல்குமார் இங்கே வந்து இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரரான தம்பி ஆனந்த்குமார், சமீபத்தில் சீனாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, இன்றைக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 மெடல் வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.
இதன் மூலம் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஆனந்த்குமார் இன்றைக்கு படைத்திருக்கிறார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு நம்முடைய அரசு, நாம் அத்தனைபேரும் அவருக்கு துணை நிற்போம்.
அதே மாதிரி, இங்கு வந்திருக்கக்கூடிய செஸ் கிராண்ட் மாஸ்டர்என்று போற்றப்படும் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டு வந்துள்ளார்.
வைஷாலிக்கும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
- சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
உலக கோப்பை ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஹாக்கிப் போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 13 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. ஜெர்மனி அதிகபட்சமாக 7 தடவை உலக கோப்பை ஜூனியர் ஆக்கி பட்டத்தை கைப்பற்றி உள்ளது.
இந்தியா (2001, 2016), அர்ஜென்டினா தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றன. கடைசி யாக இந்த போட்டி 2023-ம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் நடை பெற்றது. இதில் ஜெர்மனி வெற்றி பெற்றது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் 4-வது முறையாக நடைபெறுகிறது.
இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியிலும், 2016-ம் ஆண்டு லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, கனடா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, எகிப்து உள்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. அரை இறுதி மற்றும் இறுதி போட்டி சென்னையில் நடக்கிறது.
சென்னை, மதுரையில் நடைபெறும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது. மதுரையில் இதற்கான உள்கட்டமைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரத்திற்கு இணையாக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மதுரையில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.
24 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.65 கோடி ஒதுக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதோடு ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியா அமைப்பும் கையெழுத்திட்டன.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






