என் மலர்
நீங்கள் தேடியது "teacher"
- நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டி யனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேசுக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி, ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கோகிலபாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் கோகிலபாண்டியன் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
- மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார்.
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், மல்காஜ்கிரி அடுத்த போச்சாரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மைதீன் (வயது 27) என்பவர் இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய மைதீன் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் பாடம் நடத்தினார்.
மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார். மாணவியும் அவரது ஆசை வார்த்தையில் மயங்கி மைதீனை காதலித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் தனது மகளின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பதை கண்ட அவரது தாயார் மகளிடம் விசாரித்தார். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தனர். பின்னர் மல்காஜ்கிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்ற மாணவர், தனியாக வசிக்கும் ஆசிரியரை மிரட்டியுள்ளார்
- கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெஹ்ரா நகரில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜன.24ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 18 வயது மாணவர் முகமது கான் அன்சாரி இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என திமிராக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அப்போதே ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27 அன்று, தனது தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த அந்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டலை தொடர்ந்து ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 3 ஆம் தேதி ஷெஹ்ரா காவல் நிலையத்தில் மாணவர், பள்ளி சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் சீற்றத்தை தூண்ட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
- மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
- மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.
முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
- அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.
அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.
Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.
அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.
இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஆத்மகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வனஜா என்பவர் 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். அவர் தனது சொந்த திறமை மற்றும் தனிப்பட்ட பாணியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
இது அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர் பள்ளியில் இருந்து விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி குழந்தைகள் வனஜாவை சூழ்ந்தபடி மேடம் போகாதீர்கள் என கூறியபடி கதறி அழுதனர். சில பள்ளி குழந்தைகள் அவரை கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.
ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் பள்ளி குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
இந்த காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.
- சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார்.
- ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அந்த பள்ளியில் ஆசிரியை செய்த அநாகரிக செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியை முன்பாக மாணவ-மாணவிகள் பாடம் கவனிக்க ஆவலோடு உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அவர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார். தொடர்ந்து தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கிறார்.
ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார். வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் சாவகாசமாக தலையை விரித்துபோட்டு எண்ணெய் தேய்த்ததுடன் சொந்த வேலைக்கு பள்ளி மாணவிகளை பயன்படுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
வகுப்பில் அலட்சியமாக செயல்பட்ட அவர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை என தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
- திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, மாணவியின் மறைவுக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
- ஆண்டு விழா நடனத்திற்கு தயார் செய்யும்போது மாணவன் மீது ஒரு ஈர்ப்பு.
- அந்த மாணவனை தன் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40. குழந்தைகள் உள்ளன.
2023-ஆம் ஆண்டு அந்த மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த வருடம் டிசம்பர் மாதம் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்கான குழுவை அமைக்கும் பணியில் ஆசிரியை ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த மாணவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அந்த மாணவவை நோக்கி பாலியல் சைகைகளும் காட்டியுள்ளார்.
இதனால் அந்த மாணவன், பயந்து ஒதுங்கியுள்ளான். ஆசிரியையை சந்திப்பதை தவிர்த்துள்ளான். ஆனால் ஆசிரியை அந்த மாணவின் பெண் தோழிகளை பிடித்து (இவர்கள் பள்ளியில் படிக்கவில்லை) பேசுவதற்கு உதவி கேட்டுள்ளார்.
மேலும், அந்த மாணவரிடம், ஆசிரியையின் நண்பர்கள் வயதான பெண்களுடன், இளம் பையன்கள் தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது சகஜம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நீ, உனக்கு நீ என இருவரும் படைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியையை சந்திக்க மாணவன் முடிவு செய்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அந்த மாணவனை ஆசிரியை காரில் ஏற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவனது ஆடைகளை கழற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த மாணவன் பதற்றமான நிலையை உணரும்போது, அதற்கான மாத்திரிகைள் வழங்கியுள்ளார்.
மேலும், நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்து, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் வர, பெற்றோர் அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, மாணவன் தனக்கு நடந்த அவல நிலையை விவரித்துள்ளான். பையன் விரைவில் பள்ளி படிப்பை முடிக்கப் போகிறான். இந்த விசயத்தை அப்படியே மறைத்து விடுவோம். அதன்பின் ஆசிரியை பையனை தொடரமாட்டார் என நினைத்துள்ளனர்.
ஆனால் நிலையை மேலும் மோசமானது. மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறிய பின்னரும், அந்த ஆசிரியை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய வீட்டு வேலைக்காரர் மூலம் அந்த மாணவனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த மாணவின் பெற்றோர், போலீசை அணுகி புகார் அளித்துள்ளனர்.
போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






