என் மலர்
நீங்கள் தேடியது "slap"
- தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்ற மாணவர், தனியாக வசிக்கும் ஆசிரியரை மிரட்டியுள்ளார்
- கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெஹ்ரா நகரில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜன.24ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 18 வயது மாணவர் முகமது கான் அன்சாரி இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என திமிராக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அப்போதே ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27 அன்று, தனது தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த அந்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டலை தொடர்ந்து ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 3 ஆம் தேதி ஷெஹ்ரா காவல் நிலையத்தில் மாணவர், பள்ளி சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் சீற்றத்தை தூண்ட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
- காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.
இதற்காக, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
- காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.
சண்டிகர் விமான நிலையத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.
இதனால், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.
ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #PMModi
குழந்தைகள் தங்களது பெற்றோர்களையும் தாண்டி அதிக நேரம் பள்ளி ஆசிரியர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களது குழந்தை தன்மையை இழந்தால் மட்டுமே பள்ளிகளில் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை தற்போதைய தனியார் பள்ளிகள் உருவாக்கி விட்டன.
அந்த நிலை தான் சரியானது எனும் மாய பிம்பைத்தை பெற்றோர்களிடமும் ஏற்படுத்திவிட்டன. குழந்தைகளை அவர்களின் இயல்பான குணங்களை விடுத்து, புத்தகம் கற்கும் கணினிகளாக பள்ளிகள் வளர்க்கின்றன. அதனை மீறும் குழந்தைகள் கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் காலை பிரேயரின் போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கொட்டாவி விட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை அடித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் தண்டனை அளிக்கப்படும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






