என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himachal Pradesh"

    • காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
    • மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.

    ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.  

    • சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
    • ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள், சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தாக்கப்பட்டதால், அந்தச் சிறுவனின் காதில் இரத்தம் வந்துள்ளதுடன், செவிப்பறையும் சேதமடைந்துள்ளது என்று சிறுவனின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதோடு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவனது காற்சட்டைக்குள் ஒரு தேளைப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களை வெளியே சொன்னால், கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாலோ வாழ்க்கையையே தொலைத்துவிடுவீர்கள் என மிரட்டப்பட்டுள்ளனர். 

    பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும், ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

    • பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
    • கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.

    அண்மையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    அப்போது கிராம வாசிகள் சிறுத்தையைச் சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

    சிறுத்தை திரும்பி தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதன்பின் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ் முழுவதையும் மண் மூடியது.
    • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    பிலாஸ்பூரின் பாலு நகரில் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பாறைகள் விழுந்து பஸ் முழுவதும் மண் மூடியது.

    தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.

    இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    • அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
    • அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.

    அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.

    Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.

    அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.

    இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • ரூபாய் 7,616-க்கான காசோலையில் பள்ளி தாளாளர் கையெழுத்திட்டுள்ளார்.
    • Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக Saven Thursday six harendra sixty Rupees Only என எழுத்தியுள்ளார்.

    Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்தற்குப் பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.

    பள்ளி தாளாளர் ஒருவேரே இப்படி எழுதினால், பள்ளிக் குழந்தைகள் நிலை என்ன? என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    • இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
    • மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.

    வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.

    மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.

    மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.

    • கொரோனா காரணமாக இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் தொடங்க சீனா ஒப்புதல்

    இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது

    கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

    வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
    • தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

    • மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    லாஷவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்பத் கிராமத்தில் நிலைமை மோசமாக உள்ளது. முன் எச்சரிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையால் பஸ் நிலையம் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள பல கடைகள் சேதம் அடைந்தன. கர்பத், கங்குட் மற்றும் உட்கோஸ் நாலா பகுதிகளிலும் மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்தன.

    மேக வெடிப்பால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் இன்றும் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது
    • சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு  அணை இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திடீர் மேக வெடிப்பு காரணமாக மலானா நதி கொந்தளிப்பாக மாறியது. வெள்ளத்தின் தீவிரத்தால் நேற்று, மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.  இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இந்த வெள்ளத்தில் மலானா தடுப்பணை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் காகிதப் படகுகள் போல அடித்துச் செல்லப்பட்டன.

    சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் நான்கு முதல் ஐந்து தொழிலாளர்கள் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இடம்பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், உணவு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   

    • கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டது.

    இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், காங்ரா பகுதியில் பாலத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக தாங்கு சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் எந்த விபத்தும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் ரத்தன், "அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளோம்" என்றார்.

    ×