என் மலர்
நீங்கள் தேடியது "forest area"
- டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டிஎன்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.
இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.