என் மலர்
நீலகிரி
- மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்
- எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வந்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் கூடலூர் வந்துள்ளார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார். அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்
இதையடுத்து மாணவர்களிடம் உரையாடுற்ற ராகுல் காந்தி, "கல்வி தனியார்மயமாகக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்; ஐ.டி. துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது
எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஆண்களைவிட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள்; பெண்கள் இன்னும் பலதுறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் தற்போது ஆள்பவர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
- கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வந்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் கூடலூர் வந்துள்ளார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார். அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
- கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ராகுல் காந்தி கூடலூர் வருகிறார்.
- ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
ஊட்டி:
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வருகிறார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை 3 மணிக்கு அவர் கூடலூர் வருகிறார்.
தனி ஹெலிகாப்டரில் வரும் அவர் கூடலூர் தேவர்சோலையில் உள்ள மைதானத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதேபோல அங்குள்ள சுங்கம்பகுதியிலும் காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரசார் மட்டுமல்லாது ஆ.ராசா எம்.பி., பொன்ஜெயசீலன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல் வருகையால் நீலகிரி மாவட்ட காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பு தலைவர் கிரீஸ் சோடங்கர், செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
- 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.
கூடலூருக்கு வருகை தரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல் விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
- இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
- அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நேற்று முதல் கடும் உறைபனி கொட்டி தீர்த்து வருகிறது.
அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக அங்குள்ள புல்வெளிகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியது போல உறைபனி படர்ந்து இருந்தது. சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீதும் உறை பனி படலத்தை பார்க்க முடிந்தது.
மேலும் குன்னூரில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மீது வெள்ளைக்கம்பளம் போத்தியது போல் உறைப்பனி படர்ந்து காணப்படுகிறது. பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள தேயிலை செடிகள் மற்றும் மேராக்காய் பந்தல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கரும்பாலம், சின்ன கரும்பாலம், ஜிம்கானா, குன்னகம்பை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
இதனால் அங்குள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. எனவே அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போர்வை, சால்வை உள்ளிட்டவற்றை போர்த்திக் கொண்டு நடமாடி வருகின்றனர்.
மேலும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் கடுங்குளிரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
- உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
- தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நடப்பாண்டு நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிமாக உள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது.
ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை எட்டியது. தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவியது.
இதன் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று உறைபனி படிந்து காணப்பட்டது. உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
இதற்கிடையே மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் மற்றும் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கம் காணப்படுகிறது. தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2020-க்கு முன்பு பனிப்பொழிவால் 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பில் தேயிலை செடிகள் கருகின. 2021-22-ல் பனிப்பொழிவு குறைந்ததால் 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலை செடிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றினால், தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கலாம் என்றனர்.
- சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.
இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த கனமழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தன.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண் திட்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அங்கு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கனமழைக்கு குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதேபோன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள் மீது மண் குவியல் விழுந்து கார்கள் சேதம் அடைந்தன.
மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. இதனால் ரெய்லி காம்பவுண்ட் மற்றும் மாடல் அவுஸ் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
மேலும் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் குன்னூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முதல் இன்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்தது.
ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
குன்னூர்-215, கோத்தகிரி-114, குன்னூர் புறநகர்-90, கீழ்கோத்தகிரி-73, கெத்தை-66, கிண்ணக்கொரை-63, பாலகொலா-60, கொடநாடு, குந்தா-51, பர்லியார்-46, ஊட்டி-37.4 அளவு மழை பெய்துள்ளது.
- மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது.
மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது. உடனடியாக மலை ரெயில் கல்லாறில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது.
- வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்ப்பரவல் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சங்கள் மற்றும் கோழி தீவனங்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிமாக கண்காணிக்க, கேரளா எல்லையோரம் உள்ள 7 சோதனை மற்றும் தடுப்பு சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோர சோதனை-தடுப்பு சாவடி ஆகிய 8 சோதனை தடுப்பு சாவடிகளில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது. வெளிநாடுகளில் இருந்து வரும் நோய் தாக்கிய வனப்பறவைகள் மூலமாகவும், இந்த நோய் நீலகிரி மாவட்டத்தில் நுழைய வாய்ப்பு உள்ளது.
