திருவண்ணாமலை மண்சரிவு- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
திருவண்ணாமலை மண்சரிவு- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
Published on

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள வீட்டை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், " திருவண்ணாமலையில் நடந்தது மிகவும் தயரமான சம்பவம். விபத்து நடந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.

அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.2000 கோடி கேட்கப்பட்டுள்ளது.

நாளை மாலைக்குள், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஐஐடி குழுவினர் நாளை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com