என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Landslide"
- மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட 4 தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
- கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
- அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு, மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
- மழுக்குப்பாறை சோதனை சாவடியின் இருபுறமும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதேபோல கேரள மாநிலம் சாலக்குடி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் வால்பாறை நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கி சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இந்த நிலையில் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியிலான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சாலக்குடியில் இருந்து வரும் வழியில் உள்ள வாளச்சால் என்ற பகுதியிலும், வால்பாறையில் இருந்து செல்லும் வழியில் மழுக்குப்பாறை என்ற இடத்திலும் சோதனை சாவடிகளில் இருபுறங்களிலும் இருந்து வரும் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழியில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிப்பதாக திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
- முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிவிரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Disturbing visuals have emerged from Sambhal, Pandoh - District Mandi, where, as reported, seven individuals have been swept away by flash floods today. Active rescue, search, and relief operations are currently in progress to address this dreadful situation. pic.twitter.com/OLgZGgXNlF
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 14, 2023
"மண்டி மாவட்டத்தின் சம்பல், பன்டோ பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பகுதிகளில் இதுவரை ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன," என்று முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு டுவீட் செய்துள்ளார்.
முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.
- கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது.
- மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.
சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். கவுரிகண்ட் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
தற்போது வரை இடிபாடுகளில் 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
"காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர், டாக்டர் விசாகா கூறியுள்ளார்.
மழையினாலும், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினாலும் மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம், டி.ஆா்.பஜாருக்கு இடையே உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டு கொட்டும் மழை மற்றும் கடும் குளிரில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் காத்து நின்றன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்கள், பாறை உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றினா். பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
- உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 16 பேர் பலியாகினர். தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி
நேற்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 86 கிராமவாசிகள் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
- நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மும்பை:
தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 30 பழங்குடி குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று வரை 16 பேர் பலியாகினர்.
தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
- நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மும்பை:
தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் சம்பவ இடம் அடைந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் நிலச்சரிவு குறித்து பேசினார். மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருவது பற்றி விளக்கிய அவர், உள்துறை மந்திரியிடம் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார்.
- மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களாக கனமழை
- நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வாழும் பல குக்கிராமங்கள் உள்ளன
வடஇந்தியாவில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
தொடர்மழை காரணமாக தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் மும்பையில் லோக்கல் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 46 வீடுகள் இருக்கின்றன.
இதில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் யோகேஷ் மசே கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. தாசில்தாரை உள்ளடக்கிய மீட்பு குழு மக்களை மீட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு வரவேண்டும் எனில், குறைந்தது 2 மணி நேரம் ஆகும். தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை காப்பாற்றுவதுதான் எங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மீட்பு பணிகளை மாநில மந்திரி உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இர்சல்வாடி மலையின் உச்சியில் அமைந்துள்ள கிராமமாகும்.
இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுமார் 1 கி.மீ வரை மலைப்பாதையில் செல்வது மட்டுமே வழியாக இருந்துள்ளது. நிலச்சரிவு நடந்த இடத்திற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.