என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madras HC"
- தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும்.
- வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என கூறியுள்ளார்.
- வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.
- எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், அவருக்கு பேட்டிக் கொடுத்த கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், இவர்களிடம் இருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடும் கேட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், அவர் இதில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வந்தால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால், சாட்சியத்தை வீட்டில் வந்து பதிவு செய்ய வக்கீல் ஆணையராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வக்கீல் ஆணையராக வக்கீல் கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும். பாதுகாப்பு காரணமாக இதுபோல நேரில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது. அதுவும் சென்னை ஐகோர்ட் வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். அதனால், எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு வாதம்.
- இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில், விசாரணைக்காக ஆஜர் ஆகும்படி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இச்சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அதன் விவரம்:-
* கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலக்காத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.
* சட்ட விரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.
* அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது.
* பாஜக ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
* அமலாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது.

* மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.
* மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப்பெறலாம்.
* விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ரூ.4,500 கோடி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவியாகத்தான் ஆவணங்கள் கேட்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க கேட்டும் டிஜிபி கொடுக்கவில்லை. அவற்றை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும்? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்க உள்ளனர்.
- கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும்.
- சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை.
சென்னை:
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரெயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் 2021-ம் ஆண்டு செந்தில்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கணவர் செந்தில் குமாருக்கு விடுப்பு கோரி அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில்குமாருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கியும் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும். மேலும் இந்நாட்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- மேல்முறையீடு மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 7-ந்தேதி விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு 15-ந்தேதி (இன்று)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி, 'தனி நீதிபதி என். சதீஷ்குமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அசல் ஆவணம் இதுவரை கிடைக்கவில்லை. அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். அதுவரை ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடுகளை பயன்படுத்தக் கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்க வேண்டும்' என்று வாதிட்டனர்.
அதற்கு நீதிபதிகள் அந்த இடைக்கால தடையை நீக்குவதற்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை நாளை (16-ந்தேதி) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார்.
- வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், திருவான்மீயூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகே உள்ள உய்யகொண்டரவி கிராமம் ஆகும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், சென்னையில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். என் தாயார், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் அந்த கிராமத்தில்தான் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், என்.எல்.சி., விரிவாக்கத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலம், வீடு இருந்த நிலம் ஆகியவற்றை 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை கொடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, மாற்று வீட்டு மனை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதற்காக சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, எனக்கு மாற்று வீட்டு மனை கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு வழங்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி என் விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார். இதன்பின்னர், கடலூர் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்ற கலெக்டர், நான் உள்ளூரில் வசிக்காததால், மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறி, வீட்டு மனை வழங்க மறுத்து கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, வீட்டு மனை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பெயரில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேசிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டத்தின்படி, உள்ளூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே மாற்று வீட்டு மனை வழங்கப்படும், மனுதாரருக்கு உள்ளூரில் நிரந்தர முகவரி இல்லை. வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.சக்திவேல், ''மனுதாரர் சொந்த ஊரை விட்டு, வேலைக்காகத்தான் சென்னை வந்துள்ளார். அதற்காக அவருக்கு உரிமை இல்லை என்று கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது'' என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.வேல்முருகன், ''சென்னையில் வேலைக்காக வந்து வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு போகக்கூடாதா? சொந்த ஊரில் உள்ள சொந்தங்கள் வீட்டுக்கு போக மாட்டார்களா? தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டாடாமல், கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும்?'' என்று சரமாரியாக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 3 மாதங்களுக்குள் மனுதாரருக்கு மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
- 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
- வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
சென்னை:
யூடியூபர் டி.டி.எப். வாசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் டி.டி.எப். வாசன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
- வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி கடந்த 16-ந்தேதி காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது.
- ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால் மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டை முன்னிட்டும், மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநிலம் முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பிரசார பயணங்கள், பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி.-க்கு அக்டோபர் 10-ந்தேதி மனு அளிக்கப்பட்டது.
அதற்கு எந்த பதிலும் இல்லாததால், இந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது.
இது போன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம் தான் மனு அளிக்க வேண்டும். உள்ளூர் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால் உள்ளூர் சூழலை பொறுத்து முடிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது என்று அரசு வக்கீல் கூறினார்.
இதனையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் மனு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து 7 நாட்களில் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டார்.
ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால் மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைந்து உள்ளது.
- சென்னை பெரம்பூரில் பள்ளி படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் இரு புதிய நீதிபதிகளையும், அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார்.
அப்போது அவர், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து தற்போது ஐகோர்ட்டு நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கும் இவர்கள் இருவரும் வக்கீல்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றார்.
இதே போல புதிய நீதிபதிகளை வரவேற்று பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மின்னணு முறை மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு பல்வேறு வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர்.
ஏற்புரையாற்றிய இரு நீதிபதிகளும், தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதாக தெரிவித்தனர்.
புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி