என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "UP"
- திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதரசா சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
- மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது
2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது என்று கூறி அந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 22 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு, உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
- ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.
இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
- பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.
அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.
ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.
- மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
- ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல்.
நாட்டில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
அந்த வகையில், 2024 குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேச மாநிலம் சார்பில் குழந்தை ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே அலங்கார ஊர்தியுடன் அம்மாநிலத்தில் நடைபெறும் மெட்ரோ பணிகளை எடுத்துரைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் பெட்டி ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில்- ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியாணா, ஜார்க்கண்ட், லடாக், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகலயா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என தெரிகிறது.
- வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
- விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.
இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பயணிகள் வேண்டுகோள் விடுத்ததால் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்தம்
- ஒப்பந்த ஊழியராக செயல்பட்டவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் அம்மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த கண்டக்டராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெரேலியில் இருந்து டெல்லி ஜன்ராத் சென்ற பேருந்தில் கண்டக்டர் பணியில் இருந்துள்ளார்.
அப்போது தொழுகைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக தெரிகிறது. சில பயணிகள் தொழுகை நடத்துவதற்காக பேருந்தை நிறுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
மோஹித் யாதவ்தான் அவரது வீட்டிற்கு மூத்த பிள்ளை. அவருடைய 17 ஆயிரம் சம்பளத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.
கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கியதும் பல இடங்களில் வேலை தேடி அழைந்துள்ளார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. மேலும், மண்டல மானேஜரிடம் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த திங்கட்கிழமை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பர் செய்வதறியாமல் உள்ளது.
மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் ''உத்தர பிரதேச போக்குவரத்து துறை எனது கணவரின் கோரிக்கையை கேட்காத வண்ணம் செவிடாகிவிட்டது. பெரேலி மண்டல மானேஜரை தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், எனது கணவர் தரப்பு வாதங்களை அவர் கேட்கவில்லை'' என்றார்.
பேருந்தை மோஹித் யாதவ் நிறுத்துவதற்கு முன், அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''நாங்களும் இந்துக்கள்... இந்து, முஸ்லிம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்தினால், என்ன நடக்கும்'' என்பதுபோல் அந்த வீடியோ விவரிக்கிறது.
- சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
- சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.
இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.
சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.
சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்