என் மலர்
நீங்கள் தேடியது "Himachal Pradesh"
- இந்திய இளைஞர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இளைஞர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேச அரசு கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. அதாவது தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை வளர்க்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது
- ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பனி மூடிய சாலையில் ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி உள்ளது.
இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது. எனவே ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்தார். மேலும் கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்தார்.
ஆனால் தரை வழுக்களாக இருந்ததால் அவர் அதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. கடைசியில் டிரக் சறுக்கியவாரே சாலையை விட்டு விலகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
हिमाचल प्रदेश में बर्फबारी जारी है। 4 मुख्य रोड सहित कुल 23 रोड ब्लॉक हैं। 51 प्वाइंट पर इलेक्ट्रिसिटी प्रभावित है। क्रिसमस के बाद न्यू ईयर सेलिब्रेशन के लिए मनाली हाउसफुल होता जा रहा है। Video मनाली का है। pic.twitter.com/S80esrwULS
— Sachin Gupta (@SachinGuptaUP) December 28, 2024
இமாச்சலில் கடந்த டிசம்பர் 8 இல் முதல் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. மணாலியில் பனிப்பொழிவு காரணமாக சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1,000 வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன. மேலும் குலு [kullu] பகுதியில் ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரிலும் நேற்றைய தினம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
- காசிகுண்ட் நகரில் பனிப்பொழிவைத் தொடர்ந்து 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
- ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நேற்று [வெள்ளிக்கிழமை] தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இதில் தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீரின் சமவெளிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 8 [இன்ச்]அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, கந்தர்பால் மற்றும் சோனாமார்க்-இல் 7-8 அங்குலங்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள ஜோஜிலா ஆக்சிஸில் 15 அங்குல பனியும், அனந்த்நாக் மாவட்டத்தில் 17 அங்குலங்கள் வரை பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.

பஹல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் பிற பகுதிகளிலும் கணிசமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.
பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகரில் நேற்று பனிப்பொழிவைத் தொடர்ந்து சுமார் 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டது. ஸ்ரீநகர் வரும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இன்று [சனிக்கிழமை] சுமார் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
#WATCH | Latest visuals from Srinagar as the city recorded the first snowfall of the season, marking the arrival of winter in Jammu & Kashmir's summer capital pic.twitter.com/Hr8tzoBDtK
— ANI (@ANI) December 27, 2024
இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தின் குலு[ Kullu] பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான சோலாங் நாலாவில் பனிபொழிவால் சிக்கித் தவித்த சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டனர்.
லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா மற்றும் கின்னவுர் உள்ளிட்ட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்று [வெள்ளிக்கிழமை] கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
- ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
- வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி
சிம்லா:
இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.
திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.
சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
- மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
- தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | Himachal Pradesh: Traffic congestion and slow vehicular movement witnessed in Manali as people throng to hilly areas after fresh snowfall(Source: Himachal Pradesh Police) pic.twitter.com/hmWfK6Xxjq
— ANI (@ANI) December 24, 2024
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.
Snowfall started ❄️☃️?️?Jubbal area Upper Shimla Area, Himachal Pradesh, India ?? ?️ Alt 6300ft?️23/12/2024?02:10 PM pic.twitter.com/9HcpNgIZRU
— Akhil Mehta (@Akhilfrmchd) December 23, 2024
Himachal Pradesh | Shimla is completely covered with snow due to the region's intense #snowfall. pic.twitter.com/twJ9i4YfME
— JK Media (@jkmediasocial) December 23, 2024
இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
VIDEO | Himachal Pradesh: Shimla clad in snow cover.The nearby tourist spots of Kufri and Narkanda and the higher reaches of Kharapathar, Chaurdhar and Chanshal South portal of the Atal tunnel, and Samdho also received snowfall.#Shimla #WeatherUpdate (Full video available… pic.twitter.com/1JjOgRq6jK
— Press Trust of India (@PTI_News) December 24, 2024
#WATCH | Himachal Pradesh | Snow-covered mountains in Shimla make the hill city look like a winter wonderland(Drone visuals shot at 1015 hours) pic.twitter.com/pKiZsZ81zY
— ANI (@ANI) December 24, 2024
தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
#WATCH | Himachal Pradesh: Nawar valley of Tikkar area in Shimla district covered in a blanket of thick snow, as the area receives heavy snowfall. pic.twitter.com/L71l1yTssr
— ANI (@ANI) December 24, 2024
#WATCH | Himachal Pradesh: Nawar valley of Tikkar area in Shimla district covered in a blanket of thick snow, as the area receives heavy snowfall. pic.twitter.com/L71l1yTssr
— ANI (@ANI) December 24, 2024
- கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் இருந்து வந்த 700 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.
#WATCH | Himachal Pradesh: Heavy snowfall causes a long traffic jam as nearly 1000 vehicles get stuck between Solang and Atal Tunnel, Rohtang. The police team is busy clearing the traffic jam amid snowfall. 700 tourists have been rescued safely. (23.12)
— ANI (@ANI) December 23, 2024
Source: Himachal Pradesh… pic.twitter.com/wb9ZfKh6H6
- சி.ஐ.டி, தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு.
