என் மலர்
நீங்கள் தேடியது "Mining"
- சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது சுரங்க தொழிலாளர்கள் பீதியடைந்த ஓடினர்
- சுரங்க தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கியது.
- குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலால் மாநில கருவூலத்திற்கு ரூ.884 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ, 2011 அன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
நிறுவனத்தின் இயக்குநரான ஜனார்த்தன் ரெட்டி, அவரது மைத்துனரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அப்போதைய சுரங்கங்கள் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான VD ராஜகோபால் மற்றும் ஜனார்த்தன் ரெட்டியின் தனி உதவியாளர் மஹ்ஃபுஸ் அலி கான் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்தது. ஜனார்தன் ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான உடனேயே, சிபிஐ ஜனார்தன் ரெட்டி மற்றும் பிறரைக் காவலில் எடுத்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
- பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
- சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 43 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் அமைகிறது.
அதிலும் மாதவரம்-சிப்காட் தடத்தில் 26.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் முதல் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாதவரத்தில் இருந்து வேணுகோபால் நகர் வரை 415 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை 'ஆனைமலை' என்று பெயரிடப்பட்ட எந்திரம் தொடங்கியது.
பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 4 மாதங்களாக பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டது. 415 மீட்டர் தூரத்தையும் சுரங்கம் தோண்டிவிட்டு வேணு கோபால் நகரில் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்த ஆனைமலை எந்திரத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பலூன்களையும் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த வழித்தடத்தில் 2 பாதைகள் வேண்டுமென்பதால் கடந்த 5-ந் தேதி பால்பண்ணையில் இருந்து மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை சேர்வராயன் என்ற எந்திரம் தொடங்கியது.
இந்த எந்திரம் பணியை முடித்துவிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் வேணுகோபால் நகரில் வெளியே வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
சுரங்கம் தோண்டும் பணியில் 23 எந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது 6 எந்திரங்கள் மட்டுமே சுரங்கம் தோண்டி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
2-ம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் உயர்மட்ட ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2024) முடிந்துவிடும். 2025-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். 2027-ம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாதைக்கான பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.
- கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.
- இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்துள்ளது.
பெங்களூரு :
பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.
அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.
7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன.
இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்தித்து காட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,
- வசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ள 260 ஏக்கர் பரப்பில் இசா பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீராதாரமாக ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம், உள்ளிட்ட கிராமங்களின் மழை நீர் வடிகால் மூலமாக வரும். இதனால் நிரம்பும் ஏரியின் உபரி நீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரியின் மூலமாக, பெருமாள் ஏரி வழி சென்று கடலூர் கடலில் கலக்கும்,மழை காலங்களில் நிரம்பும் நீரைக் கொண்டு, மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,என்.எல்.சி.யில் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்பு, நீர் வரத்துக்கான வழிகள் தடைபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், நீர்வரத்துக்கான ஆதாரங்களாக மாறி, கோடைக்காலங்களில் விவசாயத்திற்கு ஆதாரமாகவும், மழைகாலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், ஓணான்குப்பம், திருவெண்ணை நல்லூர், பாதிரிமேடு, கல்குணம் விவசாய நிலங்கள் மூழ்கும் அபாய நிலை தொடர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிறுவனத்தின் மூலம் வெளியேற்றப்படும், தண்ணீர் இந்த ஏரியில் விடாததால், சம்பா பயிர்களையும், குருவை பயிர்களையும் முறையாக செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இயற்கையாக கிடைக்கும் மழைநீரால், ஏரி நிரம்ப வழியும் இல்லை, என்.எல்.சி. கழிவுகளால் ஏரியும் தூர்ந்து மேடாகிபோனது. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, இதனால் சம்பா நெல் பயிரிட்ட விவசாய நிலம் காய்ந்து கரம்பாக கிடக்கிறது, இதனால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். தூர்ந்து போன ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். ஏரிக்கு நீர் கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு 'தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடிமருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு இதன் நோக்கம்.
- கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவை (UNMAS) சார்பில் சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது
கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடி மருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குதல், தாக்குதலுக்கு உள்ளான ஊனமுற்றோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலகளாவிய சமூகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், கண்ணிவெடி தாக்குதல் பிரச்சினை ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் UNMAS உறுதி கொண்டுள்ளது.
சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது. அதன் கருப்பொருள் என்ன? மற்றும் அதன் வரலாறு நாம் அறிந்து கொள்வது அவசியம்.
கடந்த 2005 டிசம்பர் -8 ந் தேதி ஐ.நா பொது சபை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4- ந் தேதியை சுரங்க விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கக்கப்படும் என அறிவித்தது. சுரங்கங்கள் மற்றும் போரினால் பொதுமக்கள் கடும் அச்சுறுத்தல் அடைகிறார்கள்.

இதில் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை பலவித அறிவுரைகள் வழங்கி வருகிறது. மேலும், கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் ( UNMAS )செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொதுமக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ உரிய மனிதாபிமான உதவிகளை ஐ.நா. அமைப்பு செயல்படுத்தி வருகிறது.

சுரங்க விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்தவர்கள், கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகள் செய்து இதன் மூலம் உலகில் அமைதியை நிலை நாட்ட பாடுபட்டு வருகிறது.
இந்த சேவைக்கு 164 நாடுகள் ஒப்புதல் அளித்து உலக அமைதிக்காக ஐ.நா. உடன் பாடுபட்டு வருகின்றன. எனவே இந்நாளில் நாம் அனைவரும் பாதுகாப்பாக வாழ உறுதியேற்போம்.






