என் மலர்

    நீங்கள் தேடியது "forest area"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.

    இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.

    இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முசிறி:

    முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் ஊதா நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். அவருடைய உடல் அருகே முட்புதரில் ரோஸ் நிற சட்டை கிடந்தது. மேலும் பதிவு எண் இல்லாத மொபட் ஒன்றும், அங்கு சாய்ந்த நிலையில் கிடந்தது. இறந்து கிடந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று போலீசார் கருதினர். மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எந்த பகுதியிலாவது வைத்து அடித்து கொலை செய்து, உடலை இங்கே கொண்டு வந்து வீசியிருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.

    முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பது குறித்து சுற்றுப்புற கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அடித்து கொன்றது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி அருகே வனப்பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேன்கனிககோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் நேற்று தேன்கனிக்கோட்டை வனசரகர் வெங்கடாசலம் மற்றும் வனவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த காய்ந்த செடிகள், மரம் போன்றவற்றில் பரவ தொடங்கியது.

    உடனே வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வருவதை கண்டு மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெட்டமுகிலாளம் அருகே பெல்லட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பசவராஜ் (வயது 39), கிரியப்பா மகன் சிம்மன் (45) ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்கு தீவைத்தது தெரியவந்தது. அவர்களை உடனே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புளியரை அருகே வனப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள புளியரை அருகில் தமிழக-கேரளா எல்லை பகுதியில் இருக்கும் எஸ் வளைவு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

    இவர் நேற்று தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வழியாக சென்றோர் பார்த்து புளியரை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என புளியரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×