- பிரபல ஓட்டலில் இருந்து வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வந்த சமோசாக்களை அவருடைய பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கியது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இதை கிண்டல் செய்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 21-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி. தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி பிரபல ஓட்டலில் இருந்து 3 பெட்டிகளில் சமோசாக்கள் மற்றும் கேக் வந்துள்ளது. இந்த சமோசாக்கள் முதலமைச்சர் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த இமாச்சல பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது இமாச்சல பிரதேச மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமோசா தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறித்து பா.ஜ.க. தலைமை செய்தி தொடர்பாளர் ரந்த்வீர் சர்மா "காங்கிரஸ் முதல்வரின் சமோசா குறித்து கவலைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உண்மையில், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி., தொடர்பான நிகழ்ச்சிகளில், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பிரச்னையால், அரசு இயந்திரம் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறது" என்றார்.
- இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
- கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநில காஙகிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிளாக் காங்கிரஸ் கமிட்டிகளின் மாநிலப் பிரிவு முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.
ஹமிர்பூர்:
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது.
இமாசல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. பல நூற்றாண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த திருமண மான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் தீபாவளி கொண்டாடு வதற்காக தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி தீபாவளி கொண்டாட வந்த அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது புரண்டார். துக்கம் தாங்காமல் இருந்த அந்த பெண் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவர் அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.
அன்றிலிருந்து இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பக்கத்து கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் கேட்கும் நேரத்தில் இங்கு மயான அமைதி நிலவுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது இந்த கிராமத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்காது. அதனையும் மீறி தீபாவளி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்ட மும், பேரழிவும் ஏற்படும். மற்றும் மரணத்தை வரவழைக்கும் அபாயமும் ஏற்படும் என்று இளைய சமூகத்தினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இந்த கிராம மக்கள் யாரும் அந்த பெண்ணின் சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடுவதில்லை. பல நூற்றாண்டுகளாக இன்று வரை அது தொடர்கிறது.
இதுகுறித்து திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்த பஞ்சாயத்து நிர்வாகியான பூஜாதேவி என்ற பெண் ஒருவர் கூறியிருப்பதாவது:-
நான் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடுவதை பார்த்த தில்லை. இந்த கிராம மக்கள் வெளியூரில் குடியேறினாலும் அந்த பெண்ணின் சாபம் அவர்களை விட்டு விலகவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு கிராமத்தில் குடியேறினார். அங்கு அவர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பலகாரம் செய்த போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. அந்த பெண்ணின் சாபத்தால்தான் இது நடந்ததாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.
இதனால் கிராம மக்கள் தீபாவளியன்று அந்த பெண்ணை வணங்கி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் என்று அந்த பெண் கூறினார்.
மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த 70 தீபாவளிகளை கண்ட பெரியவர் ஒருவர் கூறியிருப்பதாவது:-
இந்த கிராமத்தில் யாராவது ஒருவர் தீபாவளியை கொண்டாடும் போதெல்லாம் ஏதோ ஒரு துரதிஷ்டம் அல்லது இழப்பு ஏற்படுகிறது என்றார்.
மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, பல நூற்றாண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.
தீபாவளி நாளில் ஒரு குடும்பம் தவறுதலாக பட்டாசுகளை வெடித்து வீட்டில் பலகாரம் செய்தால் பேரழிவு நிச்சயம் என்று கூறியுள்ளார்.
இளைய தலைமுறையினர் இந்த நம்பிக்கையில் இருந்து விடுபட விரும்பினாலும் கடந்த காலத்தில் நடந்த விபரீதங்கள் அவர்களை தீபாவளி கொண்டாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது.
- மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் மற்றும் முகவரிகளை பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இன்று நடைபெற்ற மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங் மற்றும் அனிருத் சிங் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார்.
இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டவிரோதமாக மசூதி பகுதியில் கட்டப்பட்டதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள சஞ்சௌலி என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியை ஒட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக இந்த கட்டுமான பணி நடைபெற்று வருவதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இன்று நூற்றுக்கணக்கானோர் சப்சி மண்டி தல்லி என்ற இடத்தில் இருந்து சஞ்சௌலி நோக்கி பேரணி நடத்தினர். அப்போது ஜெய் ஸ்ரீ ராம், ஹிந்து ஒற்றுமை ஜிந்தாபாத் (Hindu Ekta Zindabad) என கோஷமிட்டனர். அவர்களை மசூதி அருகே செல்ல விடாமல் போலீசார் தடுப்பு அமைத்து தடுத்தனர்.
#WATCH | Shimla Protests | Himachal Pradesh: Water cannons and sloganeering continue as the protestors clash with the police while on their way to the alleged illegal construction of a mosque in the Sanjauli area pic.twitter.com/fuHXO9xGMK
— ANI (@ANI) September 11, 2024
அப்போது தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் சென்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தனர். அத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
- கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
- எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு பதவிக் காலம் முடிந்த பின்பு மாதம் ரூ.36,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
இம்மாநிலத்தில் கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். ஆகவே எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.