என் மலர்
நீங்கள் தேடியது "UP"
- டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.
- ஆசிரியர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார்.
- ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அந்த பள்ளியில் ஆசிரியை செய்த அநாகரிக செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியை முன்பாக மாணவ-மாணவிகள் பாடம் கவனிக்க ஆவலோடு உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அவர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார். தொடர்ந்து தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கிறார்.
ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார். வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் சாவகாசமாக தலையை விரித்துபோட்டு எண்ணெய் தேய்த்ததுடன் சொந்த வேலைக்கு பள்ளி மாணவிகளை பயன்படுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
வகுப்பில் அலட்சியமாக செயல்பட்ட அவர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை என தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம்.
- வீடியோவில் உள்ள அந்த பெண் இயக்கும் ஷாலினி பாண்டே என்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக கான்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பாடலுக்கு அந்த பெண் நடனமாடி உள்ளார்.
பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.
இதுதொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் தயவுசெய்து உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.
ஒரு பயனர், அந்த நபர்களது துப்பாக்கிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த கன்னாஜ் காவல்துறை, இந்த விஷயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் கான்பூர் நகரில் வசிப்பவர் என்றும், அவர் கான்பூர் நகர் மாவட்டப் பகுதிக்குள் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக கான்பூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் ஷாலினி பாண்டே என்றும், அவருக்கு 60,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் 2,550க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, "லக்னோ ராணி" என்று அழைக்கப்படும் சமூக ஊடகத்தில் பிரபலமான சிம்ரன் யாதவ், லக்னோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ மூலம் வைரலானார். வைரலான அந்த வீடியோவில், அவர் துப்பாக்கியை அசைத்துக்கொண்டே போஜ்புரி பாடலுக்கு நடனமாடுவது காட்டப்பட்டது. லக்னோ காவல்துறை இந்த வீடியோவை கவனித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பிரயாக்ராஜில் உள்ள உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சிலின் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி, அனைத்து அடிப்படை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உ.பி. முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- ஒரு வாரத்திற்கு முன்னதாக 3ஆவது திருமணம் செய்துள்ளார்.
- அடிக்கடி தகராறு ஏற்பட புது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகள் உடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், 3ஆவது திருமணம் செய்த நபர், ஒருவாரத்திற்குள் புது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பால் (வயது 44). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து, இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஜான்பூர் மாவட்டச் சேர்ந்த ஆர்த்தி பால் (வயது 26) என்பவரை 3ஆவது முறையாக திருமணம் செய்துள்ளது.
திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட ராஜூ கோபத்தில் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் ஆர்த்தி பால் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஆர்த்தி பாலை அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆர்த்தி பாலை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்பாக போலீசார் ராஜூவை கைது செய்துள்ளனர். திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியை அடித்துக் கொலை செய்ய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மீரட்டில் கடந்த மாதம் கணவனை கொலை செய்து டிரம்மில் அடைத்த சம்பவம் நடைபெற்றது.
- அதேபோல் துபாயில் இருந்து வந்த கணவனை கொலை செய்த மனைவி உடலை சூட்கேசில் அடைத்து வீசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்து டிரம்மில் உடலை போட்டு சிமெண்ட் வைத்து அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் இந்தியாவை பயத்தில் நடுநடுங்க வைத்தது.
இந்த நிலையில் உத்தர பிரதேசம் கோரக்பூரில் அதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பதௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவுஷாத் அகமது (வயது 38). இவரது மனைவி ரஜியா. நவுஷாத் அகமது துபாயில் வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக சொந்த கிராமம் வந்துள்ளார்.
நவுஷாத் அகமது துபாயில் வேலை பார்த்தபோது ரஜியாவுக்கும், ரூமான் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் இது கள்ளக் காதலாக மாறியுள்ளது. கணவர் சொந்த கிராமம் திரும்பியதால் அவர்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்துள்ளனர்.
இதனால் கணவனை தீர்த்துக்கட்ட கள்ளக் காதலனுடன் ரஜியா திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூமான் நண்பர் ஹிமான்ஷு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நவுஷாத் அகமது கொலை செய்துள்ளனர். கொலை செய்ததுடன் உடலை இரண்டு துண்டாக வெட்டியுள்ளனர். வெட்டிய உடலை சூட்கேசில் வைத்து திணித்து 55 கி.மீ. தூக்கிச் சென்று பட்கவுலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வீசிவிட்டு வந்துள்ளனர்.
விவசாயி காலையில் விவசாய நிலத்திற்கு செல்லும்போது, அங்கே ஒரு சூட்கேஸ் கிடப்பதை கண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சூட்கேஸை திறந்து பார்க்கும்போது இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வரும்போது சூட்கேஸில் விமானம் பயணம் தொடர்பான டேக் ஒட்டப்பட்டிருக்கும். அந்த டேக் அகற்றப்படாமல் அப்டியே இருந்துள்ளது. அந்த டேக்கை வைத்து நவுஷாத் அகமது வீட்டை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
நவுஷாத் அகமது மனைவி முதலில் தனது கணவரை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை எனக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையின்போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.
பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
- 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.
- ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
- உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்
ஃபிரோசாபாத்:
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
- நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
- சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.
இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.
சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.
சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.
- பயணிகள் வேண்டுகோள் விடுத்ததால் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்தம்
- ஒப்பந்த ஊழியராக செயல்பட்டவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் அம்மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த கண்டக்டராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெரேலியில் இருந்து டெல்லி ஜன்ராத் சென்ற பேருந்தில் கண்டக்டர் பணியில் இருந்துள்ளார்.
அப்போது தொழுகைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக தெரிகிறது. சில பயணிகள் தொழுகை நடத்துவதற்காக பேருந்தை நிறுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
மோஹித் யாதவ்தான் அவரது வீட்டிற்கு மூத்த பிள்ளை. அவருடைய 17 ஆயிரம் சம்பளத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.
கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கியதும் பல இடங்களில் வேலை தேடி அழைந்துள்ளார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. மேலும், மண்டல மானேஜரிடம் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த திங்கட்கிழமை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பர் செய்வதறியாமல் உள்ளது.
மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் ''உத்தர பிரதேச போக்குவரத்து துறை எனது கணவரின் கோரிக்கையை கேட்காத வண்ணம் செவிடாகிவிட்டது. பெரேலி மண்டல மானேஜரை தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், எனது கணவர் தரப்பு வாதங்களை அவர் கேட்கவில்லை'' என்றார்.
பேருந்தை மோஹித் யாதவ் நிறுத்துவதற்கு முன், அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''நாங்களும் இந்துக்கள்... இந்து, முஸ்லிம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்தினால், என்ன நடக்கும்'' என்பதுபோல் அந்த வீடியோ விவரிக்கிறது.






