என் மலர்
நீங்கள் தேடியது "புலி"
- விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
- 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் தள்ளி பூட்டினர்.
கர்நாடகாவில் புலியைப் பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குண்டல்பேட்டை அருகே பொம்மலப்புரா கிராமம் உள்ளது. ஷமீக் காலமாக கிராமத்தினரின் கால்நடைகளை அங்கு திரியும் புலி, அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்துள்ளது.
புலியைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், வனத்துறையினர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
புலியை பிடிப்பதாக பெயருக்கு ஒரு கூண்டு மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று காலை, விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், வனத்துறையினர் ஆடி அசைந்து தாமதமாக வருவதற்குள் புலி அங்கிருந்து ஓடிவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் வைத்து பூட்டினர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி பூட்டப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.
மேலும் அந்த புலியை பிடிக்கப்படும் வரை தலைமையகத்திற்குத் திரும்ப கூடாது என அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
- வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
- புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழைய கல்குவாரியில் வயதான புலி சுற்றி வந்தது. மேலும் வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் சிங்காரா வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே பகுதியில் உள்ள புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இன்று புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றனர்.
- வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இரவு கடம்பூர் அருகே கே.என்.பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக அந்த புலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றது. புலி நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பொதுவாக இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது புலி நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது வனப்பகுதியில் மழை பெய்து மரம் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால்வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. தற்போது கடம்பூர் அடுத்த கே.என் பாளையம் செல்லும் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.
- கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு அருகே கடந்த மே மாதம் ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சோக்காடு கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல்கபூர்(வயது45) என்ற தொழிலாளி புலி தாக்கியதில் பலியானார்.
அப்துல் கபூரை கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. புலியை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் சிக்காமல இருந்துவந்தது.
இந்த நிலையில் அப்துல்கபூரை கொன்ற புலி, எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும். அதனை காட்டுக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கூண்டுக்குள் சிக்கியதும் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் ஓடியதால் கூண்டில் மோதி புலியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொழிலாளியை கொன்ற புலி 50 நாட்களுக்கு பிறகு சிக்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என சீனாவில் நம்பப்படுகிறது.
- சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சீனாவின் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்து கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி கடந்த சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது.
பகல் நேரத்தில் உலா வந்த அந்த புலியை சிறுவன் உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர். அச்சமடைந்த பொதுமக்கள், புலியைப் பிடிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, வனச்சரகர் தனபால் தலைமையில் 20 வன ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளனர். மேல்கம்மநல்லி கிராம மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொது மக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
- உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.
- தேயிலை தோட்டத்திலிருந்து, சாலைக்கு எகிறி குதித்த தாய் புலியும், பின்னால் குட்டிகளும் சென்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் வனத்தில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய ஒரு புலி கோத்தகிரி அடுத்த டி.மணிஹட்டி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அவை அங்குள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்த புலி பின்னர் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது.
கிராமத்தில் குட்டிகளுடன் புலியின் நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து குட்டிகளுடன் உலாவரும் புலியை வனத்துறையினர் கண்காணித்து அடர்வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
- நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.
கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.
செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்
நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு
சிறுத்தை புலி வந்து சென்ற
தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பரமத்தி
அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது
38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு
காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்
சிறுத்தை புலி கால் தடமா?
என ஆய்வு செய்து வருகின்ற
னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட
மாட்டம் பற்றிய எந்த தடை
யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி
இருக்கலாம் என்று
வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை
களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
- கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக புலிக்குட்டிக்கு வனத்துறையினர் வேட்டையாட பயிற்சி அளித்து வந்தனர்.
- விரைவில் அந்த புலியை காட்டில் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதியில் ஒரு வயது புலிக்குட்டி ஒன்று முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்று படுகாயம் அடைந்தது. அந்த புலியை கடந்த 2021-ம் ஆண்டு 28-ந் தேதி வனத்துறையினர் மீட்டனர்.
காயத்துடன் காணப்பட்ட அந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் ஆலோசனைப்படி அந்த புலிக்குட்டி வால்பாறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்திரிமட்டம் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்ற புலிகளை போல புலிக்குட்டி வேட்டையாட முடியாமல் தவித்தது. இதனால் வேட்டையாட வசதியாக அதற்கு பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக 13 ஆயிரம் சதுர அடியில், 6 மீட்டர் உயரத்தில் ரூ.75 லட்சம் செலவில் வேலி அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக புலிக்குட்டிக்கு வனத்துறையினர் வேட்டையாட பயிற்சி அளித்து வந்தனர். முயல், பன்றி, ஆடு, கோழி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கூண்டில் விடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. புலியின் பற்கள் சேதம் அடைந்து இருந்ததால் அதற்கும் சிறப்பு டாக்டர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பல் சீரமைக்கப்பட்டது.
தொடர் பயிற்சி மற்றும் போதிய உணவு கிடைத்ததால் புலி ஆரோக்கியத்துடன் உள்ளது. தனியாக வேட்டையாடும் திறனையும் பெற்றுள்ளது. இதனால் விரைவில் அந்த புலியை காட்டில் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு பின் புலிக்குட்டி ஆரோக்கியமாக உள்ளது. தற்போது புலிக்கு இரண்டரை வயது ஆகிறது. அதன் உடல் எடை 130 கிலோவாக உயர்ந்துள்ளது. வனப்பகுதியில் புலியை விட்டால் தனியாக வேட்டையாடும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புலி வேட்டையாடும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தேசிய புலிகள் ஆணையம் உத்தரவுக்கு பின் புலி வனத்தில் விடப்படும். புலியின் செயல்பாடு குறித்து மருத்துவக்குழு வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார்.
- வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா கரிகாயம் பகுதியை சேர்ந்தவர் சோமராஜன். இவரது வீட்டின் அருகில் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. சம்பவத்தன்று காலையில் சோமராஜன், தூங்கி எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார். முற்றத்தில் பூனை போன்ற விலங்கு நிற்பதை கண்டார்.
முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார். உடனே அவரும் குடும்பத்தாரும் கதவை பூட்டி கொண்டு அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களும் புலியை பார்த்து அலறியடித்து ஓடினர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலி நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






