என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் சூதாட்டம்"
- லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் ஆன்லைன் மூலமாக ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலமாக லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமார், சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ரூ.19 லட்சம் பணம் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் கூறினார்கள்.
- கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.
போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
- தர்ஷன் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கர்நாடக அரசு ஊழியர் தர்ஷன் பாபு. நீர்வளத்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவை அடுத்த சித்ரதுர்கா என்ற பகுதியில் வசித்து வந்த தர்ஷனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ரஞ்சிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தர்ஷன் - ரஞ்சிதா தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு.
திருமணம் ஆன ஒருவருடத்தில் இருந்து தர்ஷன் பாபு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தர்ஷன் பாபு சூதாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக சூதாடியதில் தர்ஷன் அதிக பணத்தை இழந்துள்ளார்.

சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் போது, மீண்டும் கடன் பெற்று சூதாடுவதை தர்ஷன் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கடனாக பெற்று இருக்கிறார். கடனாக பெற்ற தொகையை சூதாட்டத்தில் இழந்த தர்ஷன், இழந்த தொகையில் ரூ. 1 கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.
எனினும், கடனில் ரூ. 84 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். கணவர் தர்ஷன் பெற்ற கடன் தொகையை திரும்ப கேட்டு, மனைவி ரஞ்சிதாவிடம் கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடன்தாரர்கள் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த மனைவி ரஞ்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணத்தை ரஞ்சிதா கடிதம் ஒன்றில் எழுதி வைத்திருக்கிறார். அதில் கடன்தாரர்கள் என்ன தொல்லை கொடுத்தனர் என்று விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.
கணவனின் சூதாட்ட பழக்கம், கழுத்தை நெறித்த கடன், கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