எனவே பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதன்படி வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழி, வாத்து, வான்கோழி ஆகிய பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் பண்ணை உபகரணங்களை மாதம் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பறவைகளின் தலை மற்றும் கொண்டையில் வீக்கம், கொண்டையில் நீலநிலம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, உள்ளுறுப்பு மற்றும் கால்களின் மீது ரத்தக்கசிவு ஆகியவை பறவைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள்.
இந்த நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற-இறந்த கோழிகளை கையாளுவோருக்கும் இந்த நோய் சுவாசக்காற்று மூலம் பரவக்கூடும்.
காய்ச்சல், தொண்டை புண், இருமல் ஆகியவை மனிதர்களுக்கான பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஆகும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் இந்த நோய் பரவாது.
பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.
கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சம் மற்றும் கோழி தீவனங்களை வாகனங்களில் ஏற்றி வருவது மறுஉத்தரவு வரும்வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
- குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
ஊட்டி:
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற்சாகம், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் குளுகுளு காலநிலை, பசுமை சூழ்ந்த மலைகள், மிதமான பனி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தன.
ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு டி.ஜே. இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான வானவேடிக்கைகள், சிறப்பு விருந்துகள், பாரம்பரிய நவீன கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் களைகட்டின. சுற்றுலாப் பயணிகள் இசை, ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தனியார் ஓட்டல்கள் மற்றும் அரசின் 'ஓட்டல் தமிழ்நாடு' அரங்கிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக்கு முன்பாகவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு, அறைகள் நிரம்பி வழிந்தன.
ஊட்டியில் தங்குமிடம் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி, அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து புத்தாண்டை கொண்டாடி தீர்த்தனர்.
நீலகிரிக்கு வரும் சிறப்பு மலை ரெயில்களிலும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர். இதன்காரணமாக குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குள்ள வியாபார கடைகள், உணவகங்கள் மற்றும் நினைவுப்பரிசு கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. இதனால் அங்கு சுற்றுலாவை சார்ந்து செயல்படும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மொத்தத்தில் குளுகுளு காலநிலை, இயற்கை அழகு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான கொண்டாட்டங்களுடன் ஊட்டியில் அரங்கேறிய புத்தாண்டு விழா மறக்க முடியாத அனுபவமாக மாறி உள்ளது.
குன்னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக்,காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் புத்தாண்டையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் நகர-கிராமப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் குன்னூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு தினம், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து புறப்படும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்துக்கும் செல்ல வேண்டும்.
மேலும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற ஜனவரி 5-ந்தேதிவரை அமலில் இருக்கும்.
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் தவிர மற்ற அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன் மற்றும் மேக்சி-கேப் வாகனங்கள், எச்.பி.எப். கோல்ப்லிங்ஸ் சாலையில் நிறுத்தப்படும். அங்கு இருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுலா பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், தலைகுந்தாமட்டம் கோழிப்பண்ணை புதுமந்து வழியாக ஸ்டிபன்ஸ் சர்ச் வந்தடையும். புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர அனைத்து சுற்றுலா வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வந்தடையலாம்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சேரிங்கிராஸ், பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி நோக்கி திருப்பி விடப்படும்.
அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோலியம், கியாஸ் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஜனவரி 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
- கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் உறைப்பனி கொட்ட தொடங்கியது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.
இதனால் ஊட்டியின் வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் ஒரு டிகிரிக்கு கீழ் சென்றது. இதனால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, தலைக்குந்தா, கிளன் மார்க்கன், சூட்டிங் மட்டம், பைக்காரா, சாண்டி நல்லா, அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தாற்போல பனி படர்ந்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயில் அடித்தபோதிலும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் நிழல் தரும் பகுதிகளில் கடுங்குளிரை அதிகமாக உணர முடிந்தது.
அதிலும் குறிப்பாக பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம்-மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் அவதிக்கு உள்ளாகினர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். உறைபனியின் தாக்கம் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியுடன் அவ்வப்போது லேசாக சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் குளிரும் குறையவில்லை. இதனால் அங்கு நேற்று காலை அதிகாலை நேரங்களில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். அனைத்து சாலைகளிலும் மேக மூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர்.
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிரும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது.
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக பயணித்தன.
இருப்பினும் சாலையோர வியாபாரிகள், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுங்குளிரிலும் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.






