என் மலர்
நீங்கள் தேடியது "landslide"
- இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.
முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் அனுபவித்து வருகிறது.
அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் இதுவரை கண்டிராத வகையில் சந்தித்தது.
உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மியான்மர் - நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள்
மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

தொடர்ந்து ஜூலை மாதத்தில் பெய்த பருவமழையினால் கச்சின்மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பேரழிவுகள்
ஆப்கானிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 31-இல் ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பனிப்பொழிவு, சாலைகள் துண்டிப்பு காரணமாக அந்த மக்களுக்கு உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடித்தன.
ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை
ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வெப்பம் தகித்தது. ஜூன், ஜூலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
இந்த அதீத வெப்பத்தால் அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலைக்கு 16,500 பேர் பலியாகினர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கலிபோர்னியா காட்டுத்தீ
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

டெக்சாஸ் திடீர் வெள்ளம்
ஜூலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்தியா - பாகிஸ்தான் வெப்ப அலை
இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்ற வெயில் வாட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

சூடான் நிலச்சரிவு
ஏற்கனவே உள்நாட்டு போரால் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த வேலையில், சூடானின் தாராசின் கிராமத்தை ஆகஸ்ட் 31 ஏற்பட்ட நிலச்சரிவு மொத்தமாக விழுங்கியது.
இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் பெருவெள்ளம்
2025 ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை உருக்குலைத்தது. 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.
நேபாளம் நிலச்சரிவுகள்
அக்டோபர் மாதம் நேபாளத்தின் இலாம் (Ilam) மாவட்டத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சுமார் 60 பேர் பலியாகினர்.

மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தது.
தென்கிழக்கு ஆசியாயை தாக்கிய சென்யார் புயல்
2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை உலுக்கிய சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்ராவின் சிபோல்கா மற்றும் மேற்கு சுமத்ராவின் அகாம் பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்
இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாக்கியது. இலங்கையில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. 600-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தமிழகம் டிட்வா புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரே புள்ளி, ஒரே காரணி புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும். பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும், பருவநிலை மாறுபடுவதும் கணிக்கமுடியாத வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மனிதகுலத்தின் இருப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.
இனியேனும் உலகம் விழித்துக்கொள்ளுமா அல்லது தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கூறுவது போல் "காலநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை" என்று தான் ஒரு பொய்யான மாயையில் வாழ்ந்து கொண்டிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.
- வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து சென்றுகொண்டிருந்தது.
- கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கல் ஏற்பட்டது.
வியட்நாமில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து 32 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் கான் லே மாகாணத்தில் கணவாய் ஒன்றில் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்தின் மேல் பாறைகள் விழுந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது.
பல பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கனமழையால் கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால், மீட்புப் படையினரால் பல மணி நேரம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
நள்ளிரவுக்குப் பிறகுதான் மீட்புப் படையினர் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உடல்களும் மீட்கப்பட்டன.
கான் லே மாகாணத்தில் பல மலைப்பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது சுரங்க தொழிலாளர்கள் பீதியடைந்த ஓடினர்
- சுரங்க தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன
மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
- போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.
நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
- டார்ஜிலிங்கில் கடந்த வாரம் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் இர்பானால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து இர்பான் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ் முழுவதையும் மண் மூடியது.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பிலாஸ்பூரின் பாலு நகரில் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பாறைகள் விழுந்து பஸ் முழுவதும் மண் மூடியது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்றபோது பாஜக எம்.பி. மீது கொடூர தாக்கு.
- மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் எம்.பி.யை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை சென்று பாஜக எம்.பி.யை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
தற்போது துர்கா பூஜை காலம். பேரழிவு காரணமாக இந்த விழைவை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால், துர்கா பூஜை உரிய நேரத்தில் நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
- வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
- மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
- இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி திங்கட்கிழமை பார்வையிடுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.






