என் மலர்

    நீங்கள் தேடியது "Forest department"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராம்குமார் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.
    • மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் நாஞ்சி கோட்டை பகுதியை சேர்ந்த வர் ராம்குமார் (வயது 65).

    இவர் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தார். அவர் கையில் ஒரு சூட்கேஷ் வைத்திருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த கும்பகோணம் போலீசார் ராம்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் கையில் வைத்திருந்த சூட்கேஷ் திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் சந்தனகட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் கும்பகோணம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    அதில் மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 1.50 லட்சமாகும்.

    இது குறித்து கும்பகோணம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்ச ம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.
    • வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

    கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள் தான் என உறுதி செய்தனர்.

    வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதனிடையே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவில் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் மர்ம விலங்கு கால்தடம் விவசாய நிலத்தில் பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கு ஒன்று நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த தகவல் காட்டு தீ போல இப்பகுதிகளில் பரவ துவங்கியது. மேலும் இந்த பகுதியில் உள்ள ஜகன், மற்றும் சின்னசாமி ஆகியோரின் தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கின் கால்தடம் பதிந்து இருப்பதை பார்த்து அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனவர் பிரவின்ராஜ் தலைமையிலன வனகாப்பாளர் சுகுமார், உள்ளிட்ட குழுவினர். மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தாமோதிரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் சார்பில் மருதேரி ஊராட்சியில் பேருஅள்ளி கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு சிறுத்தையை பார்த்தால், வனத்துறைக்கோ அல்லது ஊராட்சி மன்ற தலைவருக்கோ தகவல் கொடுக்க அறிவுறுத்தினர்,

    மேலும் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும், சின்னசாமி என்பவர் தென்னந் தோப்பில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் கிராம மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.
    • வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனைச்சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள், உள்ளன.

    உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.

    மழைக்காலங்களில் வனத்திலேயே குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும் .பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

    மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன. தற்போது ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையே சின்னாறு பகுதியில் சாலையோரம் குட்டியுடன் பெண் யானை ஒன்று உலா வருகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , குட்டியுடன் பெண் யானை நிற்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக்கூடாது. வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது.
    • அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்த கரடி

    குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் மேக்கரை வனச்சரக உதவி அலுவலர் அம்பலவாணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ராஜபுரம் காலனியில் முகாமிட்டனர். அப்போது அங்கிருந்த குளத்தின் அருகே 100-நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிலர், கரடியை பார்த்ததாக வனத்துறை யினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி ஆய்வு செய்ததில் ராஜபுரம் காலனி பகுதியில் கரடியை கண்டறிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து கரடியை அங்கிருந்து ஓட செய்தனர். அதனை பண்பொழி திருமலை கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர்.
    • யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தினமும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், வாழை, கோஸ், மற்றும் நர்சரி பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அடர்ந்த காட்டிற்குள் யானைகளை விரட்டி வருகின்றனர். ஆனால், பல பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகள், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில், ஒற்றை யானை ஒன்று மரகட்டா வனப்பகுதியிலிருந்து, உணவு தேடி வெளியேறியது. காட்டில் இருந்து சாலைக்கு வந்த அந்த யானை, மேடான வளைவு பகுதியில் சுற்றித்திரிந்தது.

    அதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்த வழியாக திரும்பிச் சென்றனர். நீண்ட நேரமாக அங்கேயே முகாமிட்டிருந்த ஒற்றை யானை, சாலையை கடந்து நொகனூர் வனப்பகுதிக்குள் சென்றது.

    யானை சாலைக்கு வந்து முகாமிட்டிருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.

    தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
    • மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை,

    தர்மபுரி மாவட்டத்தில் மக்னா யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. எனவே அந்த யானையை வனத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதன்பிறகு மக்னா யானை ஆனைமலை அடுத்த மானாம்பள்ளி காட்டுக்குள் விடப்பட்டது. அங்கும் இந்த யானை ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி யது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி மக்னா யானையை மீண்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அந்த யானை வால்பாறை அருகில் உள்ள சின்னக்கல்லாற்றில் விடப்பட்டது.

    அப்போது வனத்துறை ஊழியர்கள் மக்னாவின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், அதன் கழுத்தில் ரேடியோகாலர் பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மக்னா யானை அடர்ந்த காட்டு க்குள் செல்லாமல், ஊசி மலை டாப், அக்காமலை புல்மேடு ஆகிய பகுதி களுக்கு இடம்பெயர்ந்து சிங்கோனா பகுதிக்குள் சுற்றி திரிவது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அந்த யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். இதில் மக்னா நேற்று காலை சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்து அங்கு உள்ள பசுந்தீவனங்களை தின்றபடி, தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளது தெரிய வந்தது.

    சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்து மானாம்பள்ளி வெகு அருகில்தான் உள்ளது. எனவே மக்னா யானை அடுத்த சில நாட்களில் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.

    அப்படி ஒருவேளை மானாம்பள்ளிக்கு வந்தால் மக்னா யானை தொடர்ந்து ஆனைமலை, சேத்துமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

    எனவே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ள மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் வலசைப்பாதைகள் வழியாக வால்பாறைக்குள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவை தற்போது வழியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளியை நோக்கி ஒய்யாரமாக உலா வருவது வனத்துறையினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது.
    • தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    • ஆண் மற்றும் பெண் சிறுத்தையை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், மேலவை மண்டலம், காக்கலகுண்டா அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த சிலர் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கால்வாய் ஓடையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மாவட்ட வன அலுவலர் ரவீந்திர ரெட்டி, பெனுகொண்டா வன அலுவலர் ஆனந்த், ரேஞ்சர் சீனிவாச ரெட்டி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த ஆண் மற்றும் பெண் சிறுத்தையை நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் விஷம் வைத்து சிறுத்தைகளை கொன்றார்களா அல்லது வனவிலங்குகளிடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தைகள் இறந்ததா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
    • வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.

    அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.