என் மலர்
நீங்கள் தேடியது "udhayanidh stalin"
- பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபறெ்றது.
- சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.
பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல் நடைபறெ்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.
Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.
தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
- தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள வீட்டை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், " திருவண்ணாமலையில் நடந்தது மிகவும் தயரமான சம்பவம். விபத்து நடந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.2000 கோடி கேட்கப்பட்டுள்ளது.
நாளை மாலைக்குள், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஐஐடி குழுவினர் நாளை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






