search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl betting"

    • கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
    • தர்ஷன் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    கர்நாடக அரசு ஊழியர் தர்ஷன் பாபு. நீர்வளத்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவை அடுத்த சித்ரதுர்கா என்ற பகுதியில் வசித்து வந்த தர்ஷனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ரஞ்சிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தர்ஷன் - ரஞ்சிதா தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு.

    திருமணம் ஆன ஒருவருடத்தில் இருந்து தர்ஷன் பாபு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தர்ஷன் பாபு சூதாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக சூதாடியதில் தர்ஷன் அதிக பணத்தை இழந்துள்ளார்.

     


    சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் போது, மீண்டும் கடன் பெற்று சூதாடுவதை தர்ஷன் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கடனாக பெற்று இருக்கிறார். கடனாக பெற்ற தொகையை சூதாட்டத்தில் இழந்த தர்ஷன், இழந்த தொகையில் ரூ. 1 கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.

    எனினும், கடனில் ரூ. 84 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். கணவர் தர்ஷன் பெற்ற கடன் தொகையை திரும்ப கேட்டு, மனைவி ரஞ்சிதாவிடம் கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடன்தாரர்கள் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த மனைவி ரஞ்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கான காரணத்தை ரஞ்சிதா கடிதம் ஒன்றில் எழுதி வைத்திருக்கிறார். அதில் கடன்தாரர்கள் என்ன தொல்லை கொடுத்தனர் என்று விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    கணவனின் சூதாட்ட பழக்கம், கழுத்தை நெறித்த கடன், கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவலை ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu
    மும்பை:

    சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். 

    கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பினர். இன்று அவர் போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், பிடிபட்ட சோனு ஜலான் இன்று தானே நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சூதாட்ட வழக்கு ஜாமினில் விடுவிக்கப்படக்கூடிய குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் வருவதால் சோனு ஜலானை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர், மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் தரப்பு வக்கீல், கைதான சோனு ஜலானுடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலரை பற்றி விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். இதைதொடர்ந்து, தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவல் ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu 
    உத்தரப்பிரதேச மாநிலம் நந்தகிராம் பகுதியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPLgambling
    லக்னோ:

    இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் நந்தகிராம் பகுதியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில் அப்பகுதி கவுன்சிலரின் கணவரின் அலுவலகத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், ஒரு மடிக்கணினியும், லட்சக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். #IPLgambling
    ×